Ramanathapuram

News May 22, 2024

ராமநாதபுரத்தில் லஞ்சம்: 16 பேர் கைது

image

ராமநாதபுரத்தில் பல்வேறு துறைகளில் லஞ்சம் பெற்றதாக 5 மாதத்தில் 10 வழக்கு பதிந்து, 6 உயரதிகாரிகள், 7 அதிகாரிகள், 3 புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட மக்கள் லஞ்சம், ஊழல் தொடர்பான புகார்களை dsprmddvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சலில் அனுப்பலாம். 04567-230 036, 9498215697, 9498652169, 9498188390, 9498652166, 9600082798, 9498652167 ஆகிய எண்களிலும் புகாரளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News May 22, 2024

Way2News எதிரொலி: ராம்நாட்டில் உடனடி நடவடிக்கை.

image

ராமநாதபுரம் நகரின் நெருக்கடி மிகுந்த கேணிக்கரை சாலையில் சில தினங்களாக பாதாள சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடியது. துர்நாற்றம் வீசியதால் நோய் பரவும் அபாயத்தால் நகராட்சி நிர்வாகம் உடனடியாக சரிசெய்ய வேண்டி வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில் நேற்று செய்தி வெளியிட்ட 2 மணி நேரத்தில் நகராட்சி நிர்வாகம் உடனடியாக சரிசெய்ததால் பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

News May 21, 2024

மதுரை மேலூர் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு

image

மதுரை மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராதா. இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்ய பட்ட போக்சோ வழக்கு ஒன்றின் விசாரணைக்கு ராமநாதபுரம் விரைவு மகளிர் கோர்ட்டில் ஆரம்பமாகவில்லை. இதைத் தொடர்ந்து இன்று நீதிபதி கோபிநாத் விசாரணைக்கு சாட்சி அளிக்க வராத இன்ஸ்பெக்டர் ராதாவிற்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.

News May 21, 2024

ராமநாதபுரத்தில் 10 செ.மீ மழைப்பதிவு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (மே.20) மழைப்பொழிவான அளவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தொண்டியில் 10 செ.மீட்டரும், தீர்த்தாண்டதானம் பகுதியில் 8 செ.மீட்டரும், வட்டானம் பகுதியில் 7 செ.மீட்டரும், திருவாடானை பகுதியில் 4 செ.மீட்டரும், மண்டபம், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

News May 21, 2024

ராம்நாடு: லாரியின் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி

image

முதுகுளத்தூர் அருகே வடக்கூரைச் சேர்ந்தவர் முருகன் (55), தச்சுத் தொழிலாளி. இவர் நேற்று (மே 20) மதியம் தன்னுடன் வேலை செய்வோருக்கு உணவு வாங்கிக் கொடுத்துவிட்டு, முதுகுளத்தூர் – தேரிருவேலி சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி, இரு சக்கர வாகனத்தை முந்த முயன்றபோது லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

News May 21, 2024

ராம்நாடு அருகே இன்று தேரோட்டம்

image

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் வைகாசி விசாக திருவிழா 9ஆம் திருநாளையொட்டி இன்று (மே 21) மாலை 3 மணியளவில் தேரோட்டம் நடைபெறுகிறது. பெரிய தேரில் சுவாமியின் பிரியாவிடை உடனும் சின்ன தேரில் சினேக வல்லி அம்மனும் சப்பரங்களில் விநாயகர் பால சுப்பிரமணியரும் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்காக தேர் புதுப்பொலிவுடன் தயார் நிலையில் உள்ளது.

News May 20, 2024

ராமநாதபுரம் 12 செ.மீ மழைப்பதிவு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (மே.19) மழைப்பொழிவான அளவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கமுதி பகுதியில் 12 செ.மீட்டரும், பாம்பன், மண்டபம், கடலாடி, ராமேஸ்வரம், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது. ராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 20, 2024

ராம்நாடு: மாம்பழம் கூவிக் கூவி விற்பனை

image

தொண்டி திருவாடானை பகுதியில் உள்ள கிராமங்களில் நான்கு சக்கர வாகனங்களில் பாலாமணி, செந்தூரம் வகை மாம்பழங்கள் ஒலிபெருக்கி மூலம் கூவிக் கூவி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நத்தம், மதுரை பகுதியிலிருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ள மாம்பழம் ஒன்றரை கிலோ 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

News May 20, 2024

ராமநாதபுரம் பாம்பன் பாலம் சிறப்பு!

image

இந்தியாவில் கடலின் குறுக்கே கட்டப்பட்ட முதல் பாலமாகவும், நாட்டின் பொறியியலின் ஒரு அதிசயமாகவும் விளங்குகிறது பாம்பன் பாலம். பாம்பன் ரயில் பாலம் கட்டுவதற்கான முயற்சிகள் 1870களில் பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கைக்கு வர்த்தக இணைப்பை விரிவுபடுத்த முடிவு செய்தபோது தொடங்கியது. இது அதிகாரப்பூர்வமாக 1914 இல் தொடங்கப்பட்டது. சுமார் 2.2 கிமீ வரை நீண்டு, 143 தூண்களுடன் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் இதுவாகும்.

News May 20, 2024

ராமநாதபுரம்: ஒரே நாளில் இங்கு இவ்வளவு மழையா?

image

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மே 14 முதல் கோடை மழை விட்டுவிட்டு பெய்துவருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ச்சியாகி உள்ளது. இந்நிலையில், இன்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் கமுதி 124.40 மிமீ, முதுகுளத்தூர் 48 மிமீ, மண்டபம் 14, பாம்பன் 13.90, கடலாடி 13, ராமேஸ்வரம் 9, தங்கச்சிமடம் 8.60, பரமக்குடி 5.90, வாலிநோக்கம் 2.60,
ராமநாதபுரம் 2 மிமீ மழை பெய்துள்ளது.

error: Content is protected !!