India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடை விடுமுறை துவங்கியதால் தொண்டி கடற்கரைக்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மீன்பிடி படகுகளில் சில மீனவர்கள் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக பெற்றுக் கொண்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். ஒரு படகில் 20-க்கும் மேற்பட்டோர் செல்வதால் ஆபத்து ஏற்படுகிறது. இதனால் மரைன் காவல்துறையினர் சுற்றுலா பயணிகளை படகில் ஏற்றிச் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை “1800 599 1500” இந்த கட்டணமில்லா இலவச நமபரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என அரசுபோக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE
இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதாந்திர தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 25-04-2025 அன்று காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாமில் 20 முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இம்முகாமில் 10th, 12th, ITI, Degree ஆகிய கல்வித் தகுதி உடைய வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம், <
தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு இடையிலான ஆமை முட்டைகள் பொரிப்பகம் அருகே கடற்கரையோரம் சாக்கு மூட்டைகள் இருப்பதைக் கண்ட கடற்கரை பாதுகாப்பு குழும போலீசார், அதனை சோதித்த போது, அதில் 314 கிலோ பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், பீடி இலைகளை இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. பின்னர், அவை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இன்று (ஏப்ரல் 21) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
இராமநாதபுரம் எம்பி நவாஸ்கனியின் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இன்று ஏப்.21 பன்னீர் செல்வத்தின் தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டுமென நவாஸ்கனி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கார்த்திகேயன், நவாஸ்கனியின் மனுவை தள்ளுபடி செய்து ஜூன்.16 தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். பல்வேறு கோரிக்கைகள் குறித்து 499பேர் மனு அளித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, துணை ஆட்சியர் (பயிற்சி) கோகுல்சிங், சமூக பாதுகாப்புத்திட்டம் தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இராமநாதபுரம் மாவட்ட பகுதிகளின் வட்டாட்சியர்கள் தொலைபேசி எண்கள்
கடலாடி – 04576-266558
கமுதி – 04576-223235
முதுகுளத்தூர் – 04576-222223
பரமக்குடி – 04564-226223
ஆர்.எஸ் மங்கலம் – 04561-299699
திருவாடனை – 04561-254221
கீழக்கரை – 04567-241255
இராமேஸ்வரம் – 04573-221252
தாசில்தார் இராமநாதபுரம் – 04567-220352
பிறரும் பயன் பெற *SHARE* பண்ணுங்க
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சேமிப்பு கிட்டங்கியை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் கோட்டாட்சியர் ராஜ மனோகரன், தேர்தல் தாசில்தார்கள் காளீஸ்வரன் ரவி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஏப்.21) முதல் மூன்று நாட்களுக்கு மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் பிற்பகல் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் குறிப்பாக பரமக்குடி, அபிராமம், கமுதி, பார்த்திபனூர், முதுகுளத்தூர் மேற்கு பகுதி, சத்திரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என ராமநாதபுரம் காலநிலை அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.