Ranipet

News December 13, 2024

அரக்கோணம் அருகே ரப்பர் படகு மூலம் 4 பேர் மீட்பு

image

அரக்கோணம் அடுத்த தக்கோலம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் இரண்டு வீடுகள் அமைந்துள்ளன. இரு நாட்களாக பெய்த கனமழையால் இரண்டு வீடுகளையும் மழை நீர் சூழ்ந்துகொண்டது. இதனால் அவர்கள் வெளியே வர முடியாமல் தத்தளித்த நிலையில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் ரப்பர் படகில் இன்று அங்கு சென்று இரண்டு ஆண், இரண்டு பெண், 12 ஆடு, 25 கோழிகளை பாதுகாப்பாக மீட்டனர்.

News December 13, 2024

பேருந்து நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு

image

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ராணிப்பேட்டை ஆர்.காந்தி புதிய பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

News December 12, 2024

ரோந்து பணி போலீசார் தொலைபேசி எண்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( டிச 12 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு, புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100

News December 12, 2024

பொது விநியோக திட்ட சிறப்பு முகாம்

image

பொது விநியோகத் திட்டம் சிறப்பாக நடைபெற ஒவ்வொரு மாதமும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி டிசம்பர் மாதத்திற்கான சிறப்பு முகாம் 14-ம் தேதி சனிக்கிழமையன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் மனு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டுக்கொண்டு உள்ளார்.

News December 12, 2024

ராணிப்பேட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

image

தொடர் கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச.12) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News December 11, 2024

பயிர் மகசூல் போட்டிக்கு விவசாயிகள் பதிவு செய்யலாம்

image

 நெல் உற்பத்தி திறனுக்கான பயிர் மகசூல் போட்டியில் விவசாயிகள் பங்கேற்கலாம் என வேளாண்மை இணை இயக்குனர் அசோக்குமார் தெரிவித்துள்ளார். விவசாயிகள் நெல் சாகுபடி தொழில்நுட்பத்தினை கடைபிடித்து அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படும். இதற்கு தாங்கள் பயிர்சாகுபடி செய்யும் வட்டாரத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

News December 11, 2024

டிராக்டருக்கு அடியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு 60 இவர் குத்தகைக்கு பயிர் வைக்கும் நிலத்தில் நேற்று இரவு டிராக்டரில் உழுது கொண்டிருக்கும் போது, நிலை தடுமாறி டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டருக்கு அடியில் சிக்கி சேட்டு படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News December 11, 2024

டிராக்டருக்கு அடியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

image

நெமிலி தாலுகா அத்திப்பட்டு கிராமம் எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சேட்டு 60 இவர் குத்தகைக்கு பயிர் வைக்கும் நிலத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு டிராக்டரில் உழுது கொண்டிருக்கும் போது, நிலை தடுமாறி டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டருக்கு அடியில் சிக்கி சேட்டு படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சேட்டு உயிரிழந்தார்.

News December 10, 2024

ரோந்து பணி போலீசார் தொலைபேசி எண்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( டிச 10) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

News December 10, 2024

காவல் துறை சார்பாக சர்வதேச மனித உரிமைகள் தினம்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட மக்களுக்கு தினந்தோறும் செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் அதன்படி இன்று வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “சர்வதேச மனித உரிமைகள் தினம்” இன்று கொண்டாடப்படுகிறது. உலக மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் என ராணிப்பேட்டை காவல் துறை செய்தி வெளியிடப்பட்டது.

error: Content is protected !!