India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ரஹ்மானியா மெட்ரிக் பள்ளி மாணவி காவிய ஜனனி 500-க்கு 499 மதிப்பெண் பெற்று மாநில அளவில் சாதனை புரிந்துள்ளார். இந்த மாணவி காவிய ஜனனிக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என அதிமுகவை சார்ந்த புரட்சித்தலைவி பசுமை தமிழகம் அமைப்பின் நிறுவனத் தலைவர் வி.என்.சுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
கடலாடி அருகே கன்னிராஜபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் 1995 முதல் 1999 கல்வி ஆண்டில் பயின்ற மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி 25 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நரிப்பையூர் தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. இதில் மாணவர்களுடன் பயிற்றுவித்த ஆசிரியர்களும் கலந்துகொண்டு தங்களது இளமைக்கால அனுபவங்கள், மறக்க முடியாத சம்பவங்களை நினைவுகூர்ந்து பேசி மகிழ்ந்தனர். அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் +2 முடித்த மாணவ / மாணவிகளின் உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி செய்யதம்மாள் பொறியியல் கல்லூரியில் 13.05.2024 காலை நடைபெறுகிறது. இதில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் உயர் கல்வியில் சேர வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதால் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் +2 முடித்த மாணவ / மாணவிகளின் உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி செய்யதம்மாள் பொறியியல் கல்லூரியில் 13.05.2024 காலை நடைபெறுகிறது. இதில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் உயர் கல்வியில் சேர வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதால் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
ஓரியூரில் பிரசித்தி பெற்ற மட்டுவார் குழலி அம்மன் சமேத சேயூமானார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி சாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு யாக பூஜைகள், சிறப்பு அபிஷேகம் தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அம்பாள் பரிவார தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று பெய்த கனமழையின் பொழுது கமுதக்குடி அருகே உள்ள சுந்தனந்தல் விளக்கு பகுதியில் சத்யராஜ் என்பவர் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது இடி மின்னல் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடல் பரமக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே.11) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கும் 549 தனியார் பள்ளி வாகனங்களின் செயல்பாடு குறித்து வட்டார போக்குவரத்து அலுவலகம், வருவாய், காவல் சார்பில் இன்று கூட்டாய்வு நடந்தது. எஸ்பி சந்தீஷ் ஆய்வு செய்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் ஷேக் முஹமது, வாகன ஆய்வாளர்கள் செந்தில்குமார், பத்மபிரியா, முதன்மைக்கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்யராஜ், பள்ளி துணை ஆய்வாளர் ராமமூர்த்தி பங்கேற்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று ராமநாதபுரத்திலிருந்து மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்த டாடா ஏசி வாகனம் திடீரென நிலைதடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுணர்வை மேம்படுத்தும் வகையில் மாவட்ட காவல் துறையின் சார்பாக கிரிக்கெட் விளையாட்டு போட்டியானது ஆயுதப்படை மைதானத்தில் இன்று (மே 11) துவங்க இருந்தது. ஆனால் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கிரிக்கெட் போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.