Ranipet

News July 10, 2025

ராணிப்பேட்டையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு 2/2

image

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் சேர சொந்தமாக 350 ச.அடி நிலமும், பட்டாவும் இருக்க வேண்டும். சொந்தமாக கான்கிரீட் வீடு இருக்க கூடாது. குடிசை வீடு எனில் ஒரு பகுதி ஓடு/ கான்கீரிட்டாக இருக்க கூடாது. கிராமப்புறத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். அந்த நிலத்தை வணிக நோக்கில் பயன்படுத்தி வந்தால், விண்ணப்பிக்க இயலாது. சொந்த வீடு கனவை நனவாக்கும் சூப்பர் திட்டம் சீக்கிரம் அப்ளை பண்ணுங்க. அப்டியே ஷேர் பண்ணுங்க

News July 10, 2025

ராணிப்பேட்டையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு 1/1

image

ழை எளிய மக்களுக்கு வீடு வழங்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் புதியாக 1 லட்சம் வீடுகள் கட்டபட உள்ளது. இதில் வீடு கட்ட ரூ.3.50 லட்சம் மானியம் வழங்கப்படும். வயதானோர்/ஆதரவற்றோருக்கு அரசே கட்டுமான பணிகளை செய்து தருகிறது. இதற்கான KVVT சர்வே குழுவினர் பயனாளிகளை தேர்வு செய்வர். தனியாக விண்ணப்பிக்க விரும்பினால் ஊராட்சி மன்ற/ ஆட்சியர் அலுவலகத்தை (04172271000) தொடர்பு கொள்ளலாம்.ஷேர் பண்ணுங்க. <<17016550>>தொடர்ச்சி<<>>

News July 10, 2025

விவசாயிகளுக்கு விரைவில் நெல்லுக்கான தொகை கிடைக்கும்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெல்லுக்கான தொகையை வங்கிக் கணக்கிற்கு வராத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4ஆம் தளத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளரை, அலுவலக வேலை நாட்களில் அணுகலாம் என்று கலெக்டர் ஜெ. யூ. சந்திரகலா அறிவித்துள்ளார். மேலும் இதன் மூலம் நெல்லுக்கான தொகை விரைவில் கிடைக்க வழிவகுக்க செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

News July 10, 2025

மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் குறித்த அறிவிப்பு

image

மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், வரும் ஜூலை 15 அன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தை தொடங்கி வைக்கிறார் என்று தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இம்முகாம்கள் அக்டோபர் மாதம் வரை நடைபெறும். முகாம் நடைபெறும் நாட்களில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் முகாமில் மட்டுமே வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

News July 10, 2025

தென்னிந்தியாவின் முதல் ரயில் சேவை

image

தென்னிந்தியாவின் முதல் பயணிகள் ரயில் சேவை 1856 ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று சென்னை ராயபுரத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்தின் வாலாஜா சாலை வரை இயக்கப்பட்டது. இது சுமார் 60 மைல் தூரம் கொண்டது. இது அன்றைய மெட்ராஸ் கவர்னர் ஹாரிஸ் பிரபுவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த முதல் ரயிலில் ஆளுநர் ஹாரிஸ் மற்றும் சுமார் 300 ஐரோப்பியர்கள் பயணித்தனர். வரலாற்றில் ராணிப்பேட்டைக்கு ஒரு சிறப்பு இடத்தைக் கொடுக்கிறது.ஷேர்

News July 10, 2025

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. https://ranipet.nic.in என்ற இணையதள முகவரியில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திற்கான காலி பணியிட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 06.08.2025. ஷேர் பண்ணுங்க.

News July 10, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜூலை.09) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு (9884098100) அழைக்கலாம்.

News July 10, 2025

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 21,000 பேர் எழுதுகின்றனர்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ள குரூப் 4 தேர்வில் 21,000 பேர் தேர்வு எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பயன்பாட்டில் திறக்கவும் டிஎன்பிஎஸ்சி சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு 12.07.2025 (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News July 9, 2025

ராணிப்பேட்டையில் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறைகளை கேட்டறியும் கூட்டம் (ஜூலை 10) நாளை காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இ-பிளாக்கில் முதல் தள கூட்டரங்கில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார். இதில் அனைத்து தொழில் நிர்வாகிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 9, 2025

ராணிப்பேட்டையில் உள்ளூரிலேயே அரசு வேலை அறிவிப்பு

image

தமிழகத்தில் 2229 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளது. இதில், ராணிப்பேட்டையில் மட்டும் 43 பணியிடங்கள் உள்ளன. 10th-ல் தேர்ச்சி/ தோல்வியடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.11,100-ரூ.35,100 வரை சம்பளம் பெறலாம். 10 ஆண்டுகளுக்கு பின் VAO-வாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆக.,4-க்குள் விண்ணப்பிக்கலாம். <>மேலும் தகவலுக்கு<<>> (04162220042)தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க. <<17001770>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!