Ramanathapuram

News April 30, 2025

பரமக்குடி: லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் கைது

image

பரமக்குடி அருகே போகலூரில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று (ஏப்ரல் 29) ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ரூ.2,56,000 லஞ்சம் பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசை, ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர். மேலும், பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

News April 30, 2025

மே 22ல் உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர்

image

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி கிராமத்தில். ஏர்வாடி தர்காவில் அமைந்துள்ள அல் குத்துபுல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷாஹிர் ஒலியுல்லா தர்காவில் சந்தனக்கூடு திருவிழா மே 21, 22 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. அதனை ஒட்டி மே 22 வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்தார்.

News April 30, 2025

திருஉத்தரகோசமங்கையில் நடன நிகழ்ச்சி 

image

திருஉத்தரகோசமங்கையில் அருள்தரும் மங்களேஸ்வரி உடனுறை அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயிலில் மேடையில் நேற்று உலக நடன தினத்தை முன்னிட்டு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தைகள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். ஏராளமானவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

News April 30, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து காவல்துறை விவரம்

image

இன்று (ஏப்ரல் 29) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News April 29, 2025

பரமக்குடிக்கு உள்ளூர் விடுமுறை : கலெக்டர் அறிவிப்பு

image

பரமக்குடி ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் சித்திரை திருவிழா கள்ளழகர் குதிரை வாகனத்தில் பரமக்குடி வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு மே.11 இரவு துவங்கி மறுநாள் (மே.12) அதிகாலை வரை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மே.12 பரமக்குடி வட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இதனை ஈடு செய்யும் பொருட்டு 24.5.2025 வேலைநாளாக அறிவித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News April 29, 2025

இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.28) பெய்த மழை அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அதிகபட்சமாக மண்டபத்தில் 58.02 மில்லி மீட்டர், திருவாடானை 47.6 மில்லி மீட்டர், தங்கச்சிமடம் 30.6 மில்லி மீட்டர், பாம்பன் 30 மில்லி மீட்டர், தொண்டி 9 மில்லி மீட்டர், தீர்த்தாண்டதானம் 7.2 மில்லி மீட்டர், பள்ளமோர்குளம் 3 மில்லி மீட்டர், வட்டனம் 2.6 மில்லி மீட்டர், இராம்நாடு 1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News April 29, 2025

ராமநாதபுரம்: ரயில்வேயில் உடனடி வேலை

image

மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி , இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.18,000 முதல் 36,500 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.

News April 29, 2025

இராமநாதபுரம் மீனவர்கள் வங்கி கணக்கில் ரூ.8000

image

தமிழகத்தில் 2 மாத மீன் பிடி தடைக்காலத்தின் போது மீனவர்கள் மீன்பிடி தொழில் இல்லாமல் பாதிக்கப்படுவதால் குடும்பத்தில் ஒரு மீனவருக்கு ரூ.8000 வரையிலான நிவாரணத்தொகை வழங்கப்படும். இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் 39 ஆயிரத்து 787 பேருக்கு நிவாரணத்தொகை வழங்க மீன் வளத்துறையினர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். நிவாரணத் தொகையை அரசு விரைவில் மீனவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்த உள்ளது. *ஷேர் பண்ணுங்க

News April 28, 2025

இராமநாதபுரம் காவல்துறை தொலைபேசி எண்கள்

image

▶️காவல்துறை கண்காணிப்பாளர் -8300034400
▶️கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர்
குற்றப்பிரிவு 9498181202
பெண்களுக்கு எதிரான குற்றம்- 9498181202
▶️துணை காவல்துறை கண்காணிப்பாளர் -ஊழல் தடுப்பு பிரிவு -9498215697
துணை காவல்துறை கண்காணிப்பாளர்கள்:
▶️இராமநாதபுரம் -9498101616
▶️இராமேஸ்வரம் -9498101619
▶️பரமக்குடி -9498101617
▶️திருவாடானை -9498101621
▶️கீழக்கரை -9498101620
▶️கமுதி -9498101618 *ஷேர்

News April 28, 2025

முதுகுளத்தூர் அருகே மின்னல் தாக்கி பசு மாடு பலி

image

முதுகுளத்தூர் அருகே உள்ள கிழவனேரி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் பசு மாடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று திடீரென பெய்த இடியுடன் மழையில், வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பசு மாடு உயிரிழந்தது. நேற்றைய நாளில் 8 ஆடுகளும் மின்னல் தாக்கி பலியானது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!