India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 பணியிடங்கள் உள்ள நிலையில் மாத ஊதியமாக ரூ.19900 வழங்கப்படும் .இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை rrbchennai.gov.in என்ற ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ராமநாதபுரம் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
ராமேஸ்வரத்தை சேர்ந்த நம்புராஜன் என்பவர் ஒரு மாதத்திற்கு முன்பு மாயமான நிலையில் அவரது அக்காள் ராணி போலீசில் புகார் அளித்தார். இதில் போலீசார் நடத்திய விசாரணையில் 1 மாதத்திற்கு முன்பு நம்புராஜன் அவருடைய நண்பருடன் மது அருந்திய போது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நம்புராஜன் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது நண்பர் நம்புராஜனை கொலை செய்து உடலை புதைத்தது தெரியவந்துள்ளது.
பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் ஆன்மா அமைதி பெற பாஜக சார்பில் ராமநாதபுரத்தில் நேற்றிரவு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நகர் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். மத்திய கயிறு வாரிய முன்னாள் தலைவர் குப்புராமு, மத்திய தென்னை வாரியத்தலைவர் நாகராஜன், கவுன்சிலர் குமார், சிறுபான்மை பிரிவு மாநில செயலர் தலைவர் அஜ்மல்கான், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் குமரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் பள்ளிகளில் ஆண்டு இறுதித் தேர்வு முடிவடைந்தது. கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் பள்ளிகளில் உள்ள ஸ்மார்ட் கிளாஸ், ஹைடெக் லேப் மற்றும் பள்ளியில் உள்ள தளவாடப் பொருட்களுக்கு காவல்துறை மூலம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றி இராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் இன்று (ஏப்ரல் 24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரிகளின் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் புகைப்படத்தில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.
இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இராமநாதபுரம் பாஜக மகளிர் அணி சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் சமூக வலைதளங்களில் பஹல்காம் சம்பவத்தில் இந்திய ராணுவத்தை இழிவு படுத்தியும், பிரதமரை தொடர்பு படுத்தியும் பேசிய சுந்தரவல்லி என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் தெரிவித்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் மாதாந்திர சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (25.04.2025) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை கல்வித்தகுதி 8th/ 10th / +2/ ஐ.டி.ஐ/ டிப்ளமோ/ பட்டப்படிப்பு படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க
விழுப்புரம் – இராமேஸ்வரம் கோடை கால சிறப்பு ரயில் விழுப்புரத்தில் இருந்து அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும். ரயில் வண்டி எண் (06105) காலை 6.35 மணிக்கு திருச்சிக்கும், 7.50 மணிக்கு திண்டுக்கல்லுக்கும், 9.10 மணிக்கு மதுரை வந்தடையும். அங்கிருந்து மானாமதுரை வழியாக ராமேஸ்வரத்திற்கு 11.40 மணிக்கு சென்று சேரும். அதே நாட்களில் (06106) இராமேஸ்வரத்திலிருந்து இரவு 11மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.
முதன்மை கல்வி அலுவலர், இராமநாதபுரம் – 9788858859
மாவட்ட கல்வி அலுவலர்(மேல்நிலை).இராமநாதபுரம் – 9442513965
மாவட்ட கல்வி அலுவலர்(இ.நி), இராமநாதபுரம் -9843334237
மாவட்ட கல்வி அலுவலர்(இ.நி), பரமக்குடி -9080888425
வட்டார கல்வி அலுவலர்கள்:
கடலாடி – 9159953529
ராஜசிங்கமங்கலம் – 6381715110
திருவாடானை – 9442683814
திருப்புல்லாணி – 9442815244
இராமநாதபுரம் – 9443978349
பரமக்குடி- 9486275850
*ஷேர்
வண்டி எண்- 07695 செகந்திராபாத்-இராமேஸ்வரம் இடையே இயங்கி வரும் சிறப்பு அதிவேக இரயில் நேற்று(ஏப்ரல் 23) இரவு 9.10 மணியளவில் அதிவேக இரயில் செகந்திராபாத்திலிருந்து புறப்பட்டு ஏப்.25 காலை 12.15 மணியளவில் இராமேஸ்வரம் வந்தடையும். இந்த சேவை மேலும் வரும் மே மாதம் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. *ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.