India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் முறையாக தரப்படவில்லை என புகார் இருக்கிறதா? இனிமேல் நீங்க செல்லும் போது இது நடந்தால்?? தயங்கமால் மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04567-220508 அழைத்து தெரியப்படுத்துங்க. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். இதை மற்றவர்களு\ம் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க. மறக்காம நீங்க SAVE பண்ணுங்க..
கிராம நிா்வாக அலுவலருக்கு ஒரு உதவியாளா், நகா்ப்புற கிராம நிா்வாக அலுவலருக்கு 2 உதவியாளா்கள் என நியமனம் செய்தால் போதுமானது. ஆனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கிராமக் கணக்குக்கு ஒரு கிராம உதவியாளா் நியமிக்கப்படுகின்றனா். ஒரு கிராம கணக்கு விவரங்களை அறிந்து வட்டாட்சியா் உதவியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் எனவும் இந்த முறையை சரி செய்து தர கிராம நிர்வாக அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேசுவரம் நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீரில் சமீப காலமாக அதிக அளவில் குளோரின் பொடி கலக்கப்படுவதாக கூறப்படுகிறது. முதியவா்கள், பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் இந்தக் குடிநீரைக் குடித்தவுடன் உடல் உபாதைகளால் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆகவே, நகராட்சி நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார்-ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ்அப்-கே வந்துடும். இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க
ராமநாதபுரம் மாவட்டத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் வினியோகம் தொடர்பான குறைதீர் கூட்டம் நாளை (செப். 25) பிற்பகல் 3 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் எண்ணெய் நிறுவனத்தினர் மற்றும் கேஸ் முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம், செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரி (செப். 26), அண்ணா பல்கலைக்கழகம் (அக். 6), கீழக்கரை முகமது சதக் என்ஜினீயரிங் கல்லூரி (அக். 7), பரமக்குடி கணபதி செட்டியார் கல்லூரி (அக். 8) ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இதில், உயர்கல்வி பயில விரும்பும் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். SHARE
இன்று (செப்.23) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இராமநாதபுரம் மாவட்டத்தின் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
பேரறிஞர் அண்ணா பிறந்த தின நெடுந்தூர ஓட்டப்போட்டி ராமநாதபுரம் பட்டணம்காத்தான் இசிஆர் பிரிவில் செப்.28ம் தேதியன்று காலை 6 மணியளவில் நடைபெற உள்ளது. 17 – 25 வயது ஆடவருக்கு 8 கி.மீ, மகளிருக்கு 5 கி.மீ, 25 வயதுமிக்க ஆடவருக்கு 10 கி.மீ, மகளிருக்கு 5 கி.மீ தூரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்கேற்க விரும்புவோர் ராமநாதபுரம் சீதக்காதி, சேதுபதி விளையாட்டரங்கு அலுவலகத்தில் செப்.27 மாலை 5 மணி வரை பெயர் பதியலாம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களின் கோரிக்கைகளை மனுவாக பெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நாளை (செப்.24) கடலாடி வட்டாரம் – பஞ்சாயத்து அலுவலக கட்டிடம், அ.உசிலங்குளம், போகலூர் வட்டாரம் – சமுதாயக்கூடம், மஞ்சூர், ராமநாதபுரம் நகராட்சி – வி.எஸ்.மஹால் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. ஆதார் அட்டை திருத்தம், குடும்ப அட்டை திருத்தம், பட்டா மாற்றம் போன்ற தங்களின் கோரிக்கைகளை முகாமில் மனுவாக அளிக்கலாம்.
ராமநாதபுரம் மக்களே, ஊரக வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. 8, 10th படித்தவர்கள், 18 வயதை கடந்தவர்கள் <
Sorry, no posts matched your criteria.