Ranipet

News March 30, 2025

டிப்ளமோ முடித்தால் போதும் மத்திய அரசு வேலை!

image

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள 391 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிப்ளமோ, ஐடிஐ முடித்திருந்தால் போதும். இதற்கு 18- 30 வயதுடையவர்கள் ஏப்ரல்- 1ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.39,015 முதல் ரூ.68,697 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News March 30, 2025

யூடியூப் சேனல் தொடங்க தமிழக அரசு பயிற்சி

image

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் ‘சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல்’ என்ற 3 நாள் பயிற்சியை நடத்த உள்ளது. வரும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18+ வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம். <>ஷேர் <<>>செய்யுங்கள்

News March 30, 2025

தனியார் பள்ளி வாகனம் மின் கம்பம் மீது மோதி விபத்து 

image

ராணிப்பேட்டை, கலவை அருகே ஸ்ரீ ஜெயம் நாமக்கல் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. நேற்று மாலை பள்ளி பேருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு அனந்தலை நோக்கி பஸ் செல்லும் போது வாலாஜா பூக்கார தெருவில் வேகத்தடையில் நிலைத்தடுமாறி அங்கிருந்த மின் கம்பத்தில் மோதி பஸ் நின்றது. அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு மாணவருக்கும் காயம் ஏற்படவில்லை. விரைந்து வந்த மின்சார ஊழியர்கள் திருத்தமாக செயல்பட்டு பள்ளி வாகனத்தை மீட்டனர்.

News March 30, 2025

குழந்தை பாக்கியம் அருளும் ரத்தினகிரி பாலமுருகன்

image

திருமணிக்குன்றம் அருகே உள்ள ரத்தினகிரி பாலமுருகன் கோயில், மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பழமையான கோவிலாகும். 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் மலை உச்சியில் அமைந்துள்ளது. முருகனே நேரில் வந்து பெண் பக்தருக்கு அருள்புரிந்து குழந்தை பாக்கியம் என்ற அற்புதத்தை நிகழ்த்திய சிறந்த தலம் இதுவாகும். முறைப்பெண்ணும், முறை மாப்பிள்ளையும் பொங்கலுக்கு மறுநாள் இங்கு வருவர். ஷேர் செய்யுங்கள்

News March 30, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று மார்ச் 29 இரவு ரோந்து பணியில் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. சிப்காட் காவேரிப்பாக்கம் ரத்தினகிரி தக்கோலம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம் உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம். 9884098100.

News March 29, 2025

ராணிப்பேட்டையில் சுட்டெரிக்கும் வெயில்- தப்பிக்க சில டிப்ஸ்

image

ராணிப்பேட்டையில் நாளுக்கு நாள் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், அதிலிருந்து தப்பிக்க: 1) 2 மணி நேரத்துக்கு ஒரு டம்ளர் வீதம் (250 மி.லி) நாளொன்றுக்கு 10- 12 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். 2) எளிதில் செரிமானமாகும் உணவுகளை சாப்பிடுங்கள். 3) மது, புகைபிடிப்பதை தவிர்க்கவும். 4) நீர் சத்து நிறைந்த உணவுகளை எடுக்க வேண்டும். 5) வெளியே செல்லும் போது குடை எடுத்து செல்லுங்கள். ஷேர் பண்ணுங்க.

News March 29, 2025

சனி தோஷம் நீக்கும் மங்கள ஸ்ரீ சனீஸ்வரர்

image

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் இருந்து 3கி.மீ தொலைவில் மங்கம்மா பேட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற மங்கள ஸ்ரீ சனீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பே சனீஸ்வரர் திருகல்யாண கோலத்தில் இருப்பதுதான். இன்று சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளதால் விஷேஷ பூஜை நடைபெற உள்ளது. இங்கு வந்து வழிபட்டால் சனி தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க.

News March 29, 2025

‘பெல்’ நிறுவனத்தில் வேலை; ரூ.84,000 சம்பளம்

image

மத்திய அரசின் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தின்(BHEL)பெங்களூர் பிரிவில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியிடங்கள்- 33, வயது வரம்பு: அதிகபட்சம் 32. கல்வி தகுதி: எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ரூமெண்டேசன் ஆகிய பிரிவுகளில் பொறியியல் பட்டப்படிப்பு. திட்ட இன்ஜினியர் பதவிக்கு ரூ.84,000 சம்பளம். இந்த லிங்கை கிளிக் செய்து பதிவு செய்யலாம்

News March 29, 2025

கோடை வெப்பத்தை தணிக்கும் முந்நீர்

image

கோடை காலத்தில் உடல் நீர்ச்சத்து (Dehydration) இழப்பை தவிர்க்க, மக்கள் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக வெப்பம் காரணமாக உடலுக்கு திரவம் குறைவதால், பருகும் தண்ணீர் உடலை குளிர்விக்க உதவும். அதனால், தினமும் போதுமான அளவு நீர் குடிப்பதுடன், இளநீர், பனங்காய், ஆகிவற்றையும் எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

News March 29, 2025

 பணத்திற்கு பதில் பேப்பர் கட்டு; ரூ.5 லட்சம் மோசடி…!

image

ஆந்திரா மாநிலம் சித்தூர் சேர்ந்தவர் ஹனிஃபா. இவர் டெய்லரிங் ஸ்பேர் பார்ட்ஸ் கடையை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த வட மாநில இளைஞர்கள், ஆசை வார்த்தைகளைக் கூறி ராணிப்பேட்டைக்கு வரவைத்து வெளிநாட்டு பணம் கொடுப்பதாக பேப்பர் கட்டுகளை கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி செய்து தப்பி சென்றனர். இதுகுறித்து புகாரின்பேரில்  ராணிப்பேட்டை போலீசார் வட மாநிலத்தைச் சேர்ந்த 6 பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!