India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவெற்றியூரில் சிவகங்கை தேவஸ்தான ராணி மதுராந்தகி நாச்சியார் நிர்வாகத்திற்கு உட்பட்ட அருள்மிகு வாழவந்த நாயகி அம்பாள் திருக்கோவிலின் 1433-ம் பசலி பிரம்மோற்சவம் திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. இதனையொட்டி சுவாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனைகளும் நடைபெற்றன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிறகு சுவாமி அம்மன் வீதி உலா நடைபெற்றது.
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 6 வயது மாணவியை பள்ளி ஆசிரியை அடித்ததில் கால் வீக்கமடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவியின் தாயார் லெட்சுமி அளித்த புகாரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் பள்ளி ஆசிரியை ஜெயப்ரியா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
30 நாள் நோன்பு முடிவில் நாளை (வியாழக்கிழமை) தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதன்படி ராமநாதபுரம்- மதுரை ரோட்டில் உள்ள ஈதுகா கோரி தோப்பு மைதானத்தில் நாளை காலை 9 மணிக்கு ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு ரம்ஜான் சிறப்பு தொழுகை மேற்கொள்ள உள்ளனர்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் சாயல்குடியில் பிரச்சாரம் செய்தார். அதற்கு முன்னதாக கனிமொழி எம்பி பிரச்சாரம் செய்த நிலையில் கலைந்துசென்ற திமுக தொண்டர்களும் பொதுமக்களும் அதிமுக வேட்பாளரை கண்டதும் வரவேற்பதுபோல கைகளை காட்டி ஆரவாரம் செய்தனர். இச்செயல் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இரு வேட்பாளர்களுக்கும் தங்கள் மரியாதையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் நாளை ராமநாதபுரத்தில் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக நாளை(ஏப்.10) காலை மதுரை வரும் அவர் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பிற்பகலில் ராமநாதபுரம் வந்து ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்.
பொட்டல்பச்சேரி கிராமத்தில் 2017ஆம் ஆண்டு துரைராஜ் என்பவருக்கும் – செல்லப்பாண்டி, எலிசபெத் ஆகியோருக்கும் இடையே கொடுக்கல்-வாங்கல் பிரச்சனை ஏற்பட்டது. சிக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடலாடி மாவட்ட உரிமையியல் (ம) நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று (ஏப்.8) செல்லப்பாண்டி, எலிசபெத் ஆகியோருக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகு மற்றும் இழுவை படகு மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. தடை காலத்தை ஒட்டி வரும் 14ஆம் தேதி அன்று இரவு 12 மணிக்கு முன்னர் மீனவர்கள் கட்டாயம் கரை திரும்ப வேண்டும் இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டம் கீழக்கரையில் இன்று நடந்தது. தமுமுக மாநில துணை பொதுச்செயலர் சலிமுல்லாஹ்கான் தலைமை வகித்தார். இதில் பேசிய மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மீனவர்களை வஞ்சிக்கும் மத்திய அரசு கச்சத்தீவு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது என்றார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதைத்தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இதன்படி இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி. சந்தீஷ் தெரிவித்தார்
இந்திய கூட்டணி சார்பில் மீனவர் சந்திப்பு கூட்டம் பாம்பனில் இன்று நடந்தது. திமுக மாவட்ட செயலர் காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம் எம்எல்ஏ தலைமை வகித்தார். பனை தொழிலாளர் நலவாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் முன்னிலை வகித்தார். அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், ஓபிஎஸ் யாருக்காவது உதவி செய்துள்ளாரா? என்றார். அமைச்சர் ராஜகண்ணப்பன், நவாஸ் கனி எம்பி வாக்கு சேகரித்து பேசினர்.
Sorry, no posts matched your criteria.