India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். டி பிளாக் ஆர்.ஆர்.டவர் முன்பு இருந்து காலை ஊர்வலமாக சென்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் விஷ்ணு சந்திரனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாகவும், அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தேர்தல் பணிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, ராமநாதபுரத்தில் மருத்துவர் சந்திர பிரபா ஜெயபால் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பொதுத்தேர்தல்-2024 முன்னிட்டு, ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, ராமநாதபுரம் மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற பகுதிகளில் இன்று (23.03.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் வாக்குப்பதிவு மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ராமநாதபுரம் அருகே பாம்பன், குந்துகால் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக கஞ்சா கடத்தல் நடைபெற்று வருகின்றது.இந்த நிலையில் ராமேஸ்வரம் தீவு பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தி சென்று கிளிநொச்சி பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 கிலோ கஞ்சா பொட்டலங்களை இலங்கை கடற்படை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றது.
ரமக்குடியில் இன்று போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும் அச்சமின்றி வாக்களிப்பதற்காக பரமக்குடி டிஎஸ்பி சபரிநாதன் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார், துணை ராணுவ படையினர்கள் கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் இருந்து பஜார் வரை கொடி அணிவகுப்பு நடத்தினர்.
மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சி நிர்வாகிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி, அன்வர்ராஜா, கீர்த்திகா முனியசாமி, Ex அமைச்சர் மணிகண்டன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இராமநாதபுரம் எம்பி தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனிக்கு மீண்டும் ஏணி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. கடந்த முறை இராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியில் ஏணி சின்னத்தில் போட்டியிட்ட நவாஸ் கனிக்கு இம்முறையும் அதே சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால் ஏணி சின்னத்தில் வாக்குச் சேகரிப்பில் நவாஸ் கனி தீவிரமாக ஈடுபட உள்ளார்.
இராமநாதபுரம் கேணிக்கரையில் உள்ள தனியார் திருமண மஹாலில் நாடாளுமன்றத் தொகுதியில் இண்டி கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
கீழக்கரை சார்பாக நகர் கழக செயலாளர் பசீர் அஹமது தலைமையில் கீழக்கரை நகர் கழக நிர்வாகிகள் பெரும்பாலோனோர் கலந்துகொண்டனர். மாவட்டத்தில் உள்ள பல ஊர்களிலிருந்து கழக நிர்வாகிகள் பலரும் வந்து கலந்து கொண்டனர்.
பெருங்குளம் அருகே நதிப்பாலம் விலக்கில்
இரவில் அவ்வழியே செல்வோரை ஒரு கும்பல் ஆயுதங்களை காட்டி மிரட்டுவதாக ராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் சிலர் புகாரளித்தனர். இது தொடர்பாக விசாரணையில் பெருங்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், கேதீஸ்வரன், முகிலன், அஜய் & 3 சிறுவர் உட்பட 7 பேரை உச்சிப்புளி போலீசார் இன்று கைது செய்தனர். இவர்களிடமிருந்து வாள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட காங் கமிட்டி சார்பில் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. கருமாணிக்கம் எம்எல்ஏ தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ மலேசியா பாண்டி முன்னிலை வகித்தார். திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி வாக்கு சேகரித்து பேசினார். மாவட்ட காங் பொறுப்பாளர்கள் செல்லத்துரை அப்துல்லா, ராஜாராம் பாண்டியன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி பேசினர்.
Sorry, no posts matched your criteria.