Ramanathapuram

News August 12, 2025

BREAKING: பாம்பன் செங்குத்து பாலம் பழுது; 5 ரயில்கள் தாமதம்

image

பாம்பன் செங்குத்து புதிய பாலத்தின் மையப்பகுதியை இன்று மதியம் இயக்கி பார்த்த பின் தண்டவாளம் பிரிவு மீண்டும் இணைய வில்லை. இதனால் ராமேஸ்வரம் – மதுரை சிறப்பு ரயில், ராமேஸ்வரம் – தாம்பரம் அதிவிரைவு ரயில், ராமேஸ்வரம் – சென்னை போர்ட் மெயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மதுரை – ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

News August 12, 2025

இராமநாதபுரம்: இதை SAVE பண்ணிக்கோங்க..!

image

ராமநாதபுரம் மாவட்ட தீயணைப்பு நிலையங்களின் தொலைபேசி எண்கள்:
▶️இராமநாதபுரம் – 04567 230101
▶️ஏர்வாடி – 04576 263266
▶️கமுதி – 04576 223207
▶️மண்டபம் – 04573 241544
▶️முதுகுளத்தூர் – 04576 222210
▶️பரமக்குடி – 04564 230290
▶️ராமேஸ்வரம் – 04573 221273
▶️சாயல்குடி – 04576 04576

News August 12, 2025

ராம்நாடு: VOTER லிஸ்டில் பெயர் இருக்கா? CHECK பண்ணுங்க

image

ராமநாதபுரம் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <>இந்த தளத்தில் <<>>உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து கிளிக் பண்ணவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News August 12, 2025

ராமநாதபுரம் பெண்களே டவுன்லோடு பண்ணிக்கோங்க..!

image

தமிழக காவல்துறை சார்பில் காவல் உதவி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் பொது இடங்களில் ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டாலோ அல்லது அவசர காலங்களில் செயலியில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்தினால், உங்கள் விவரம், இருப்பிடம் ஆகியவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். இதன் மூலம் துரிதமாக உதவி கிடைக்கும். <>இங்கே கிளிக்<<>> செய்து செயலியை டவுன்லோடு பண்ணிக்கோங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News August 12, 2025

ராம்நாடு: இனி வரிசைல நிக்காதிங்க.. எல்லாமே ONLINE!

image

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு போய் நீண்ட நேரம் வரிசைல நின்னு காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி நீங்க <>இங்கு க்ளிக் <<>>செய்து வீட்டில் இருந்தபடியே உங்க வரிகளை செலுத்தவும் முடியம், குறையை புகார் செய்யவும் முடியும்.. மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த உடனே SHARE பண்ணுங்க

News August 12, 2025

ராமநாதபுரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளி மேலாண்மை குழு கூட்டம்!

image

ராமநாதபுரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளி பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நேற்று முத்துப்பேட்டை பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெயந்திமலர் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் நாகநாதன் வரவேற்றார். முதுகலை ஆசிரியர் தமிழரசி, ஆசிரியர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாணவ மாணவியர் கல்வி செயல்பாடு, விடுதி வசதி, சுகாதார வசதி குறித்து விவாதிக்கப்பட்டது.

News August 11, 2025

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் இல்லை

image

காவேரி கூட்டுக்குடி நீர் திட்டத்தில் மாதந்திர மின் பராமரிப்பு பணிகள், கூட்டுக்குடி நீர் திட்ட பராமரிப்பு பணிகள் மற்றும் பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஆகையால் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 12, 13 ஆகிய 2 நாட்கள் காவிரி கூட்டு குடிநீர் விநியோகம் இருக்காது என்று மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News August 11, 2025

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராமநாதபுரம் எம்பி கைது

image

தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை போலீசார் கைது செய்தனர். இதில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனியும் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எம்பி நவாஸ்கனி, பாஜகவின் அரசு ஜனநாயக படுகொலையை, வாக்கு திருட்டை அம்பலப்படுத்துவோம் என்று பதிவிட்டுள்ளார்.

News August 11, 2025

மீனவர்களுக்கு வரும் 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

image

தொண்டி அடுத்த திருப்பாலைக்குடி மீன் பிடிதுறைமுகத்தில் இருந்து நாட்டுப்பாடகில் மீன்பிடிக்க சென்ற 4 பேர் கடந்த 6ஆம் தேதி கச்சத்தீவில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று மீனவர்களின் வழக்கு 2ஆவது முறையாக ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்களுக்கு வரும் 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து உத்தரவுவிட்டார்.

News August 11, 2025

ராமநாதபுரத்தில் கஞ்சா வழக்கு: 3 பேர் மீது குண்டாஸ் – எஸ்பி தகவல்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக 109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 306 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. 190 பேர் கைது செய்யப்பட்டு, 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. கடத்த முயன்ற 185 கிலோ கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது. மேலும், 152 வழக்குகளில் 747 கிலோ கஞ்சா மே16 அன்று அழிக்கப்பட்டதாக எஸ்பி சந்தீஷ் தெரிவித்தார்.

error: Content is protected !!