India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பேய் வலை என்றழைக்கப்படும் கழிவு வலைகள், கயிறுகளை நடுக்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் அதனை சேகரித்து கரைக்கு கொண்டு வர நேற்று சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் வேல்விழி, தங்கச்சிமடத்தில் 60 படகுகளின் உரிமையாளர்களுக்கு மரபெட்டிகள் வழங்கினார். இந்நிகழ்வில் மீனவர் சங்கத் தலைவர்கள் சகாயம், எமரிட், ஜாகிர்உசேன், முகமது சுல்தான் உட்பட பலர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற வெள்ளிக்கிழமை 21/2/2025 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. வேலை நாடுனர்கள் ஒரிஜினல் மற்றும் அசல் கல்விச்சான்று, ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் சுய விபர குறிப்புடன் கலந்துகொள்ளலாம். *ஷேர் செய்யுங்கள்
கீழப்பார்த்திபனுாரில் கி.பி.13 or 14ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படும் பட்டீஸ்வரமுடைய அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஒரு கால பூஜை திட்டத்தில் வருகிறது.
கோயிலின் சுற்றுப்பகுதி 6 அடி வரை மண்ணில் புதைந்துள்ளது. இதனை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பின் தொல்லியல் துறை சார்பில் புதைந்த கோயிலின் பகுதிகளை மண் அள்ளும் இயந்திரம் மூலம் தோண்டி எடுக்கின்றனர்.
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவிலில் மாசி மகா சிவராத்திரியின் மூன்றாம் நாளான இன்று(பிப்.20) அதிகாலை 4 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெறும். அதனைத்தொடர்ந்து சாயரட்சை பூஜை நடைபெற்று பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி அம்பாள் கெந்தமாதன மண்டகபடிக்கு புறப்பாடு ஆனவுடன் காலை 7 மணிமுதல் இரவு 10 மணிவரை கோவில் நடை சாத்தப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர்
இன்று (பிப்.19) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
இராமநாதபுரம் சிகில் ராஜா வீதியில் விவேகானந்தர் நினைவு தூண் உள்ளது. சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடைபெற்ற சர்வமய மாநாட்டில் கலந்து கொண்ட பின் 29.01.1897 அன்று மாநாட்டில் இருந்து இராமநாதபுரம் வருகை தந்ததிற்கு நினைவாக இந்த தூண் பாஸ்கர சேதுபதி மன்னரால் நிறுவப்பெற்றது. இது பாரம்பரிய மற்றும் சமய நல்லிணக்க சின்னமாக இன்றும் திகழ்கிறது. இத பத்தி இப்போ தான் தெரிஞ்சுக்கிட்டேன் அப்டீன்னா Comment பண்ணுங்க.
ராமநாதபுரம் மாவட்டம் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற வெள்ளிக்கிழமை 21/2/2025 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. வேலை நாடுனர்கள் ஒரிஜினல் மற்றும் அசல் கல்விச்சான்று, ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் சுய விபர குறிப்புடன் கலந்துகொள்ளலாம். *ஷேர் செய்யுங்கள்
கடலாடி தாலுகா மேலமுந்தல் கிராமத்தில் இயங்கி வரும் அரசு பள்ளியில் பணிபுரிந்து வந்த தலைமையாசிரியர் சேட் அயூப்கான் அப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாவட்ட குழந்தைகள் நல உதவி எண்ணிற்கு பெற்றோர்கள் நேற்று புகார் அளித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சேட் அயூப்கான் இன்று(பிப்.19) அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்தார். சாயல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்கச்சிமடம் ஜான் போஸ், சகாயம் ஆகியோரின் விசைப்படகுகளில் தொழிலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர் 14 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை பிப்.9ல் சிறை பிடித்தது. இந்த வழக்கு கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் 12 மீனவர்களை நிபந்தனையுடன் விடுவித்து, ஒருவருக்கு ரூ.1.20 கோடி அபராதம், மற்றொரு மீனவருக்கு 18 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
பிரப்பன்வலசை கடற்பகுதியில் இருந்து இலங்கைக்குபுகையிலை பொருட்கள் கடத்த உள்ளதாக ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு நேற்றிரவு தகவல் கிடைத்தது. இதன்படி அங்கு சோதனை செய்தபோது 19 பண்டல்களில் இருந்த 3.80 லட்சம் வெளிநாட்டு சிகரெட் (MonChester United Kingdom) பாக்கெட்களை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.3.13 கோடி என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.