Ramanathapuram

News April 9, 2025

மீனவர்களுக்கான இன்றைய(ஏப்.9) வானிலை அறிக்கை

image

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் முதல் இராமேஸ்வரம் வரை உள்ள மீனவர்கள் பயன்படும் வகையில் வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இன்று (ஏப்.9) காற்றின் வேகம் 06 கிலோமீட்டர்/மணி முதல் 20 கிலோமீட்டர்/மணி வரை வீசக்கூடும், காற்றின் திசை வடக்கு நோக்கி இருக்கும். மேலும் மழைக்கான வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 9, 2025

ராமநாதபுரத்தில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வணிக நிர்வாகி பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு ஏதாவது ஒர் பட்டபடிப்பு படித்த 20 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும்<>.இங்கு கிளிக்<<>> செய்து மே மாதம் 31-க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்க.

News April 9, 2025

மீனவர் வலையில் சிக்கய அரிய வகை ஆமை

image

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி உப்புத் தண்ணீர் தீவு அருகே நேற்று முன்தினம் விரிக்கப்பட்ட வலையில் 100 கிலோ ‘ஆலிவர் ட்ரீ’ என்ற இனத்தை சார்ந்த பெண் ஆமை சிக்கியது. பைபர் நாட்டுப்படகில் சென்ற ஒப்பிலான் ஒத்தப்பனையைச் சேர்ந்த மீனவர் சுகன் ரவி (35), இதைப் பார்த்தார். ஆமையின் துடுப்பு பகுதியில் சுற்றிக்கொண்ட வலையை நுணுக்கமாகப் பிரித்து ஆமையை மீண்டும் கடலுக்குள் விட்டார்.மீனவரை வனச்சரகர் பாராட்டினார்.

News April 8, 2025

ராமநாதபுரம் மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

இன்று (ஏப்ரல்.08) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News April 8, 2025

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை நண்பகல் ரோந்து அதிகாரிகள் விவரம்

image

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை நண்பகல் ரோந்து அதிகாரிகள் விபர பட்டியல் மற்றும் அலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம், ராமேஸ்வரம், கமுதி, முதுகுளத்தூர் கடலாடி, கீழக்கரை மற்றும் திருவாடானை பகுதிகளில் இன்று (ஏப்ரல் 8) நண்பகல் 2மணி முதல் மாலை 4 மணி வரை ரோந்து அதிகாரிகள் மற்றும் அலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு ஹலோ போலீஸ் எண்கள் 83000 31100(அ) 100ஐ அணுகவும்.

News April 8, 2025

முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த மீனவ பிரதிநிதிகள்

image

இராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் பகுதிகளை சேர்ந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மகளிர் கூட்டமைப்பினர் இன்று (ஏப்.08) சென்னையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம்  தலைமையில் சந்தித்து மீனவ பெருமக்களின் நல்வாழ்விற்காக ரூ.576.73 கோடி செலவில் பல்வேறு புதிய திட்டங்கள் தந்தமைக்கு நன்றி தெரிவித்தனர்.

News April 8, 2025

மீனவர்களுக்கான இன்றைய வானிலை அறிக்கை

image

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் முதல் ராமேஸ்வரம் வரை உள்ள மீனவர்கள் பயன்படும் வகையில் வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இன்று (ஏப்.8) காற்றின் வேகம் 06 கிலோமீட்டர்/மணி முதல் 09 கிலோமீட்டர்/மணி வரை வீசக்கூடும், காற்றின் திசை வடக்கு நோக்கி இருக்கும். மேலும் மழைக்கான வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 8, 2025

56 கிலோ கஞ்சா பண்டல் மற்றும் கார் பறிமுதல்

image

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தென் கடல் அய்யனார் கோயில் கடற்கரையில் கேட்பாரற்று கிடந்த கஞ்சா பண்டல்களை மண்டபம் சுங்கத்துறையினர் இன்று காலை கைப்பற்றினர். அதில் தலா 2 கிலோ வீதம் 28 பண்டல்களில் 56 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சா பண்டல்களை பறிமுதல் செய்து, அங்கு நின்ற காரை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். கைப்பற்றிய கஞ்சாவின் மதிப்பு ரூ.5.50 லட்சம் இருக்கலாம் என சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.

News April 8, 2025

ராமநாதபுரம் அங்கன்வாடியில் வேலை ரெடி

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 84 பணியாளர், 3 குறு அங்கன்வாடி பணியாளர், 38 உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஏப்.23 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும்.

News April 8, 2025

ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று காலை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவெடுத்தது. இதன் காரணமாக இன்று (ஏப்.08) ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்கள் பகுதியில் மழையா கமெண்ட் பண்ணுங்க. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!