Ramanathapuram

News March 4, 2025

ராமநாதபுரம் காவல்துறை ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(மார்ச். 04) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News March 4, 2025

ராமநாதபுரம் மாவட்டத்தின் காலநிலை நிலவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையுடன் வெப்பநிலை உயர்ந்து காணப்படும். அடுத்த 5 நாட்களுக்கு பகல் நேர வெப்ப நிலையானது இயல்பை விட 2டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 36டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது என ராமநாதபுரம் காலநிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

News March 4, 2025

ராமநாதபுரத்தின் குஷி கடற்கரை

image

இராமநாதசுவாமி கோவிலில் இருந்து சுமார் 27 கி.மீ தொலைவில் உள்ளது இந்த அரியமான் கடற்கரை (எ) குஷி கடற்கரை. 150 மீ அகலமும், 2 கி.மீ நீளமும் உடைய அரியமான் கடற்கரையில் குறைந்த உயரத்தில் அலைகள் எழும்புவதால், பலரும் விரும்பி குளிக்கின்றனர். மேலும் இந்த கடற்கரையின் சிறப்பே இந்த கடற்கரையில் நீர் தெளிவாக இருக்கும் என்பது தான். இராமநாதபுரத்தின் சிறப்பான இடங்கள் குறித்து நீங்களும் எழுதி அனுப்பலாம். *ஷேர்

News March 4, 2025

தமிழக மீனவர்களுக்கான நிவாரணத்தொகை உயர்த்தி வழங்க உத்தரவு

image

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் விசைப்படகுகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ.6 லட்சம் என்பது ரூ.8 லட்சமாக உயர்த்தியும், சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின ஊதியத்தொகை ரூ. 350லிருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்கவும், மீனவர்களின் பிரச்னை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் மூலம் தீர்வு காண வலியுறுத்தவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். *ஷேர்

News March 4, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (மார். 03) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News March 3, 2025

கமுதி கோட்டையின் வரலாறு

image

17ஆம் நூற்றாண்டில் இராமநாதபுரம் சீமையை ஆண்ட சேதுபதி மன்னர் உடையத்தேவர், பிரான்ஸ் நாட்டு பொறியாளர் உதவியுடன் குண்டாற்றின் கரையில் கமுதி கோட்டையை கட்டினார். அதனால் இப்பகுதி கோட்டை மேடு என்று அழைக்கப்படுகிறது. இக்கோட்டையிலிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பூமிக்கு அடியில் சுரங்கப்பாதை இருந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அதன் வாயிற்பகுதி சிமெண்ட் கற்களால் அடைக்கப்பட்டுள்ளது. *ஷேர் செய்யுங்கள்

News March 3, 2025

அஞ்சல் துறையில் விண்ணப்பிக்க இன்றே கடைசி

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,292 காலிப் பணியிடங்கள் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 48 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.03) கடைசி நாள். <>லிங்கை<<>> கிளிக் செய்து உடனே விண்ணப்பியுங்கள். உங்க நண்பர்களுக்கு SHARE செய்யுங்க.

News March 3, 2025

நகை திருடிய பெண் கைது

image

திருவாடானை சேர்ந்தவர் சின்னப்பொன்னு 25. நேற்று முன்தினம் புதுக்கோட்டையிலிருந்து தொண்டிக்கு பஸ்சில் சென்றார். அவருடைய குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு கிராம் தாயத்து, பர்சிலிருந்த ரூ.5000 திருடு போனது.அப்போது பஸ்சிலிருந்து இறங்கி தப்பிக்க முயன்ற பெண்ணை மற்ற பயணிகள் பிடித்தனர். விசாரணையில் பேராவூரணியை சேர்ந்த தேன்மொழி 55, என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து பணம், நகையை கைப்பற்றினர்.

News March 2, 2025

டிராக்டர் ஓட்டும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் டிராக்டர் ஓட்டும் பயிற்சி மதுரையில் வழங்கப்படுகிறது. 22 நாள் நடைபெறும் இப்பயிற்சியில் 25 பேர் கலந்து கொள்ளலாம். இதில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-45 வயதிற்குள் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94436 77046, 99443 44066 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News March 2, 2025

தங்கச்சிமடத்தில் இரவு வெளுத்து வாங்கிய மழை

image

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இரவு கனமழை பெய்தது. அதில் தங்கச்சிமடத்தில் அதிகளவில் மழை பதிவாகி உள்ளது. அதன் விவரங்கள் மிமீ -ல் பின்வருமாறு, தங்கச்சிமடத்தில் -85.20 மிமீ, பாம்பன் -26.70, ராமேஸ்வரம்- 97.40, ராமநாதபுரம் -15.00, மண்டபம்- 15.20, கீழக்கரை- 2.50, திருவாடானை- 3.80, தொண்டி -2.40, முதுகுளத்தூர் -10, கமுதி- 25.40, கடலாடி-15.20, வாலிநோக்கம்-11மி.மீ மழை பதிவாகியுள்ளது.

error: Content is protected !!