India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (மார். 01) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
ராமநாதபுரம் பாண்டியர், சோழர், இஸ்லாமியர், நாயக்கர் மற்றும் சேதுபதி மன்னர்களால் ஆளப்பட்டுள்ளது. அன்றைய நாளில் இப்பகுதி நாடு, வளநாடுகளாக பிரக்கப்பட்டுள்ளன. அதன்படி, முதுகுளத்தூர் வட்டம்-வடதலைச் செம்பிநாடு, ராம்நாடு வட்டம்- கீழச் செம்பிநாடு, செவ்விருக்கை நாடு, கமுதி வட்டம்-பொலீயூர் நாடு, பரமக்குடி வட்டம்-கைக்கை நாடு, திருவாடானை வட்டம் – இடையளநாடு, தழையூர் நாடு என இருந்துள்ளன. நீங்கள் எந்த நாடு?
இராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதில் மாவட்டத்தில் அதிகபட்சமாக இராமேஸ்வரத்தில் 7 சென்டிமீட்டர் மழை பெய்து பதிவாகியுள்ளது. இன்றும் மாவட்டத்தில் பிற்பகல் மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர ஒட்டிய இராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், தொண்டி, பரமக்குடி, கமுதி, வாலிநோக்கம் ஆகிய பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. *மறக்காம ஷேர் பண்ணுங்க
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(மார்ச். 01) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
திருவாடானை தாலுகா அலுவலகம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில், 62 மாணவர்கள் படிக்கின்றனர். 100 ஆண்டுகளை கடந்த இப்பள்ளியில் அடிப்படை வசதியான கழிப்பறை, குடிநீர் வசதியில்லை என கோரி பலமுறை அதிகாரிகளை சந்தித்தும் பயனில்லை. கழிப்பறை செல்ல முடியாத சூழலால் மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தலைமை ஆசிரியர் கதிரவன், தன் சொந்த பணம், ரூ.65,000 செலவில் கழிப்பறை வசதி செய்து கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் மெர்லின் டார்லிங் கூறுகையில்; அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு திடீர் ஆய்வு செய்யப்படுகிறது. அதன்படி, கமுதக்குடி, தடுத்தலான்கோட்டை கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட 2 பேர் (பிப்.28) பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் சிக்கல் நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு உள்ளதாக என விசாரணை நடைபெறும் என்றார்
இன்று (பிப். 28) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேரடி 2024-2025 நெல் கொள்முதலுக்காக தமிழக அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் NCCF மூலமாக விவசாயிகள் விளைவிக்கும் நெல்லினை நேரடியாக கொள்முதல் செய்யும் பொருட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் காலோன் இன்று தெரிவித்துள்ளார்.
வீரசோழன் – மதுரைக்கு புதிய வழித்தடமாக அரசுப்பேருந்து இயங்கி வருகிறது.இந்த நிலையில் இன்று மதுரையில் இருந்து வீரசோழன் வழியாக கமுதி சென்ற அரசுப்பேருந்து மானா மதுரை சாலை அருகேயுள்ள சம்பாகுளம் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டுக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் நரிக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேரடி 2024-2025 நெல் கொள்முதலுக்காக தமிழக அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் NCCF மூலமாக விவசாயிகள் விளைவிக்கும் நெல்லினை நேரடியாக கொள்முதல் செய்யும் பொருட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் காலோன் இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.