Ramanathapuram

News July 9, 2025

உள்ளூர் வங்கியில் ரூ.85,000 ஊதியத்தில் வேலை

image

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும். கடைசி நாள் 24.7.25 ஆகும். SHARE பண்ணுங்க.

News July 9, 2025

ராமநாதபுரம்: ஹஜ் பயணம் போறீங்களா?

image

தமிழ்நாடு அரசு 2026 பற்றிய ஹஜ் பயணம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ராமநாதபுரம் இஸ்லாமிய மக்கள் இம்மாதம் 30ஆம் தேதிக்குள் தங்கள் ஹஜ் பயணத்திற்காக விண்ணப்பிக்க வேண்டும். இந்த <>லிங்கில்<<>> கிளிக் செய்து தங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம். அல்லது, Haj Suvidha என்ற மொபைல் ஆப் மூலமும் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மதம் கடந்து SHARE செய்யுங்கள். யாருக்கேனும் ஒருவருக்கு உதவியாக இருக்கும்.

News July 9, 2025

ராமநாதபுரம் இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்

image

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, சார்பில் இன்று (ஜூலை 8) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு, பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையை தொடர்புகொண்டு உதவி பெறலாம்.

News July 8, 2025

ரூ.93.39 லட்சத்தில் உருவான மீன் அங்காடி வீண் என கேள்வி

image

ராமநாதபுரம், புதிய பேருந்து நிலையம் அருகே 93.39 லட்சம் செலவில் மூன்று ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நவீன மீன் அங்காடி இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் கட்டிடம் சேதமடைந்து பாழடைந்துள்ளது. அரண்மனை பகுதியில் நெரிசலில் இயங்கும் மீன் மார்க்கெட்டை இங்கு மாற்ற நகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

News July 8, 2025

இராமநாதசுவாமி திருக்கோயில் ஆடித்திருக்கல்யாணத் திருவிழா

image

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் ஆடித்திருக்கல்யாணத் திருவிழா நடைபெற உள்ளது. வருகின்ற (19.07.2025) முதல் (04.08.2025)வரை 15 நாட்கள் இத்திருவிழா நடைபெறும்.19.07.2025 சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகின்றன. 30.07.2025 புதன்கிழமை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தற்போது இந்நிகழ்ச்சிகளுக்கான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

News July 8, 2025

ரூ.40,000 சம்பளத்தில் வேலை; நாளை மறுநாள் கடைசி நாள்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவ அதிகாரி, MTS, Data Assistant உள்ளிட்ட 27 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 8th, B.Sc, BBA, BCA, BE/B.Tech, BSMS, BUMS, D.Pharm, Diploma, Nursing படித்தவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க நாளை மறுநாள் ஜூலை 10, கடைசி நாளாகும். தகுதியானவர்களுக்கு மாதம் ரூ.9,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பம் டவுன்லோடு செய்ய இங்கே <>க்ளிக் <<>>செய்யவும். *ஷேர் பண்ணுங்க*

News July 8, 2025

ராமநாதபுரம் மாவட்ட இரவு காவலர்களின் விவரம்

image

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, சார்பில் இன்று (ஜூலை 7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு, பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையை தொடர்புகொண்டு உதவி பெறலாம்.

News July 7, 2025

ராமநாதபுரம்: கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு (1/1)

image

தமிழ்நாடு வருவாய்த் துறையில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில்,ராமநாதபுரத்திற்கு 29 காலிப் பணியிடங்கள் உள்ளது. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 கடைசி நாளாகும். இப்பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், தமிழில் எழுத/படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளம்: ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். சைக்கிள்/ டூவீலர் ஒட்டத் தெரிந்தால் கூடுதல் மதிப்பெண். <<16974346>>மேலும் அறிய<<>>

News July 7, 2025

ராமநாதபுரம் : கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு (1/2)

image

▶️விண்ணப்பதாரர்களுக்கு திறனறிவு தேர்வு, நேர்காணல் ஆகியவை நடத்தப்படும்.

▶️அனைவரும் கட்டாயம் 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

▶️மேலும், தேர்வர்கள் அப்பகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

▶️ விவரங்களுக்கு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் மற்றும் அருகேயுள்ள தாலுகா அலுவலகத்தை நேரில் அணுகலாம்.

News July 7, 2025

ராமநாதபுரம்: கஞ்சா கடத்தல்: 15 நாட்களில் 268 கிலோ பறிமுதல்

image

ராமநாதபுரம் கடற்கரை வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல் அதிகரித்துள்ளது. 15 நாட்களில் 268 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திரா, ஒடிசா, தேனி மலைப்பகுதிகளில் இருந்து கடத்தப்பட்டு, இலங்கைக்கு அனுப்பப்படுகிறது. ஜூன் 22ல் முள்ளிமுனையில் 90 கிலோ, புதுக்கோட்டையில் 100 கிலோ, தீர்த்தாண்டதானத்தில் 78 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசார் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

error: Content is protected !!