India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு மக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த தளத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு மாவட்ட அதிகாரியை 04657 230657 அணுகலாம். எல்லோருக்கும் SHARE பண்ணுங்க
ராமநாதபுரத்தில் மழைக்கால மின்விபத்துகளை தடுக்க பாதுகாப்பு அறிவுரை:
1.அறுந்த கம்பிகள், கம்பங்கள் அருகில் செல்வதை தவிர்க்கவும்
2.இடி, மின்னலின்போது வெட்டவெளி, மரத்தடி, செல்போன் பயன்படுத்த வேண்டாம்.
3.சுவர்களில் தண்ணீர் கசிவு இருந்தால் மின்சாதனங்களை தவிர்க்கவும்
அவசர உதவிக்கு 9445859032, 9445859033, 9445859034 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு மாவட்டத்தின் உள் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மாவட்டத்தில் பரவலான மழைக்கு வாய்ப்பு கிடையாது. ஒரு சில இடங்களில் மட்டுமே பிற்பகல் மாலை நேரங்களில் மழை இருக்கக்கூடும்.
குறிப்பாக பரமக்குடி பார்த்திபனூர் அபிராமம் கமுதி முதுகுளத்தூர் திருவாடானை உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
பல்வேறு அரசு சேவைகள் மக்களுக்கு ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது. இதில், இன்று (செப். 23) ராமேஸ்வரம் நகராட்சி, ராமநாதபுரம் வட்டம், கமுதி வட்டாரம், திருவாடானை வட்டம் பகுதி மக்களுக்கு ராமேஸ்வரம், இளமனூர், நத்தம், அரசத்தூர் பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது. இதில், மகளிர் உரிமை தொகை, பட்டா திருத்தம், பிறப்பு, இறப்பு சான்று உள்ளிட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்படும்.
இன்று (செப்.22) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இராமநாதபுரம் மாவட்டத்தின் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம்.
இராமநாதபுரம் மாவட்டம் காவல்துறை சார்பில் இன்று(22.09.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகள் மற்றும் டிஎஸ்பி முத்துராஜ் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம் என அறிவித்துள்ளனர்.
ராம்நாடு மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <
திருப்புல்லாணி ஒன்றியம், வண்ணாங்குண்டு கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த நிலையில் நேற்று (செப் 21) ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல கடையைத் திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், கடைக்குள் இருந்த ஒரு லட்சம் மதிப்பிலான 600 மதுப் பட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து திருப்புல்லாணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் 1998ம் ஆண்டில் இருந்த அரசுக்கு சொந்தமான 95 கிணறுகளில் தற்போது களப்பணியாளர்களின் அறிக்கையின்படி 42 கிணறுகள் மட்டுமே உள்ளன. 53 கிணறுகளை காணவில்லை. 2007ம் ஆண்டு நகராட்சி அலுவலர்களின் கணக்கெடுப்பின்படி 42 கிணறுகளாக குறைந்துள்ளது. ஆக்கிரமிப்பால் 53 கிணறுகள் காணவில்லை. தொடர் பராமரிப்பு இல்லாமல் மேலும் கிணறுகள் குறைய வாய்ப்புள்ளது.
ராமநாதபுரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீடும், அதன் நுட்பங்களும் தொடர்பான பயிற்சி நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சி வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 17 நாட்கள் நடைபெறும். 22.9.2025 முதல் பயிற்சி நிலையத்தில் வழங்கப்படும். இப்பயிற்சி தொடர்பான மற்ற விபரங்களை 88254 11649, 95781 63661. ஆகிய கைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.