India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் வருவாய் கோட்ட அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், ஆகஸ்ட் 19, 2025 அன்று மாலை 4 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து துறை அலுவலர்களும், விவசாய பெருமக்களும் கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சிம்ரன் சித் சிங் அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தங்கள் தேவைகள் மற்றும் சேவைகளை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால், நகராட்சி சேவைகள் மற்றும் பணிகள் குறித்த புகார்களை 81483 30065 என்ற உதவி எண்ணிற்கு அழைத்து நேரடியாக தெரிவிக்கலாம் என நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். *இதை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க அவசியம் உதவும்*
பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட சமூக நல அலுவலரை 04567-
230466 அணுகவும். எல்லோருக்கும் SHARE செய்யவும்.
நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி,ராமநாதபுரம் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 04567-230466-ஐ அலுவலக நேரங்களில் அழைத்து புகாரளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயிரவைசிய சமூகநலச்சங்கம், கடலாடி வட்டாரம்
அ.புனவாசல் செயலக கட்டடம் ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. பரமக்குடியில் நடைபெறும் முகாமில் அப்பகுதி மக்கள் பங்கேற்று கோரிக்கை மனு அளித்து பயன் பெறலாம். இத்தகவலை கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
இன்று (13.08.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். திருவாடானை கீழக்கரை பரமக்குடி ராமநாதபுரம் ராமேஸ்வரம் முதுகுளத்தூர் கமுதி உள்ளிட்ட பகுதிகளில் அவசர தொடர்புக்கு மேற்கண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 15.08.2025 அன்று நாடு முழுவதும் சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று ஆணையரின் அறிவுறுத்தலின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 19.08.2025 செவ்வாய்க்கிழமை அன்று மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். இதில், மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது பகுதியின் குறைகளை மனுக்களாகவும் நேரிலும் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ராமநாதபுரம் மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய <
கமுதியில் நபர் ஒருவர் வாரிசு சான்றிதழ் பெற ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். இதற்கு விஏஒ பிரேமானந்த் தனக்கு நான்காயிரம் பணம் வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த நபர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய ரூபாயை விஏஒவிடம் கொடுக்கும் பொழுது, கையும் களவுமாக பிடிபட்டார். இடைத்தரகரும் கைது செய்யப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.