Ramanathapuram

News February 23, 2025

ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் சிறைபிடிப்பு

image

இலங்கை மன்னார் கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 5 விசைப்படகுகளில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை சிறை பிடித்தனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் கிளிநொச்சி கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

News February 23, 2025

ஊருணியில் மிதந்த கர்ப்பிணி சடலம்

image

வைரவனேந்தலைச் சேர்ந்தவர் சரவணன்(29) மனைவி பாக்கியலட்சுமி(25) உடன் ஸ்ரீராம் நகரில் வசித்தார். கணவருடன் தகராறு ஏற்பட்டதையடுத்து பாக்கியலட்சுமி நேற்று முன்தினம் திடீரென காணாமல் போனார். இதுகுறித்து சரவணன், போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், இடையர்வலசை ஊருணியில் பாக்கியலட்சுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. அவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். பஜார் போலீசார், சந்தேக மரணம் என வழக்கு பதிந்துள்ளனர்.

News February 22, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (பிப். 22) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News February 22, 2025

ராமேஸ்வரம் பகுதியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

image

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் நகர் காவல் நிலைய உட்பட்ட பகுதிகளில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நான்கு நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் அவர்களிடமிருந்து 1.300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

News February 22, 2025

ராமநாதபுரம் காவல்துறை ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(பிப்.22) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News February 22, 2025

பாம்பன் புதிய பாலம் திறப்பு: திருச்சி – ராமேஸ்வரம் சிறப்பு ரயில்

image

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவை காண விரும்பும், ரயில் பிரியர்கள், ரயில் பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் வசதிக்காக திறப்பு விழா நாளில் திருச்சி – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் இயக்க மதுரை கோட்ட மேலாளருக்கு தெற்கு ரயில்வே அறிவுறுத்தி உள்ளது. மார்ச் 03 (அ) 04 ல் பாம்பன் செங்குத்து தூக்கு பாலம், ராமேஸ்வரம் ரயில் முனையம் பிரதமர் மோடியால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என கூறப்படுகிறது.

News February 22, 2025

காணாமல் போனவர் ஊரணியில் சடலமாக மிதப்பு

image

காணாமல் போனவர் ஊரணியில் சடலமாக மிதப்புபரமக்குடி அருகே போகலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட முதலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலன். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக ஊர் மக்கள் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று முதலூர் கிராம ஊரணியில் சடலமாக மிதந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்கள் அவரது உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

News February 22, 2025

ஊரக வளர்ச்சித்துறை சங்க மாநாட்டில் மோதல்; ஊர்வலம் ரத்து

image

தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில மாநாடு ராமநாதபுரத்தில் பிப்.20, 21ல் நடந்தது. இதில் பல மாவட்டங்களில் இருந்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். நேற்று மதியம் நடந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் இருதரப்பினரிடையே திடீரென கைகலப்பு, மோதல் ஏற்பட்டதால் நேற்று நடக்க இருந்த பொது மாநாடு, ஊர்வலம் ரத்து செய்யப்பட்டன.

News February 21, 2025

இராமநாதபுரம் மாவட்ட ரமலான் கால அட்டவணை வெளியீடு

image

உலகெங்கிலும் இஸ்லாமிய மக்கள் ரமலான் காலங்களில் 30 நாட்கள் உண்ணாமல் பருகாமல் இறை வழியில் செயல்படுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து வரும் மார்ச் மாதம் 2ம் தேதி ஆரம்பம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூரியன் உதயம் ஆரம்பம் முதல் சூரியன் மறையும் வரையில் நோன்பு இருப்பது கட்டாயம். அதனால் ஒவ்வொரு பகுதியிலும் நேரம் மாறுவதால் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு இந்த வருடத்திற்கான நோன்பு கால அட்டவணை வெளியீடு.

News February 21, 2025

இராம்நாடு: உலகின் முதல் சிவன் கோயில் இங்கு தான் 

image

உத்திரகோசமங்கையில் அமைந்திருக்கும் சிவன் கோயில்தான் உலகில் தோன்றிய முதல் சிவன் கோயில். ராமாயண காலத்திற்கு முன்பே இந்த கோவில் உள்ளது. இதனை ‘மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது’ என்ற சொல் மொழியின் மூலமாக அறியலாம். உலகில் இங்குள்ள எந்த சிவன் கோயிலிலும் சிவனுக்கு தாழம்பூ வைத்து பூஜிக்கப்படுவதில்லை. இங்கு மட்டும் சிவனுக்கு தாழம்பூவைக் கொண்டு அர்ச்சனை நடக்கிறது. நடராஜர் திருமேனி, மரகதத்தால் ஆனது.

error: Content is protected !!