Ramanathapuram

News April 8, 2025

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து அதிகாரிகள் 

image

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து அதிகாரிகள் விபர பட்டியல் மற்றும் அலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம், ராமேஸ்வரம், கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, கீழக்கரை மற்றும் திருவாடானை பகுதிகளில் இன்று (ஏப்ரல்.07) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து அதிகாரிகள் மற்றும் அலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு ஹலோ போலீஸ் எண்கள் 83000 31100 (அ) 100ஐ அணுகவும்.

News April 7, 2025

நேர்த்தி கடன் செலுத்த வினோத உடை

image

கமுதி, செங்கப்படை கிராமத்தின் காவல் தெய்வமான அழகு வள்ளியம்மனுக்கு ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா கொண்டாடுவது வழக்கம். இந்த திருவிழாவில் சாக்குகளை பேண்ட் & சட்டை வடிவில் அணிந்து கொண்டு முகத்தையும் மூடிய படி ஊர்வலத்தில் கலந்து கொள்வர். முளைப்பாரி ஊர்வலம் புறப்பட்டபோது கும்மி மேள தாளங்களுடன் சாக்கு ஆடை அணிந்த பக்தர்களும் நடனம் ஆடி செல்வர். இதனை கிராம மக்கள் நேர்த்திகடனாக செலுத்தி வருகின்றனர். *ஷேர்

News April 7, 2025

இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.06) பெய்த மழை அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக பாம்பனில் 24.02 மில்லி மீட்டர், இராமேஸ்வரத்தில் 20 மில்லி மீட்டர், மண்டபத்தில் 17.02 தங்கச்சிமடத்தில் 10.04 மில்லி மீட்டர், முதுகுளத்தூரில் 2 மில்லி மீட்டர், கமுதியில் 02.08 மில்லி மீட்டர், பரமக்குடி 02.04 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. *ஷேர்

News April 7, 2025

தங்கச்சிமடத்தில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம்

image

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகமும் அமைய உள்ளது என முதல்வர் இன்று சட்டசபையில் தெரிவித்துள்ளார். மேலும் ரூ.60 கோடியில் பாம்பன் பகுதியிலும், ரூ.150 கோடியில் குந்துகால் பகுதியிலும் மீன்பிடி துறைமுக பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். உங்க ஊர் திட்டத்தை உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News April 7, 2025

ராமநாதபுர இளைஞர்களுக்கு வேலை ரெடி

image

ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட விற்பனை பிரிவு நிர்வாகி பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 12ம் வகுப்பு படித்திருந்தாலே போதும். மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <>இங்கு கிளிக்<<>> செய்து இந்த மாதம் 16-க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்க.

News April 7, 2025

கத்தியை காட்டி மிரட்டிய போதை ஆசாமி

image

ராமநாதபுரத்தில் ரயில்வே மேம்பால பகுதியில் கத்தியை காட்டி ஒருவர் அப்பகுதி மக்களிடம் பணம் பறித்துள்ளார். இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் போதை ஆசாமியை கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டனர்.பின் மக்களே சேர்ந்து அவரை விரட்டினர். இதனால் அந்த பகுதில் நடமாட மக்கள் அச்சமடைந்துள்ளனர். போலீசார் எதுவும் செய்யாமல் சென்றதால் பொதுமக்கள் போலீசார் மீதும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

News April 7, 2025

இரவு நேர ரோந்து பணி அதிகாரிகளின் விபரம்

image

ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர் இன்று (ஏப்ரல் 6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் . இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரிகளின் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் புகைப்படத்தில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.

News April 6, 2025

பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட தூக்கு பாலம் பழுது

image

ரூ.550 கோடியில் கட்டப்பட்ட புதிய பாம்பன் பால தூக்குப் பாலத்தில் பழுது ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட தூக்கு பாலம் தற்போது பழுதாகி இருப்பதாக வெளி வரும் செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்குத்து பாலம் ஒரு பக்கம் தூக்கியும், இன்னொரு பக்கம் இறக்கமாக இருந்ததால் அதனை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

News April 6, 2025

ராமேஸ்வரம் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்

image

பாம்பன் ரயில் புதிய செங்குத்து பாலத்தை இன்று திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அனுராதாபுரம் விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பாம்பம் வந்தார். பின்னர் பாம்பன் பாலத்தை திறந்து வைத்த மோடி தற்போது ராம நவமியை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்.

News April 6, 2025

உத்தரகோசமங்கை கும்பாபிஷேக விழாவில் 42 பவுன் திருட்டு

image

உத்தரகோசமங்கையில் மங்களநாத சுவாமி சமேத மங்களநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. கோயிலில் நான்கு ரத வீதிகள் மற்றும் தரிசனத்திற்காக நின்ற கோவை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 8 பெண்களிடம் கொள்ளையர்கள் 42 பவுன் நகைகளை திருடிச் சென்றனர்.கழுத்தில் இருந்த செயின் திருடு போனதை அறிந்து பெண்கள் போலீஸ் ஸ்டேஷனில் வரிசையாக புகார் அளித்தனர்.

error: Content is protected !!