India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து உரிய அனுமதி சீட்டு பெற்று விசைப்படகுகளில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அப்போது நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 11 பேரை கைது செய்தனர். அதோடு ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்து மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றன.
திருச்சியில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு பாம்பனில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து அதிகாரிகள் கடற்கரை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்ட நிலையில் ஜீவா(30), ஜென்சி(24) ஆகியோரிடம் ரூ.1 கோடி மதிப்பிலான 2 கிலோ ஐஸ் என்னும் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் கைது செய்து திருச்சிக்கு கொண்டு சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களில் விளையாட்டு துறையில் சாதித்து வருபவர்கள் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறப்பு நிலை விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம். சிறப்பு நிலை விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விடுதியில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து ஏப்.,6ம் தேதி 5 மணிக்குள் பதியவும்.
பத்தாம் வகுப்பு அரசு பொத்தேர்வுகள் நாளை மறுநாள் (மார்ச்.28) துவங்க உள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 16,412 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக 82 மையங்களில் அடிப்படை வசதிகளுடன் முன்னேற்பாடுகள் நடக்கின்றன. 860 பேர் தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு காலை 10 முதல் மதியம் 1:15 மணி வரை நடக்கிறது. 24 மணி நேரம் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(மார்ச்.26) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
ரூ.535 கோடியில் உருவான பாம்பன் ரயில் பாலம் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று, 2 மாதங்களுக்கு மேலாக திறப்பு விழாவிற்கு காத்திருக்கிறது. புதிய ரயில் பாலம் இம்மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என பெரும் எதிர்பார்ப்பில் இருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது, பாம்பன் செங்குத்து தூக்கு பாலத்தை ஏப்ரல்.6ல் பிரதமர் திறக்க உள்ளார் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் அறிவித்துள்ளார். *ஷேர்
இராமநாதபுரம், போகலுார் – 74029 07610, கடலாடி – 74029 07614, கமுதி – 74029 07613, மண்டபம் – 74029 07606, முதுகுளத்துார் – 74029 07612, நயினார்கோவில் – 74029 07611, பரமக்குடி – 74029 07609, ஆர்.எஸ்.மங்கலம் – 74029 07607, ராமநாதபுரம் – 74029 07604, திருப்புல்லாணி – 74029 07605, திருவாடாணை – 7402907608 எண்களுக்கு வாட்ஸ்ஆப் & 18004257040 எண்ணில் அடிப்படை தேவைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். *ஷேர்
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நகராட்சி நிர்வாக துறையின் மானிய கோரிக்கை விவாதத்தின் பதிலுரையில் அமைச்சர் கே.என் நேரு பேசினார். அப்பொழுது ராமேஸ்வரம் முதல்நிலை நகராட்சியை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தார். ரூ.4 கோடிக்கு மேல், ரூ.6 கோடிக்கு மிகாமல் வருமானம் இருந்தால் அவை முதல் நிலை நகராட்சி, 10 கோடிக்கு மிகாமல் வருமானம் இருந்தால் அவை தேர்வு நிலை நகராட்சியாக வகைப்படுத்தப்படுகின்றன. *ஷேர்
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(மார்ச். 25) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
இராமநாதபுரம் சரக டிஐஜியாக பணியாற்றி வந்த அபினவ் குமார் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டு மதுரை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நெல்லை சரக டிஐஜியாக பதவி வகித்த மூர்த்தி ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டு இராமநாதபுரம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார் என தமிழக உள்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.