India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலக தண்ணீர் தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளில் இன்று (மார்ச்.23) காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் உலக தண்ணீா் தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீா் விநியோகம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் மக்கள் கலந்து கொள்ள ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அழைப்பு விடுத்துள்ளார்.
பாம்பனில் புதிய ரயில் பாலத்திற்கான திறப்பு விழா ஒத்திகை நாளை மார்ச்.29 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. எனவே அப்பகுதியில் படகுகள் பாலத்தை கடக்க வேண்டாம் எனவும் ஒத்திகை நடைபெறும் போது ஆற்றுப் பகுதியில் படகுகளை நிறுத்தி வைக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது மீன்வளத்துறை ரயில்வே மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்று (மார்ச்.28) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
ராமநாதபுரம் அருகே காட்டூரணி வைகை நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (27). இவரது மனைவி சர்மிளா (23). இருவரும் இன்று (மார்ச்.28) மாலை 5:30 மணியளவில் ஊரணியில் குளிக்க சென்றனர். நீச்சல் தெரியாத நிலையில் ஆழமான பகுதிக்கு சென்ற இருவரும் நீரில் மூழ்கினர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் இருவரையும் இரவு 8:45 மணியளவில் சடலமாக மீட்டனர். இது குறித்து கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
ரூ.25 கோடியில் சர்வதேச தரத்தில் 8 தடங்கள் கொண்ட செயற்கை தடகள ஓடுபாதையுடன் இயற்கை கால்பந்து புல்வெளி மைதானம் சேலம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அமைக்கப்படும். சர்வதேச தரத்தில் நீர்த்தெளிப்பான் வசதி, பாதுகாப்பு வேலி, தடகள மற்றும் கால்பந்து உபகரணங்கள், நீளம் தாண்டுதல் குழி மற்றும் பிற தேவையான வசதிகள் அமைக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உலக தண்ணீர் தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளிலும் மார்ச் 23ல் நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் நாளை (மார்ச்.29) காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் உலக தண்ணீர் தின கருப்பொருள், ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், கிராம ஊராட்சி தணிக்கை, தூய குடிநீர் விநியோகம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
திருவாடானை பழைமையான ஊர். இந்தப் பெயர் வரக் காரணமாக சொல்லப்படுவது வருணனின் மகனான வாருணிக்கு துர்வாச முனிவர் கொடுத்த சாபத்தினால் ஆட்டுத்தலையுடன் யானை உடலுமாக மாறினான் வாருணி. அவனது சாபம் நீங்க இங்கு உள்ள குளத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றான். இதனால் ஆடு + ஆணை, திரு எனும் அடைமொழியோடு திருவாடானை ஆனது. முக்திபுரம் அஜகஜபுரம் என பல பெயர்களும் உண்டு. தேவராரபாடல் பெற்ற ஆதிரெத்தினேஸ்வரர் தலம் உள்ளது.
இன்று (28.03.2025) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை இராமநாதபுரம்,பரமக்குடி,இராமேஸ்வரம்,கீலக்கரை,கமுதி,திருவாடானை வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். பொதுமக்கள் எளிதில் தெரிந்துகொள்ள சமூகவலைதளங்களில் மாவட்டகாவல் தெரிவித்தது.
நார்வே நாட்டில் வேலை வாங்கி தருவதாக முகநுால் விளம்பரத்தை பயன்படுத்தி சகுபர் சாதிக் என்பவர் 50க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.பல கோடி பணத்தை மோசடி செய்துள்ளார். ஏமாற்றப்பட்டவர்கள் இராமநாதபுரம் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தனர். அதில், ஒருவர் மனைவியின் தாலியை விற்று ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கட்டினேன் எனக் கூறி அனைவரது பணத்தையும் போலீசார் மீட்டுத்தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். BE AWARE *SHARE
ராமநாதபுரம், திருவாடனை அருகே உள்ள திருவெற்றியூரில் மகள்களுக்கு முன்னுரிமை அளித்து சொத்து எழுதி வைக்கும் பழக்கம் உள்ளது. இதற்கு காரணம் இங்குள்ள பாகம்பிரியாள் அம்மன் என்கின்றனர்.அப்பகுதி மக்கள். விஷ கடிக்கு ஆளானவனர்கள் இக்கோயிலில் உள்ள வாசுகி தீர்த்ததில் குளிப்பதன் மூலம் குணமடைவார்கள் என்பது இக்கோயிலின் நம்பிக்கை. இதனால் இந்த அம்மன் மருத்துவச்சி அம்மன் என்று அழைக்கப்படுகிறார். *ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.