Ramanathapuram

News April 8, 2024

ராம்நாடு: உரிமம் இல்லாத பைக்குகள் பறிமுதல்

image

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 18 வயதிற்கு கீழ் உள்ள இளைஞர்கள், சிறுவர்கள் அதிகமாக ஒலி எழுப்பும் இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர். இதனால் இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கீழக்கரை காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் காவல்துறையினர் உரிமம் இல்லாத இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

News April 7, 2024

ராமநாதபுரம் அருகே சர்ச்சை போஸ்டர் 

image

ஆதியாகுடி கிராமத்திற்கு செல்லும் சாலையை தார் சாலையாக அமைத்து தர கோரியும் பல ஆண்டுகளாக கண்மாய் தூர்வார வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தை
கண்டித்து வருகிற 19 ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஆதியாகுடி கிராம மக்கள் சார்பில் போஸ்டர் ஒட்டி அறிவித்துள்ளனர்.

News April 7, 2024

உங்கள் தொகுதி வேட்பாளர் பற்றி தெரிந்து கொண்டு வாக்களிக்கவும்

image

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <>-1 <<>>என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

News April 6, 2024

ராம்நாடு கலெக்டர் எச்சரிக்கை

image

14 வயதுக்குட்பட்ட சிறாரை தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுத்துதல் சட்டபடி குற்றம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பிரசாரத்தில் சிறாரை பங்கேற்க செய்தால் வேட்பாளர்கள், முகவர்கள், அவர்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

கலெக்டர் அறிவுறுத்தல்

image

ராமேஸ்வரம் நடராஜபுரம் குடியிருப்புப் பகுதி வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணியை கலெக்டர் விஷ்ணு சந்திரன் இன்று ஆய்வு செய்தார். ஒவ்வொரு வீட்டிலும் அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு மையங்களுக்குச் சென்று வாக்களித்து ஒவ்வொருவரும் தங்களது ஜனநாயக கடமையை நிலைநிறுத்த வேண்டுமென கலெக்டர் தெரிவித்தார்.

News April 6, 2024

ராம்நாடு: விசைப்படகுகளுக்கு டீசல் மானியம் ரத்து

image

மண்டபம் தென், வடக்கு கடலில் தொழிலுக்குச் செல்லும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுக்கு மாதம் 1,500 லிட்டர் மானிய டீசல் வழங்கப்படுகிறது. மேலும் சலுகைகளை பெற படகுகளுக்கு காப்பீட்டு திட்டம் அமலில் உள்ளது. இதில் 24 விசைப்படகுகளின் காப்பீடு காலாவதியாகி விட்டதால் வரும் நாட்களில் மீன்பிடி அனுமதி சீட்டு, மானிய டீசல் வழங்கப்பட மாட்டாது என மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

ராமநாதபுரம்: பதற்றமான சாவடி எண்ணிக்கை வெளியீடு

image

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 262 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 4 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானவை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

ராம்நாடு: முட்புதருக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம்

image

திருவாடானை தாலுகா எஸ்பி பட்டினம் அருகே உள்ள சோழகன்பேட்டை கிராமத்தில் ஓரியூர் செல்லும் சாலையில் உள்ள முனியய்யா கோவில் பகுதியில் முட்புதருக்குள் துர்நாற்றம் வீசி உள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சிலர் நேற்று (ஏப்.5) அங்கு சென்று பார்த்தபோது அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதை கண்டனர். தகவலறிந்த எஸ்பி பட்டினம் போலீசார் அழுகிய சடலத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

News April 6, 2024

ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு

image

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் மாவட்டங்களுக்கு இடையேயான 16, 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ள ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அணித்தேர்வு ஏப்ரல் 13 அன்று காலை 8 மணிக்கு சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. தேர்வில் பங்கேற்போர் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, விளையாட்டு உபகரணங்களுடன் வரவும் என அதன் செயலாளர் மாரீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

News April 5, 2024

வாக்குப்பதிவு இயந்திரத்தில் இரட்டை இலை பளீச்

image

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மண்டபம் பேரூரில் இன்று மாலை வாக்கு சேகரித்தார். வாக்குப்பதிவு இயந்திரத்தில் 2 இடத்தில் பளீச் என தெரியும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் வேண்டும் என ஜெயபெருமாள் பேசினார்.
மாவட்ட அதிமுக செயலர் முனியசாமி, எஸ்டிபிஐ மாவட்ட பொதுச்செயலர் அப்துல் ஜெமீல் கூட்டணி கட்சியினர்
பங்கேற்றனர்.

error: Content is protected !!