Ramanathapuram

News November 21, 2024

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி

image

உலக மீன்வள தினத்தையொட்டி அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கான “மீன்வளம் காப்போம், பாதுகாப்பான முறையில் மீன் பிடிப்போம்” என்ற தலைப்பில் மோர் பண்ணை, சோழியக்குடி, தாமோதரன்பட்டினம் அரசுப்பள்ளிகளில் இன்று ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் பெற்ற மாணவர்களுக்கு முதல், 2-ம், 3-ம் பரிசுகளை மீன்வளத்துறை துணை இயக்குனர் வழங்கினார். இதில் ராமநாதபுரம் வடக்கு மீன்வள உதவி இயக்குனர் கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News November 21, 2024

ராமநாதபுரத்திற்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பு

image

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News November 21, 2024

ராமநாதபுரத்தில் 1,834.80 மில்லி மீட்டர் மழை பதிவு!

image

ராமநாதபுரம் முழுவதும் நேற்று கன மழை பெய்தது. இதன்படி இன்று(நவ.,21) காலை 6 மணி நிலவரப்படி ராமேஸ்வரம் 438, தங்கச்சிமடம் 338, பாம்பன் 280, மண்டபம் 271.20, ராமநாதபுரம் 125.60, கடலாடி 73.20, வாலிநோக்கம் 65.60, பள்ளமோர்குளம் 50.70, முதுகுளத்தூர் 49, கமுதி 49.20, பரமக்குடி 25.60, ஆர்.எஸ்.மங்கலம் 14.90, வட்டாணம் 12.80, திருவாடானை 12.80, கொண்டி 7.80 என மாவட்டம் முழுவதும் 1,834.80 மி.மீ மழை பெய்துள்ளது.

News November 21, 2024

லீவ் குறித்து தலைமை ஆசிரியர் முடிவெடுக்கலாம்!

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(நவ.,21) பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் முதன்மை கல்வி அலுவலர் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நேற்று முதலே ராமநாதபுரத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News November 21, 2024

ராமநாதபுரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

image

திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உட்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 7 முதல் 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் முன்னெச்சரிக்கையுடன் வெளியே செல்வது நல்லது. SHARE IT.

News November 20, 2024

இரவு ரோந்து அதிகாரியின் விவரம் வெளியீடு

image

இன்று (20.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்கள் அல்லது 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 20, 2024

மாலை 4 மணி நிலவரப்படி 1,641 மிமீ மழை பொழிவு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 6  மணி முதல் மாலை 4 வரை ராமேஸ்வரம் 411, தங்கச்சிமடம் 322, மண்டபம் 261, பாம்பன் 237, ராமநாதபுரம் 75, கடலாடி 71.20, வட்டாணம் 65.60, முதுகுளத்தூர் 48.20, கமுதி 45.80, பள்ளமோர்குளம் 45. 20, பரமக்குடி 25.60, திருவாடானை 11.80 என மாவட்டம் முழுவதும் 1,641.80 மிமீ மழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான பகுதியில் இருந்த குடிசைகளை மழை நீர் முழுவதுமாக சூழ்ந்தது.

News November 20, 2024

பாம்பனில் மேக வெடிப்பால் மிக கனமழை

image

ராம்நாடு மாவட்டம் பாம்பனில் மிகக்குறுகிய இடத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு மிக கனமழை பெய்துள்ளது. மேகவெடிப்பால் பகல் 11.30 மணி முதல் 2.30 மணி வரை பாம்பனில் 19 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மிக குறுகிய இடத்தில் வலுவான மேக கூட்டங்களால் மேக வெடிப்பு நிகழ்ந்து கனமழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News November 20, 2024

ராமநாதபுரத்திற்கு ரெட் அலர்ட் அறிவிப்பு

image

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில், தமிழகத்தின் அநேக பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் நாளை காலை 9 மணி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன் ராமநாதபுரத்தில் அதிகனமழைக்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News November 20, 2024

பரமக்குடி பாலியல் வன்கொடுமை வழக்கு ஒத்திவைப்பு

image

பரமக்குடியில் 9 ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நகர்மன்ற உறுப்பினர் சிகாமணி
உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சிகாமணி சிறையில் உள்ளார். இந்நிலையில் 5 பேரும் திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் நவ.27 ல் மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

error: Content is protected !!