Ramanathapuram

News March 21, 2025

7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு. தமிழ்நாட்டில் வரும் 25ம் தேதி வரை ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. *ஷேர்

News March 21, 2025

இறந்தவர்களின் உடலை தண்ணீரில் தூக்கிச் செல்லும் அவலம்

image

பரமக்குடி அருகே போகலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மணிச்சியேந்தல் கிராமத்தில் மயானத்திற்கு செல்வதற்கு ஊரின் நடுவே அமைந்துள்ள கால்வாயை கடந்து செல்ல வேண்டும். இந்நிலையில் கால்வாயில் தண்ணீர் செல்வதால் கிராம மக்கள் இறந்தவரின் உடல்களை தண்ணீர்குள் இறங்கி தூக்கிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. முறையாக பாலம் அமைத்து தர கோரிக்கை வைத்துள்ளனர்.

News March 21, 2025

இராமநாதபுரத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

image

இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.ஆர் சேதுபதி நகரில் நேற்று(மார்ச்.20) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணி செய்து வந்த பழனி என்பவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்‌. அவரது உடலை இராமநாதபுரம் அப்பாஸ் அலி அறக்கட்டளை சேர்மன் அமீர் அம்சா காவல் துறை உதவியோடு உடலை மீட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

News March 21, 2025

குரூப் ஒன் தேர்வில் வெற்றி பெற்ற குடும்ப தலைவி

image

திருவாடானை அருகே ஆதியூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் துரையரசன் இவரது மகள் ஐஸ்வர்யா, ஐஸ்வர்யாவின் கணவர் மதன்பாண்டி சென்னையில் பொறியாளராக பணிபுரிகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஐஸ்வர்யா குரூப் ஒன் தேர்வில் ஒரே முயற்சியில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றவர் டிஎஸ்பி பணிக்கு தேர்வாகியுள்ளார். குடும்ப தலைவியாக இருந்து முதல் தேர்விலேயே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. *ஷேர்

News March 21, 2025

இராமேஸ்வரத்தில் ரூ.6.43 கோடியில் படகு தளம்

image

மத்திய அரசின் சாகர் மாலா திட்டத்தில், ராமேஸ்வரம் – தனுஷ்கோடி கடல் வழி படகு பயணம் விரைவில் துவங்க உள்ளது. அக்னி தீர்த்த கடற்கரையில் ரூ.6.43 கோடி மதிப்பீட்டில் படகு தளம் அமைய உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து தேவிபட்டினம், வில்லுாண்டி தீர்த்தம், தனுஷ்கோடி பகுதிக்கு கடல் வழி சுற்றுலா படகு சவாரி ஏற்படுத்தப்படுகிறது. படகு தளம், ‘டி’ வடிவில் 120 மீ., நீளம், 7.5 மீ., அகலம் 6 அடி உயரத்தில் அமையவுள்ளது. *ஷேர்

News March 20, 2025

இராமநாதபுரத்தில் அடுத்த 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

image

காற்று வேக மாறுபாடு, வெப்பச்சலனம் காரணமாக இராம்நாடு மாவட்டத்தில் நாளை முதல் 3 தினங்களுக்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகாலை, மாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு; மாவட்டத்தில் பரவலான மழைக்கு வாய்ப்பு இல்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே மழைக்கு வாய்ப்பு உள்ளது என இராம்நாடு காலநிலை அமைப்பு தெரிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க.

News March 20, 2025

புத்தக திருவிழாவிற்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்து செல்லும் பொருட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் 7 வது புத்தகக் கண்காட்சி நாளை முதல் மார்ச் 30 வரை ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடக்கவுள்ளது. காலை 10 முதல் இரவு 9:30 மணி வரை நடைபெறும். இங்கு 80க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இராமநாதபுரம் மாவட்ட பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். *ஷேர் பண்ணுங்க 

News March 20, 2025

இராம்நாதபுரம் டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி – கலெக்டர் தகவல்

image

டிஎன்பிஎஸ்சி குரூப் IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மார்ச்.25 முதல் வார நாட்களில் காலை 10 மணி மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. போட்டித் தேர்வுக்கு தயாராகுவோர் தங்கள் புகைப்படம், சுய விவரங்களுடன் 04567-230160 என்ற எண் (அ) 73394 06320 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். *ஷேர்

News March 20, 2025

வரி செலுத்தாத கடை முன் கழிவுநீர் வாகனம் நிறுத்தம்

image

இராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகளில் 50000 குடியிருப்புகள் மூலம் ஆண்டுக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம், குப்பை வரி, பாதாள சாக்கடை வரி என ரூ.17 கோடி வரை வரி வசூலிக்கப்பட வேண்டும். நடப்பு ஆண்டு வரியுடன் நிலுவையில் உள்ள வரியை வசூலிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். வரி செலுத்தாத வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களில் முன் குப்பை வாகனம், கழிவுநீர் வாகனத்தை நிறுத்தி மிரட்டுகின்றனர்.

News March 20, 2025

இராமநாதபுரம் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு

image

இராமநாதபுரம் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் Medical Officer, Security, Radiographer. என மொத்தமாக 17 காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணபிக்க கடைசி நாள் 25-03-2025. 10th, B.Sc, Diploma, ITI, M.Sc, MBBS, MSW படித்த நபர்களுக்கு ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு <>லிங்கை <<>>செய்யவும் *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!