India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரப்பன்வலசை கடற்பகுதியில் இருந்து இலங்கைக்குபுகையிலை பொருட்கள் கடத்த உள்ளதாக ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு நேற்றிரவு தகவல் கிடைத்தது. இதன்படி அங்கு சோதனை செய்தபோது 19 பண்டல்களில் இருந்த 3.80 லட்சம் வெளிநாட்டு சிகரெட் (MonChester United Kingdom) பாக்கெட்களை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.3.13 கோடி என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இலங்கைக்கு கடத்த முயன்ற 1,680 கிலோ பீடி இலைகளை இடையர்வலசை சந்திப்பு அருகே ராமநாதபுரம் பஜார் போலீசார் இன்று பறிமுதல் செய்து மண்டபத்தைச் சேர்ந்த சலீம் மாலிக் 35, முஹமது ஹக்கீம் 30 ஆகியோரை கைது செய்தனர். இருவரின் தகவல்படி ராமநாதபுரம் விஜய் ஆனந்த் வீட்டை இன்று சோதனை செய்தனர்.
அவரது வீட்டில் பெட்டிகளில் அடுக்கிய 1,133 கிலோ பீடி இலை, சுறா மீன் துடுப்புகளை பறிமுதல் செய்து விஜய் ஆனந்தை கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் நீண்ட கடற்கரை கொண்ட மாவட்டமாக உள்ளதால் இங்கு மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்நிலையில், ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடம் மற்றும் குந்துகால் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.360 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இன்று (பிப். 18) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், கீழக்கரை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாகளில் நீரினைப் பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதன் புதிய நிர்வாகிகள் தேர்தல் மார்ச் 2ல் நடைபெற உள்ளது. வேட்பு மனுத்தாக்கல் நாளை (பிப்.19) துவங்கி பிப்.21 ல் முடிகிறது. வேட்பு மனுக்கள் பிப்.24 ல் பரிசீலிக்கப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்க நிர்வாகிகள், இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு சங்க நிர்வாகிகள் என்.தேவதாஸ், பாய்வா, ஏ.பி.முருகன், தங்கச்சிமடம் அனைத்து விசைப்படகு நாட்டுப்படகு மீனவர் சங்கத்தின் தலைவர் வி.பி.சேசுராஜா, பொருளாளர் ஆர்.சகாயம், இணைச் செயலாளர் பி.ஆல்வின், பாம்பன் நாட்டுப்படகு மீனவர் நல உரிமைச் சங்கம் சார்பில் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயில் இருக்கும் இடத்தில் ஒரு அரசமரம் இருந்தது. அந்த மரத்திற்கு கீழாக ஒரு வேல் நடப்பட்டு அதற்கு பூஜையும் செய்யப்பட்ட வந்தது.இதற்கு அருகாமையிலேயே நீதிமன்றமும் இருந்துள்ளது.நீதிமன்ற விசாரணைக்கு வருபவர்கள் தங்களது வழக்கு வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிச் செல்வார்கள். சொத்து வழக்குகளில் சிக்கியவர்கள் இந்த முருகனை வழிபட்டு வாழ வழி பெற்றதால் வழிவிடு முருகன் என பெயர் பெற்றது.
இராமநாதபுரம், தேவிபட்டினத்தில் உள்ள நவபாஷணம் என்பது இலங்கையில் போருக்குச் செல்வதற்கு முன்பு ஸ்ரீ ராமர் இங்கு 9 கற்களை வைத்து நவகிரகங்களை வேண்டிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ராமேஸ்வரம் கோயில்களுக்குச் செல்லும் பக்தர்களிடையே இது பிரபலமடைந்து வருகிறது. நவகிரகங்களைக் குறிக்கும் வகையில் 9 கற்கள் கடலுக்குள் காணப்படுகின்றன. பக்தர்கள் சனிதோஷம் நீங்க இங்கு நவதானியத்துடன் பூஜை செய்து வருகின்றனர். *ஷேர்
ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி தனது X தளத்தில்: விகடன் இணையதளம் முடக்கப்பட்டிருப்பது பாஜக அரசின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அராஜக செயல். இந்தியர்களின் கைகளிலும் கால்களிலும் விலங்கிட்டு போர் விமானத்தில் கைதிகளைப் போல அழைத்துவரப்பட்ட போது வராத கோபம், ஒரு பத்திரிக்கை வெளியிட்ட கேலி சித்திரத்தின் மூலம் வருகின்றது என்றால் பாஜக அரசு எப்படிப்பட்டது என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
விகடன் குழுமத்திற்கு ஆதரவாக இராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்: நூறாண்டுகள் பழமையான விகடன் குழுமத்தின் இணையதளம் முடக்கம் கருத்து சுதந்திரத்திற்கு போடப்பட்ட தடையாக கருதுகிறோம். விளிம்பு நிலையில் உள்ள பொது மக்களுக்கு ஆதரவாக கருத்து சுதந்திரம் காத்து நாட்டின் வளர்ச்சிக்கு நான்காவது தூணாக இருக்கும் பத்திரிகை தர்மத்திற்கு இடையூறாக இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
Sorry, no posts matched your criteria.