Ranipet

News December 16, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( டிச 16 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100

News December 16, 2024

காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் அடிக்கல்

image

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் தைவானின் ஹாங்பூ நிறுவனம் சார்பில் 25 ஆயிரம் பேருக்கு வேலையளிக்கும் ரூ.1500 கோடி  முதலீட்டிலான தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தைவானைச் சேர்ந்த ஹாங் பூ நிறுவனம், தோல் அல்லாத காலணி மற்றும் விளையாட்டுக்கான காலணிகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகும்.

News December 16, 2024

ராணிப்பேட்டை காவல்துறையின் விழிப்புணர்வு செய்தி

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட மக்களுக்கு இன்று (டிச -16) வெளியிடப்பட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில், “குழந்தைக்கு கல்வி தேவை, வளமான வாழ்க்கைக்கு திருமணம் அல்ல. பெண்கள் குழந்தைப் பருவத்திற்கும், கல்விக்கும், தங்கள் எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்திற்கும் தகுதியானவர்கள்.” என ராணிப்பேட்டை காவல் துறை சார்பாக செய்தி வெளியிடப்பட்டது.

News December 16, 2024

ராணிப்பேட்டை உழவர் சந்தையில் காய்கறி நிலவரம்

image

காய்கறி கிலோவில் தக்காளி ரூ 20-30,வெண்டைக்காய் ரூ 40-60,வெங்காயம் ரூ 50-80, சின்ன வெங்காயம் ரூ 70, கத்திரிக்காய் ரூ60, 80,100 புடலை ரூ 30-40,பூசணி ரூ 20, உருளைக்கிழங்கு ரூ 40-60, காலிஃப்ளவர் ரூ 30-40,முள்ளங்கி ரூ 40,கேரட் ரூ 60-80,தேங்காய் ரூ 20-30,பூண்டு 250,380,400,இஞ்சி ரூ 60,100,180,பீட்ரூட் ரூ 70-90, கருணைக்கிழங்கு ரூ 80,சேம கிழங்கு ரூ 60-80,எலுமிச்சை ஒன்று ரூ 10 என விற்பனை செய்யப்படுகிறது.

News December 16, 2024

ராணிப்பேட்டையில் புதிய காலணி ஆலைக்கு அடிக்கல் நாட்டு விழா

image

பனப்பாக்கம் சிப்காட் பகுதியில் காலணி தொழிற்சாலை அமைய உள்ளது. தைவான் நாட்டை சேர்ந்த ஹோங்ஃபு (Hongfu) நிறுவனம் 1500 கோடி முதலீட்டில் காலணி ஆலையை அமைக்கிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது.தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.காலணி ஆலை மூலம் 25,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 16, 2024

ராணிப்பேட்டையில் மழைக்கு வாய்ப்பு

image

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று (16ம்தேதி) நள்ளிரவில் மழை பெய்யத் தொடங்கி அதிகாலையில் தீவிரம் அடையத் தொடங்கும் என்றும், அதன் தொடர்ச்சியாக நாளை மறுதினம் ராணிப்பேட்டையில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

News December 15, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச 15) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100

News December 15, 2024

 தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் 5,349 பேர் பயன்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 5,349 மாணவர்கள் பயன் பெற்றுள்ளதாக இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார். இந்த திட்டமானது 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டமாகும்.

News December 15, 2024

பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை 4 நாட்கள் நிறுத்தம்

image

சோளிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி மலைக்கோவிலுக்கு சில மாதங்களுக்கு முன் ரோப் கார் சேவை தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே பெரும் வரவேற்பு இருப்பதனால் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய சூழலும் நிலவுகிறது. இந்நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக டிச.16 முதல் டிச.19 வரை 4 நாட்கள் “கம்பி வட ஊர்தி (Rope Car) சேவை” இல்லை என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

News December 15, 2024

விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சமுதாய நல்லிணக்கத்திற்கான ‘கபீர் புரஸ்கார்’ விருது, ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்தன்று வழங்கப்படும். நடப்பு ஆண்டிற்கான, ‘கபீர் புரஸ்கார்’ விருதுக்கு, சமுதாய நல்லிணக்க செயல் புரிந்தோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தினை இன்றுக்குள் , https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!