Ramanathapuram

News May 23, 2024

ராமநாதபுரம்: ஆலயத்தில் திருத்தேர் பவனி

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே குணப்பனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள புனித மைக்கேல் அதிதூதர் ஆலயத்தில் திருத்தேர் பவனி இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆலயத்தைச் சுற்றிலும் கிராமத்தின் அனைத்துத் தெருக்களிலும் திருத்தேர் பவனி‌ நடைபெற்றது. முன்னதாக கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மனம் உருகி வழிபாடு நடத்தினர்.

News May 22, 2024

ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் நன்றி

image

இராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் எழுதியுள்ள கடிதத்தில் இராமநாதபுரம் ஆட்சியராக நான் பொறுப்பேற்று இன்றுடன் (22.05.2024) ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். எனது ஒரு வருட கால மாவட்ட ஆட்சியர் பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

News May 22, 2024

நாட்டுப்படகு மீனவர்களுக்கு எச்சரிக்கை

image

வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக நாளை (23.5.201) முதல் 26.5.24 வரை கடலின் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிமீ. அதிகபட்சமாக 65 கிமீ வரை காற்று வீசக்கூடும். இதனால் மண்டபம் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வழங்கும் வரை தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளம், மீனவர் நலத்துறை
உதவி இயக்குனர் சிவக்குமார் இன்று தெரிவித்தார்.

News May 22, 2024

திருவாடானை, தொண்டி பகுதியில் மின்தடை

image

திருவாடானை துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை மே 23ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை மின் தடை செய்யப்படும். இதனால் திருவாடானை, தொண்டி துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்படும் என உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயக மூர்த்தி அறிவித்துள்ளார்.

News May 22, 2024

ராமநாதபுரத்தில் நாளை கனமழை

image

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை (மே.23) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யக்கூடும்

News May 22, 2024

திருவாடானை அருகே வீடு இடிந்து சேதம்

image

திருவாடானை தாலுகா டி. நாகனி ஊராட்சி ஆதியாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி பெரியக்காள். இவருக்கு சொந்தமான ஓட்டு வீடு கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக இன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டின் ஒரு பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்தது. தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

News May 22, 2024

19 அரசு பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு

image

திருவாடானை தாலுகாவில் தினையத்தூர், எம்.ஆர். பட்டினம் உள்பட 9 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், தொண்டி, திருவாடானை
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நம்புதாளை, திணைக்காத்தான் வயல் அரசு உயர்நிலைப் பள்ளி என 19 அரசு பள்ளிகளுக்கு ரூ 2.98 லட்சம் மதிப்பில் 26 ஸ்மார்ட் போர்டுகளை ஓ.என்.சி.சி நிறுவனம் தனது சி.எஸ்.ஆர். நிதியின் மூலம் வழங்கி உள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News May 22, 2024

ராமநாதபுரம்: தொடர் மழைக்கு வீடு இடிந்து சேதம்

image

திருவாடானை தாலுகாவில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து அதிக மழை பெய்தது. இதில்அமரன்வயல் கிராமத்தைச் சேர்ந்த ஆண்டி என்பவர் மகன் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் இன்று அதிகாலை மேற்கூரை ஓடுகள் உடைந்து விழுந்தன. இதில் வீட்டிலிருந்த பொருட்கள் சேதம் அடைந்தன. அதிஷ்டவசமாக அப்போது யாரும் இல்லாததால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. தகவல் அறிந்த திருவாடானை வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர்.

News May 22, 2024

ராம்நாடு கலெக்டர் எச்சரிக்கை அறிவிப்பு

image

குளச்சல் முதல் கீழக்கரை வரையிலான தென் தமிழக கடற்கரை பகுதிகளில் இன்று கடல் அலை 0.5 மீட்டர் முதல் 3.3 மீட்டர் வரை உயரக்கூடும். மேலும் கடலில் நீரோட்டம் அதிவேகத்தோடு இருக்கக்கூடும். எனவே மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், கடற்கரையோரம் பேரலைகள் எழக்கூடும் என்பதால் மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்கும்படி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் நேற்றிரவு அறிவித்துள்ளார்.

News May 22, 2024

ராமநாதபுரத்தில் லஞ்சம்: 16 பேர் கைது

image

ராமநாதபுரத்தில் பல்வேறு துறைகளில் லஞ்சம் பெற்றதாக 5 மாதத்தில் 10 வழக்கு பதிந்து, 6 உயரதிகாரிகள், 7 அதிகாரிகள், 3 புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட மக்கள் லஞ்சம், ஊழல் தொடர்பான புகார்களை dsprmddvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சலில் அனுப்பலாம். 04567-230 036, 9498215697, 9498652169, 9498188390, 9498652166, 9600082798, 9498652167 ஆகிய எண்களிலும் புகாரளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!