Ramanathapuram

News December 29, 2024

பீரோ விழுந்து சிறுவன் பலி

image

ராமநாதபுரம், நம்புதாளையைச் சேர்ந்த விஜய் மகன் 6ம் வகுப்பு படிக்கும் மனோஜ்(12) . மனோஜ் டிச.,26 மதியம் மணிக்கு, அவரது மாமா நாகேந்திரன் வீட்டிற்கு விளையாட சென்றார். வீட்டில் ஜன்னல், பீரோ இரு பக்கமும் கயறு கட்டி ஊஞ்சல் விளையாடியபோது பீரோ சிறுவன் மீது விழுந்தது. இதில், காயமடைந்த சிறுவன் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 28, 2024

அமைச்சரை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற நகர் மன்ற தலைவர்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (டிச,29) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று (டிச,28) இராமநாதபுரம் வருகை தந்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் ஆர்.கே கார்மேகம் இல்லத்திற்கு வருகை தந்தார். அப்போது நகர் மன்ற தலைவர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். உடன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News December 28, 2024

ராமநாதபுரத்தில் மாரத்தான் போட்டி அறிவிப்பு 

image

இராமநாதபுரத்தில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பெயரில் நெடுந்தூர ஓட்டப்போட்டி 2025 ஜன.,5ல் பட்டணம்காத்தான் இசிஆர் 4 வழிச்சாலையில் 2 பிரிவுகளில் நடைபெற உள்ளது. 17 முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ, பெண்களுக்கு 5 கி.மீ., (ம) 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ, பெண்களுக்கு 5 கி.மீ., நெடுந்தூர ஓட்டப்போட்டி நடக்கிறது. விளையாட்டு அலுவலகத்தில் ஜன.4 மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.

News December 28, 2024

ராமநாதசுவாமி கோயிலில் நடிகர் சசிகுமார் சாமி தரிசனம் 

image

ராமநாதபுரம், ராமேஸ்வரத்தில் நடிகர் இயக்குனர் தாயாரிப்பாளருமான சசிகுமார் இரண்டு நாள் படப்பிடிப்புக்கு வருகை தந்து படப்பிடிப்பு முடித்து இன்று(டிச.28) ராமேஸ்வரத்தில் ஶ்ரீ ராமநாதசுவாமி ஆலயத்தில் மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு தரிசனம் செய்து ஆலயத்தில் இருந்து பக்தர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்றார்.

News December 28, 2024

குலுக்கல் சீட்டு என்ற பெயரில் பெண்ணிடம் மோசடி

image

ராமநாதபுரம் திருப்பாலைக்குடியைச் சேர்ந்த ரகுமத்நிஷா. இவரிடம் வண்டிக்காரத்தெருவில் பர்னிச்சர் கடை நடத்தும் கண்ணன் என்பவர் குலுக்கல் சீட்டு நடத்திகிறேன் என கூறியதை நம்பிய ரகுமத் நிஷா பணம் கட்டியுள்ளார். மேலும் 321 பேரை சேர்த்துள்ளார். சீட்டு பணம் ரூ.27 லட்சத்து 37 ஆயிரம் வரை கண்ணன் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து எஸ்.பி அலுவலகத்தில் ரகுமத் நிஷா புகார் அளிக்க, கண்ணனை நேற்று கைது செய்தனர்.

News December 28, 2024

கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையம்

image

ராமநாதபுரம் நகர்மன்ற கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் அஜிதா பர்வீன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய பஸ் நிலையத்திற்கு டாக்டர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு ஒருங்கிணைந்த பஸ் நிலையம் என பெயர் சூட்ட தீர்மானம் கொண்டுவரப்பட்டது. *ஷேர்*

News December 28, 2024

இராமநாதபுரம் வரும் கனிமொழி எம்பி

image

இராமநாதபுரம் மாவட்டம், பட்டிணம்காத்தான் ஜங்ஷன் அருகே நாளை(டிச.29) மாலை 4 மணிக்கு முகவை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் மாவட்ட, மாவட்ட துணை, தொகுதி, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் நிர்வாகிகளுக்கான ஆய்வுக்கூட்டம் மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகின்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கனிமொழி கருணாநிதி எம்பி நாளை இராமநாதபுரம் வருகை தருகிறார்.

News December 27, 2024

ECR சாலையில் மிதிவண்டி போட்டி 

image

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு  மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு இராமநாதபுரம் பட்டிணம்காத்தான் ECR நான்குவழிச்சாலை பிரிவில் ஜன.04 அன்று காலை 6 மணிக்கு 13 வயதிற்குட்பட்ட மாணவருக்கு 15 கிமீ, மாணவிக்கு 10 கிமீ, 15,17 வயதிற்குட்பட்ட மாணவருக்கு 20 கிமீ, மாணவிக்கு 15கிமீ மிதிவண்டி போட்டி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் Bonafied, ஆதார், வங்கி புத்தக நகல், மிதிவண்டி கொண்டு வர வேண்டும்.

News December 27, 2024

கால்க்காணை தடுப்பூசி முகாம் அறிவிப்பு

image

இராமநாதபுரத்தில் கால்நடைகளை தாக்கும் கால்க்காணை மற்றும் வாய்காணை நோயினை கட்டுப்படுத்த தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் கால்க்காணை மற்றும் வாய்க்காணை நோய் தடுப்பூசிப் பணிகள் 6 ஆவது சுற்று 03.01.2025 முதல் 31.01.2025 வரையிலும் நடைபெற உள்ளது. கால்நடை வளர்ப்போர்கள் தங்களது மாட்டினங்களை அவர்களது கிராமங்களில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி போட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

News December 27, 2024

இராமநாதபுரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

பர்மா மற்றும் இலங்கையில் இருந்து தாயகம்(தமிழகம்) திரும்பியவர்கள் வங்கி உள்ளிட்ட பிற அரசு நிறுவனங்களில் அடமானமாக வைத்த வீடு, பாஸ்போர்ட், நில ஆவணங்களை திருப்பி அவர்களுக்கே ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே தகுதியுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அல்லது தாங்கள் கடன் பெற்ற வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!