India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொண்டி அருகே செங்காளன் வயல் சவேரியார் பட்டினம் கிராமத்தில் தூய பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் தொண்டி பங்குத்தந்தை வியாகுல அமிர்தராஜ் தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி மறையுறை நிகழ்த்தப்பட்டது. ஆந்திர மாநில ஏசு சபை அருட்தந்தை அருள் ஜோ, ஏராளமான இறை மக்கள் கலந்துகொண்டு ஜெபம் செய்து வழிபட்டனர். அதனைதொடர்ந்து தூய பிரான்சிஸ் சவேரியாரின் தேர்ப்பவனி நடைபெற்றது.
விருதுநகர், இலுப்பைக்குளத்தை சேர்ந்தவர் பெரியசாமி (26). ராமநாதபுரத்தில் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் உடன் வேலை பார்த்த மானாமதுரை லட்சுமி (50)க்கும் தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த லட்சுமியின் மகன்கள் வல்லரசு, ராஜபாண்டி ஆகியோர் நேற்று முன்தினம் பெரியசாமியை ராமநாதபுரத்தில் அரிவாளால் வெட்டினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் புகாரின்படி போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
ராமநாதபுரம், பரமக்குடியில் இன்று காலை முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்றைய தினம் வைகாசி அட்சய முகூர்த்தம் என்பதால் பல்வேறு இடங்களில் திருமணங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்காக பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். இதனால் பேருந்து நிலையம், சந்தை கடை, ஆர்ச் போன்ற பகுதிகளில் நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் அதவாது 10 மணி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், இந்தமழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவாவில் தேசிய அளவிலான டென்னிஸ் பால் மகளிர் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் 7 அணிகள் பங்கேற்றன. ராமநாதபுரம் அருகே வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியர் 8 பேர் இடம் பிடித்த தமிழக அணி 3 ஆம் இடம் பிடித்தது. மூன்றாம் இடம் பிடித்து தமிழகத்திற்கும், ராமநாதபுரம் மாவட்டம், வண்ணாங்குண்டு அரசு பள்ளிக்கும், பெருமை மாணவியரை விளையாட்டு ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வேந்தோணி, அரியனேந்தல், சத்திரக்குடி, மஞ்சுர் போன்ற பகுதிகளில் அரை மணி நேரத்துக்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
கோவாவில் தேசிய அளவிலான டென்னிஸ் பால் மகளிர் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் 7 அணிகள் பங்கேற்றன. ராமநாதபுரம் அருகே வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியர் 8 பேர் இடம் பிடித்த தமிழக அணி 3 ஆம் இடம் பிடித்தது. மூன்றாம் இடம் பிடித்து தமிழகத்திற்கும்,
ராமநாதபுரம் மாவட்டம், வண்ணாங்குண்டு அரசு
பள்ளிக்கும், பெருமை மாணவியரை விளையாட்டு ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சிக்குட்பட்டது புடனவயல் கிராமம். இந்த கிராமத்தில் செயல்படுத்தப்படும் சமூக புறக்கணிப்பை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராமநாதபுரம் மாவட்ட தியாகி இமானுவேல் பேரவை சார்பில் திருவாடானை, தொண்டி பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே.18) மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் நிறுவப்பட்டுள்ள ஸ்நேகா அறக்கட்டளை சார்பில் ராமநாதபுரத்தில் இயங்கும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய பயிற்சியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 31.05.24 ஆகும். மேலும் விவரங்களுக்கு https://www.iob.in/careers என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.