India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாம்பன் செங்குத்து புதிய பாலத்தின் மையப்பகுதியை இன்று மதியம் இயக்கி பார்த்த பின் தண்டவாளம் பிரிவு மீண்டும் இணைய வில்லை. இதனால் ராமேஸ்வரம் – மதுரை சிறப்பு ரயில், ராமேஸ்வரம் – தாம்பரம் அதிவிரைவு ரயில், ராமேஸ்வரம் – சென்னை போர்ட் மெயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மதுரை – ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட தீயணைப்பு நிலையங்களின் தொலைபேசி எண்கள்:
▶️இராமநாதபுரம் – 04567 230101
▶️ஏர்வாடி – 04576 263266
▶️கமுதி – 04576 223207
▶️மண்டபம் – 04573 241544
▶️முதுகுளத்தூர் – 04576 222210
▶️பரமக்குடி – 04564 230290
▶️ராமேஸ்வரம் – 04573 221273
▶️சாயல்குடி – 04576 04576
ராமநாதபுரம் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
தமிழக காவல்துறை சார்பில் காவல் உதவி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் பொது இடங்களில் ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டாலோ அல்லது அவசர காலங்களில் செயலியில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்தினால், உங்கள் விவரம், இருப்பிடம் ஆகியவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். இதன் மூலம் துரிதமாக உதவி கிடைக்கும். <
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு போய் நீண்ட நேரம் வரிசைல நின்னு காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி நீங்க <
ராமநாதபுரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளி பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நேற்று முத்துப்பேட்டை பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெயந்திமலர் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் நாகநாதன் வரவேற்றார். முதுகலை ஆசிரியர் தமிழரசி, ஆசிரியர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாணவ மாணவியர் கல்வி செயல்பாடு, விடுதி வசதி, சுகாதார வசதி குறித்து விவாதிக்கப்பட்டது.
காவேரி கூட்டுக்குடி நீர் திட்டத்தில் மாதந்திர மின் பராமரிப்பு பணிகள், கூட்டுக்குடி நீர் திட்ட பராமரிப்பு பணிகள் மற்றும் பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஆகையால் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 12, 13 ஆகிய 2 நாட்கள் காவிரி கூட்டு குடிநீர் விநியோகம் இருக்காது என்று மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை போலீசார் கைது செய்தனர். இதில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனியும் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எம்பி நவாஸ்கனி, பாஜகவின் அரசு ஜனநாயக படுகொலையை, வாக்கு திருட்டை அம்பலப்படுத்துவோம் என்று பதிவிட்டுள்ளார்.
தொண்டி அடுத்த திருப்பாலைக்குடி மீன் பிடிதுறைமுகத்தில் இருந்து நாட்டுப்பாடகில் மீன்பிடிக்க சென்ற 4 பேர் கடந்த 6ஆம் தேதி கச்சத்தீவில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று மீனவர்களின் வழக்கு 2ஆவது முறையாக ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்களுக்கு வரும் 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து உத்தரவுவிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக 109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 306 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. 190 பேர் கைது செய்யப்பட்டு, 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. கடத்த முயன்ற 185 கிலோ கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது. மேலும், 152 வழக்குகளில் 747 கிலோ கஞ்சா மே16 அன்று அழிக்கப்பட்டதாக எஸ்பி சந்தீஷ் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.