India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி மெஹ்பூப் அலி கான் அறிவுறுத்தல் படி தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு வழிகாட்டல் படி, சிறை லோக் அதாலத் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலர் பிரசாத், நீதிபதி பிரபாகரன் தலைமையில் ராமநாதபுரம் சிறையில் நடந்த 3 அமர்வுகளில் 22 பேர் பங்கு பெற்றனர். இதில் 6 பேருக்கு வெளியே செல்லும் அனுமதி வழங்கப்பட்டது.
ஹூப்ளி- ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் (வ.எண் : 07355) ஜன.4, 2025 முதல் ஜூன் 28, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் – ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில் (வ.எண் : 07356) ஜன.5, 2025 முதல் ஜூன் 29, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 வாரம் மட்டும் எஞ்சியுள்ளதால் ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை துவங்கப்படலாம் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவ சாகுபடி பயிர்களுக்கு தேவையான யூரியா 2,510 மெ.டன், டிஏபி 389 மெ.டன், பொட்டாஷ் 313 மெ.டன், காம்ப்ளக்ஸ் 1,580 மெ.டன் உரங்கள் இருப்பு வைத்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சம்பா பருவத்திற்கு தூத்துக்குடியிலிருந்து 891 மெ.டன் யூரியா உர மூடைகள் பெறப்பட்டு ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி இன்று சந்தித்தார். பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரை சூட்ட வேண்டும், சென்னை – ராமேஸ்வரம் இடையே பகல் நேர ரயில் இயக்க வேண்டும், தங்கச்சிமடம் ரயில்வே ஸ்டேஷனை மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை நவாஸ் கனி எம்பி அளித்தார்.
மண்டபம் தென் கடலில் தொழிலுக்கு செல்லும் விசைப்படகுகளுக்கு நாளை (டிச.19) மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்படும். கடலுக்கு செல்லும் மீனவர்கள் உயிர் காப்பு மிதவை, படகு பதிவு, காப்பீடு சான்று, மீன்பிடி உரிமம், மீனவர் அடையாள அட்டை, ஆதார் கார்டு ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் உரிமையாளர்கள் தயாரிக்கும் பொருட்கள், கடைகளில் வாங்கும் எலக்ட்ரானிக் பொருட்கள், உடைகள், காபி, டி தூள், இதர பொருட்களில் ஏதேனும் விலை உயர்ந்த நிறுவன பெயர்களை கொண்ட போலியான பெட்டிகள், பைகள், சின்னம் பொறிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து தெரிந்தால் பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் ராமநாதபுரம் சிறப்பு சார்பு காவல் ஆய்வாளர் தொலைபேசி எண் 9498188455 அழைத்து தகவல் தெரிவிக்கலாம்.
பொதுமக்கள் மற்றும் உரிமையாளர்கள் தாங்கள் வாங்கும் பொருள்களான டீத்தூள் சோப்புத்தூள் ஆடைகள் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இதர பொருட்கள் எதுவாயினும் விலை உயர்ந்த கம்பெனியின் பெயர் போலியாக அச்சிடப்பட்டிருந்தாலோ அல்லது வேறு ஒரு கம்பெனியின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தாலோ அதற்கான உரிய ஆவணங்களுடன் ராமநாதபுரம் சிறப்பு சார்பு காவல் ஆய்வாளர் தொலைபேசி எண் 9498188455 அழைத்து தகவல் தெரிவிக்கலாம்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் (21.12.2024) சனிக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணி அளவில் ராமநாதபுரம் முஹம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வினாடி வினா போட்டி நடைபெற உள்ளது.அலுவலகம்,பள்ளி, கல்லூரியில் பணி புரியும் அடையாள அட்டையினை கொண்டு வந்தால் மட்டும் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் மூன்று பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் டிச.23 அன்று அஷ்டமி பூப்பிரதட்சணத்தையொட்டி அன்று நடையடைக்கப்பட உள்ளது. டிச.,23 இல் அஷ்டமி பூப்பிரதட்சணத்தையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறந்து 3:30 முதல் 4 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், இதனைத் தொடர்ந்து கால பூஜை நடக்கும். எனவே காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வருவதை தவிர்த்து கொள்ளவும்.
இன்று (17.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்கள் அல்லது 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.