Ranipet

News November 6, 2024

ராணிப்பேட்டை எஸ்பி விழிப்புணர்வு

image

இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி அவர்கள் தமது சமூக ஊடக தளங்களில் போதைப்பொருட்கள் உங்கள் பணத்தை மட்டுமல்லாமல் உங்கள் வாழ்க்கையையும் வீணாக்குகின்றன. (SAY NO TO DRUGS) போதைப்பொருள் வேண்டாம் என்று சொல்லுங்கள்’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை கருப்பொருளாக கொண்டு போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள் தங்கள் மனதில் பதிவுசெய்து கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

News November 6, 2024

அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

image

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் வரும் நவ.10 தேதி ராணிப்பேட்டையில் உள்ள NRK திருமண மண்டபத்தில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் அதிமுக நகர ஒன்றிய பேரூர் எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் எஸ்.எம் சுகுமார் தெரிவித்துள்ளார்.

News November 6, 2024

ராணிப்பேட்டையில் குறைதீர்வு நாள் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறை தீர்வு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது காதல் ஜோடி தஞ்சம் கேட்டும், சீட்டு பணம் மோசடி வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை குறித்து மனு கொடுத்தனர்.

News November 6, 2024

14 மின்கல வாகனங்கள் வழங்கினார் அமைச்சர்

image

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் குப்பைகள் சேகரம் செய்து கொண்டு செல்ல ஏதுவாக ரூபாய் 35.56 லட்சம் மதிப்பீட்டிலான 14 மின்கல வாகனங்களை அமைச்சர் ஆர்.காந்தி தூய்மை பணியாளர்களிடம் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News November 6, 2024

விவசாயிகளுக்கு உதவ புதிய திட்டம்

image

விவசாயிகளுக்கான மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘கிசான் கி பாத்’ என்ற திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேளாண் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளுடன் விவசாயிகள் உரையாடலாம். விவசாயிகள் பெரும்பாலும் தகவல் இல்லாததால் பூச்சிக்கொல்லிகளை தவறாகப் பயன்படுத்துகின்றனர். அதற்கான தீர்வு தான் இந்த திட்டம் என இராணிப்பேட்டை அட்மா திட்ட அலுவலர் அசோக் குமார் AO அவர்கள் தெரிவித்தனர்.

News November 6, 2024

ரேஷன் கடைகளில் வேலை: உடனே விண்ணப்பியுங்கள்

image

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 32 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

News November 6, 2024

அங்கன்வாடி மையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

ராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் பேரூராட்சியில் தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் நேற்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் குழந்தைகளின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்து குழந்தைகள் முறையாக வருவதை உறுதி செய்ய வேண்டும் என அங்கன்வாடி மைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News November 5, 2024

ரோந்து பணி போலீசார் தொலைபேசி எண்கள்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (05.11.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

News November 5, 2024

நேரில் சென்று காரணத்தை கேட்டறிந்த ஆட்சியர்

image

விளாம்பாக்கம் பேரூராட்சியில் சின்ன உப்புப்பேட்டை சாலை அருகே பேரூராட்சியின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமையவுள்ள பகுதியில் சாலையோரம் உள்ள நீர்நிலை புறம்போக்கில் குடியிருந்து வரும் 10 இருளர் இன குடும்பத்தினர் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாற்று இடத்திற்கு குடி பெயராமல் இருந்துள்ளனர். இந்தநிலையில், அங்கு சென்ற ஆட்சியர் சந்திரகலா இடம் பெயராதது குறித்து சம்மந்த பட்டவர்களிடம் கேட்டறிந்தார்.

News November 5, 2024

பள்ளி கட்டடத்தினை ஆய்வு செய்த ஆட்சியர்

image

ராணிப்பேட்டை மாவட்டம் விளாம்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 1.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டடத்தினை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஞானசுந்தரம், பேரூராட்சி தலைவர் மனோகரன், உதவி செயற்பொறியாளர் அம்சா, பேரூராட்சி செயல் அலுவலர் அர்ஜுனன், வட்டாட்சியர் பாக்கியலட்சுமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!