Ramanathapuram

News August 13, 2025

ராம்நாடு: ஏமாறாமல் வெளிநாடு செல்ல வாய்ப்பு!

image

ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்கள் வெளிநாடு வேலைவாய்ப்புகளைப் பெற மாவட்ட நிர்வாகம் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்களை வெளியிட்டுள்ளன. போலி ஏஜெண்டுகளால் யாரும் ஏமாறாமல் இருக்க, அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த ஏஜென்ட்களைத் தொடர்பு கொண்டு, பாதுகாப்பாக நல்ல வேலைவாய்ப்புகளை பெறலாம். ஏஜென்ட்கள் விவரம் பெற <>இங்கே க்ளிக் <<>>செய்யவும். இப்பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News August 13, 2025

ராமேஸ்வரத்தில் 5,000 மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

image

ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படையினரால் மீனவர்களும் அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுவதைக் கண்டித்து, மத்திய மாநில அரசுகளின் உரிய நடவடிக்கை கோரி, மூன்று நாட்களாக மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நாளொன்றுக்கு ரூ.10 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படுவதுடன், 5000 மீனவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வருமான இழப்பு ஏற்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

News August 13, 2025

ராமநாதபுரம்: ரூ.25 லட்சம் மதிப்பிலான 100 செல்போன்கள் மீட்பு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2025-ம் ஆண்டில் செல்போன் காணாமல் போனது தொடர்பாக காவல் நிலையங்களில் பதிவான புகார்களின் அடிப்படையில், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 100 செல்போன்கள் மீட்கப்பட்டன. இன்று (ஆகஸ்ட்-13) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், எஸ்.பி. ஜி.சந்தீஷ் மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

News August 13, 2025

ராமநாதபுரம்: செல்போனை தொலைப்பவரா நீங்கள்..!

image

மத்திய அரசு ‘சஞ்சார் சாதி’ எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோசடி, தொலைந்து போன அல்லது திருடு போன, மொபைல் இணைப்புகளை கண்டறிய, டிஜிட்டல் மோசடி குறித்து இந்த <>APP<<>>-ல் புகார் அளிக்கலாம். இந்த ஆப்மூலம் திருடு போன லட்சக்கணக்கான போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும், மோசடிகளுக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த APP நம் எல்லாருக்கும் மிக மிக அவசியம். உடனே இந்த லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் பண்ணுங்க.!

News August 13, 2025

சிறையில் உள்ள மீனவர்களை மீட்க சட்டமன்ற உறுதிமொழி குழுவிடம் மனு

image

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து, அவர்களின் படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்த சட்டமன்ற உறுதிமொழி குழுத் தலைவர் வேல்முருகனிடம், நாட்டுப்படகு மீனவர் சங்கப் பிரதிநிதி சேனாதிபதி சின்னத்தம்பி, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தார்.

News August 13, 2025

ராமநாதபுரம்: நாளை எங்கெல்லாம் மின்தடை தெரியுமா..!

image

110/33-11 KV மண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை (ஆக-14) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்காயர் பட்டிணம், மண்டபம், பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம், அரியாங்குண்டு, ராமேஸ்வரம், வடகாடு, வேர்க்கோடு, புதுரோடு, சம்பை, ஓலைக்குடா ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியம் அறிவிப்பு. *ஷேர்

News August 13, 2025

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

(12.08.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். திருவாடானை கீழக்கரை பரமக்குடி ராமநாதபுரம் ராமேஸ்வரம் முதுகுளத்தூர் கமுதி உள்ளிட்ட பகுதிகளில் அவசர தொடர்புக்கு மேற்கண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 13, 2025

ராமநாதபுரம்: இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்

image

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, சார்பில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு, பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையை தொடர்புகொண்டு உதவி பெறலாம்.

News August 12, 2025

ராமேஸ்வரத்திற்கு கூடுதல் ரயில்கள் இயக்க வாய்ப்பு

image

ராமேஸ்வரத்திற்கு வரும் அனைத்து மின்சார ரயில்களும் திருச்சி மற்றும் மதுரையில் டீசல் இன்ஜின்களாக மாற்றப்பட்டு பின் அனுப்பப்படுகிறது. தற்போது ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே பாதையில் மின் கம்பங்கள் அமைக்கும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து நேரடியாக மின்சார ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

News August 12, 2025

BREAKING: பாம்பன் செங்குத்து பாலம் பழுது; 5 ரயில்கள் தாமதம்

image

பாம்பன் செங்குத்து புதிய பாலத்தின் மையப்பகுதியை இன்று மதியம் இயக்கி பார்த்த பின் தண்டவாளம் பிரிவு மீண்டும் இணைய வில்லை. இதனால் ராமேஸ்வரம் – மதுரை சிறப்பு ரயில், ராமேஸ்வரம் – தாம்பரம் அதிவிரைவு ரயில், ராமேஸ்வரம் – சென்னை போர்ட் மெயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மதுரை – ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!