India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
“தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அநாகரிகமானவர்கள் என நாடாளுமன்றத்தில் பேசி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அவமதித்த ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; நாங்கள் ஒன்றும் உங்களிடம் சலுகைகளை கேட்கவில்லை; எங்களின் உரிமைகளை கேட்கின்றோம்” என்று இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மார்ச்.10) நள்ளிரவு முதல் மழை படிப்படியாக துவங்கும். நாளை (மார்ச்.11) அதிகாலை முதல் அடுத்து வரும் 36 மணி நேரத்திற்கு பெரும்பாலும் இடங்களில் மிதமான மழை மற்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர ஒட்டிய பகுதிகளில் மிக கனமழை பதிவாக வாய்ப்பு உள்ளது. மாவட்டத்தின் உள்பகுதியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கன மழை பெய்ய வாய்ப்பு எனவும் தகவல் வெளியாகியுள்ளது.*SHARE IT
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(மார்ச்.10) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில்(மார்ச்.11) விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை. நாகை, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட மக்கள் முன் எச்சரிக்கையாக செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. பிறரும் விழிப்புணர்வுடன் செயல்பட ஷேர் செய்யுங்கள்
சிக்கல், தத்தங்குடி கிராமத்தில் காவல் தெய்வமாக சூருடைய அய்யனார் கோயில் அருகேயுள்ள குளத்தின் கீழ்ப்புறத்தில் 400ஆண்டுகள் பழமையான நடுகல் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்க நிறுவனர் தலைவர் பாக்கியநாதன் தகவலின்படி, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வாளர் விஜயராமு, தத்தங்குடியில் அய்யனார் கோயில் நடுகல்லை ஆய்வு செய்ததில் 400 ஆண்டுகள் பழமையானது நிலக்கொடைக் கல்வெட்டு என தெரியவந்தது.*ஷேர்
இன்று (மார். 09) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (மார்ச்.10) பிற்பகலுக்கு பிறகு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 11 ஆம் தேதி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.*நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்*
தொண்டி அருகே பதனக்குடி மேலக்குடியிருப்பை சேர்ந்த சுரேஷ் -ஆனந்தி இவர்களது மகன் விஷ்ணுவர்த்தன் (7) இவரை நேற்று (7) மாலையிலிருந்து காணவில்லை. காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு தேடி வந்த நிலையில் இன்று (மார்ச் 8 ) சுரேஷ் வீட்டின் அருகில் உள்ள பதனக்குடி கண்மாயில் விஷ்ணுவர்த்தன் இறந்து கிடந்துள்ளார் .இது குறித்து எஸ்பிபட்டிணம் விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தபால் சேவை குறை தீர் முகாம் மார்ச் 19 நடக்கிறது.தபால் சம்பந்தப்பட்ட புகாரில் அனுப்பிய தேதி, நேரம், பெறுநரின் முகவரி, ரசீது எண், மணியார்டர், துரித தபால், பதிவு ஆகியவற்றுக்கான விபரங்களை தெரிவிக்க வேண்டும். ஏற்கனவே முகாமில் மனு கொடுத்து திருப்தியில்லை என்றால் தங்களது குறைகளை மட்டும் அனுப்பலாம் என அஞ்சல்கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்திற்கு முகவை என்ற பெயர் உள்ளது. சங்க இலக்கியங்களில் முகவை என்ற சொல்லுக்கு அள்ளுதல், நெற்பொலி என்ற அர்த்தங்கள் உள்ளன. ராமநாதபுரத்தில் அதிக அளவில் நெல் விளைந்ததால் இப்பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக களத்தாவூர், அச்சுந்தன்வயல், நொச்சிவயல் போன்ற ஊர்கள் உள்ளன. தற்போது வறண்டுள்ள ராமநாதபுரம் முன்பு செழிப்பான பகுதியாக இருந்துள்ளது என நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
Sorry, no posts matched your criteria.