India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொட்டல்பச்சேரி கிராமத்தில் 2017ஆம் ஆண்டு துரைராஜ் என்பவருக்கும் – செல்லப்பாண்டி, எலிசபெத் ஆகியோருக்கும் இடையே கொடுக்கல்-வாங்கல் பிரச்சனை ஏற்பட்டது. சிக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடலாடி மாவட்ட உரிமையியல் (ம) நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று (ஏப்.8) செல்லப்பாண்டி, எலிசபெத் ஆகியோருக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகு மற்றும் இழுவை படகு மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. தடை காலத்தை ஒட்டி வரும் 14ஆம் தேதி அன்று இரவு 12 மணிக்கு முன்னர் மீனவர்கள் கட்டாயம் கரை திரும்ப வேண்டும் இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டம் கீழக்கரையில் இன்று நடந்தது. தமுமுக மாநில துணை பொதுச்செயலர் சலிமுல்லாஹ்கான் தலைமை வகித்தார். இதில் பேசிய மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மீனவர்களை வஞ்சிக்கும் மத்திய அரசு கச்சத்தீவு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது என்றார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதைத்தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இதன்படி இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி. சந்தீஷ் தெரிவித்தார்
இந்திய கூட்டணி சார்பில் மீனவர் சந்திப்பு கூட்டம் பாம்பனில் இன்று நடந்தது. திமுக மாவட்ட செயலர் காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம் எம்எல்ஏ தலைமை வகித்தார். பனை தொழிலாளர் நலவாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் முன்னிலை வகித்தார். அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், ஓபிஎஸ் யாருக்காவது உதவி செய்துள்ளாரா? என்றார். அமைச்சர் ராஜகண்ணப்பன், நவாஸ் கனி எம்பி வாக்கு சேகரித்து பேசினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 18 வயதிற்கு கீழ் உள்ள இளைஞர்கள், சிறுவர்கள் அதிகமாக ஒலி எழுப்பும் இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர். இதனால் இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கீழக்கரை காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் காவல்துறையினர் உரிமம் இல்லாத இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
ஆதியாகுடி கிராமத்திற்கு செல்லும் சாலையை தார் சாலையாக அமைத்து தர கோரியும் பல ஆண்டுகளாக கண்மாய் தூர்வார வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தை
கண்டித்து வருகிற 19 ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஆதியாகுடி கிராம மக்கள் சார்பில் போஸ்டர் ஒட்டி அறிவித்துள்ளனர்.
உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <
14 வயதுக்குட்பட்ட சிறாரை தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுத்துதல் சட்டபடி குற்றம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பிரசாரத்தில் சிறாரை பங்கேற்க செய்தால் வேட்பாளர்கள், முகவர்கள், அவர்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் நடராஜபுரம் குடியிருப்புப் பகுதி வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணியை கலெக்டர் விஷ்ணு சந்திரன் இன்று ஆய்வு செய்தார். ஒவ்வொரு வீட்டிலும் அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு மையங்களுக்குச் சென்று வாக்களித்து ஒவ்வொருவரும் தங்களது ஜனநாயக கடமையை நிலைநிறுத்த வேண்டுமென கலெக்டர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.