Ramanathapuram

News April 24, 2025

மாணவருக்கு இராம்நாடு எம்பி வாழ்த்து

image

ராமநாதபுரம் அரண்மனை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ ரஷத் என்ற மாணவர் யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று இந்திய அளவில் 52ஆவது இடமும், தமிழக அளவில் 5ஆவது இடமும் பெற்று இராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில் நேற்று (ஏப்.23) இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, ஸ்ரீ ரஷத்-க்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

News April 24, 2025

இரவு ரோந்து பணி அதிகாரிகள் போன் நம்பர்

image

இன்று (23.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.

News April 23, 2025

மிளகாய்க்கான மதிப்பு சங்கிலி பங்குதாரர் ஆலோசனை கூட்டம்

image

ராமநாதபுரத்தில் மிளகாய்க்கான மதிப்பு சங்கிலி பங்குதாரர் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. வேளாண் வணிக இணை இயக்குநர் அமுதன் தலைமை வகித்தார். வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழக முதுநிலை மேலாளர்கள் பாண்டித்துரை, கவிமுகில், வேளாண் இணை, துணை இயக்குநர்கள் பாஸ்கரமணியன், கோபாலகிருஷ்ணன், வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜெகதீசன், வள்ளல் கண்ணன் உட்பட பலர் ஆலோசனை வழங்கினர்.

News April 23, 2025

கேரளாவில் நடைபெற்ற கூட்டத்தில் இராமநாதபுரம் எம்பி

image

வெளியுறவுத்துறை நாடாளுமன்ற நிலைக்குழு சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக கேரளா மாநிலத்தில் நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது கொச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் RPO மற்றும் பாஸ்போர்ட் சேவை மையம் PSK உள்ளிட்டவைகளை நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் பார்வையிட்டனர். இதில், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் நவாஸ்கனி கலந்து கொண்டார்.

News April 23, 2025

இராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் முகாம்

image

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று (ஏப்.23) நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன் தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News April 23, 2025

ராமேஸ்வரத்துக்கு வாரத்தில் 4 நாள்கள் சிறப்பு ரயில்

image

விழுப்புரம் – ராமேஸ்வரம் இடையே பகல்நேர அதிவேக சிறப்பு ரயில் வாரத்தில் 4 நாள்கள் இயக்கப்பட உள்ளது. மே 2 தேதி முதல் ஜூன் 30 வரை, வாரத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி என 4 நாட்கள் இயங்குது. ராமநாதபுரம், மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாச்சலம் ஆகிய பகுதிகளில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளன. இதை ரயில் பயணம் செய்யும் நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க

News April 23, 2025

ராமநாதபுரம் அங்கன்வாடியில் வேலை ரெடி

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 84 பணியாளர், 3 குறு அங்கன்வாடி பணியாளர், 38 உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பிக்க விரும்புவர்கள் <>கிளிக்<<>> செய்து இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஏப்.23 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும்*ஷேர் பண்ணுங்க

News April 23, 2025

வீட்டின் தடுப்பு சுவரில் கார் மோதியதில் டிரைவர் பலி

image

இராமேஸ்வரம் எம்.ஆர்.டி நகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(47). இராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்று விட்டு வந்து கொண்டிருந்தார். அப்போது தங்கச்சிமடம் அருகே நேற்று அதிகாலை தூக்க கலக்கத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டின் தடுப்பு சுவர் மீது மோதியது. இதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். காயமடைந்த இருவரை மீட்ட போலீசார் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

News April 22, 2025

ராமநாதபுரம் மாவட்ட இரவு நேர ரோந்து பணி விபரம்

image

ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் இன்று (ஏப்.22) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் விவரங்கள் வெளியிட்டுள்ளனர். இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரிகளின் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் புகைப்படத்தில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.

News April 22, 2025

செகந்திராபாத் இரயில் இராமேஸ்வரம் வரை நீட்டிப்பு

image

இராமநாதபுரம் – செகந்திராபாத் இடையே இயங்கி வரும் சிறப்பு ரயில் நாளை (ஏப்.23) முதல் இராமேஸ்வரம் வரை நீட்டித்து இயங்க இருக்கிறது. மேலும் வரும் மே மாதம் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வழி – நல்கொண்டா, குண்டூர், ஓங்கோல், நெல்லூர், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம் பல இடங்களில் சிவகங்கை, மானாமதுரை இராமநாதபுரம், இராமேஸ்வரம் வரை நீட்டித்துள்ளனர்.

error: Content is protected !!