Ranipet

News October 28, 2025

ராணிப்பேட்டையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்

image

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற அக்.30ஆம் தேதி காலை 11 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடக்கவுள்ளது. எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பிரச்சினைகளை களைந்திட கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுப்பிரச்சனைகளை கோரிக்கை வாயிலாகவும் தனிநபர் பிரச்சினைகளை மக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News October 28, 2025

ராணிப்பேட்டை: IT/ டிகிரி முடித்தவர்களா நீங்கள்?

image

மத்திய அரசு உளவுத்துறையில் உள்ள 258 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. IT அல்லது டிகிரி முடிருந்திருந்து , 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ..44,900 – ரூ.1,42,400/- வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நவ-16 க்குள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க

News October 28, 2025

ராணிப்பேட்டை: PHONE தொலைந்தால் இதை பண்ணுங்க!

image

ராணிப்பேட்டை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <>கிளிக் செய்து <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News October 28, 2025

ராணிப்பேட்டை: காவல்துறையின் எச்சரிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ஆறுகள், ஏரிகள், குளங்களில் குழந்தைகள் நீந்தச் செல்வதைத் தவிர்க்குமாறு பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. புதிய இடங்களில் நீராடும் போது உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படும் அபாயம் அதிகம் என்பதால் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 28, 2025

ராணிப்பேட்டை: பள்ளிகள் வழக்கும் போல் இயங்கும்

image

மோன்தா புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 28, 2025) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனினும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை தொடர்ந்த போதிலும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்ற எந்த அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.

News October 28, 2025

ராணிப்பேட்டை: இளைஞர்கள் கவனத்திற்கு!!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது அதற்கான தகுதிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பதிவு தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் உச்சவரம்பு ரூ. 72000/-, கல்வி 10ம் தோல்வி முதல் பட்டப் படிப்பு வரை, விண்ணப்பிக்க மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகவும் என்ற செய்தியை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

News October 28, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (அக்-27) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 28, 2025

ராணிப்பேட்டையில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

நாளை அக்.28 மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை (அக்.28) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தேவையிற்றி வெளியே செல்வதை தவிர்த்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News October 27, 2025

ராணிப்பேட்டை: ரூ.30,000 சம்பளத்துடன் அரசு வேலை!

image

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருந்தால் போதும். ஆரம்பக்கட்ட சம்பளமாக ரூ.30,000 வழங்கப்படும். வயது வரம்பு: 20 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் அக்.29-ம் தேதிக்குள்<> இந்த லிங்கின் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 27, 2025

ராணிப்பேட்டை: G-Pay-யில் பணம் போனால் கவலை வேண்டாம்!

image

ராணிப்பேட்டை: இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!