Ramanathapuram

News March 28, 2024

ராம்நாடு எஸ்பி தலைமையில் குற்ற தடுப்பு கலந்தாய்வு

image

ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்பி சந்தீஷ் தலைமையில் நேற்று மாதாந்திர குற்றத்தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. ஏடிஎஸ்பி அருண் உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி மாவட்டத்தில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.

News March 27, 2024

ராம்நாடு: ஓபிஎஸ்ஸுக்கு வந்த அடுத்த சிக்கல்

image

ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இவரின் பெயர் ஒற்றுமையைப் பயன்படுத்தி நேற்று 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று பரமக்குடி தாலுகா கங்கைகொண்டான் மலையாண்டி மகன் பன்னீர்செல்வம் (75) என்பவர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். ஆக மொத்தம் ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் மொத்தம் 6 பேர் களத்தில் உள்ளனர்.

News March 27, 2024

தேர்தல் பணி: ஆய்வுசெய்த பொது பார்வையாளர்

image

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொது-பார்வையாளர் பண்டாரி யாதவ் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு அறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு ஆகியோர் இருந்தனர்.

News March 27, 2024

தேர்தல் பொது பார்வையாளரிடம் புகார் அளிக்கலாம்

image

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி தேர்தல் பொது பார்வையாளராக பண்டாரியாதவ் நியமனம் செய்யப்பட்டு, ராமநாதபுரம் விருந்தினர் மாளிகை அறை எண் 1இல் தங்கி பணியாற்றிவருகிறார். தொகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் (ம) வாக்காளர்கள் தங்களது கோரிக்கைகள் (ம) புகார்களை தினசரி காலை 10 மணிமுதல் 11 மணி வரை நேரிலோ (அ) 9361541271, 04567-230416 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

News March 27, 2024

தொண்டி அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம்

image

தொண்டி: திருநகர் பகுதியில் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் தொண்டி போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசார் அடையாளம் தெரியாத சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த முதியவர் குறித்து விசாரணை நடத்தினர்.

News March 27, 2024

ராமநாதபுரம்: என்ஐஏ அதிகாரிகள் சோதனை

image

தேவிபட்டினம் பழங்கோட்டை தெருவை சேர்ந்தவர் அன்பு பகுர்தீன் என்பவரின் மகன் சேக்தாவூத் (38). இவரது வீட்டில் என்ஐஏ பிரிவு டிஎஸ்பி முருகன் தலைமையிலான போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சேக்தாவூத் மற்றும் அவரின் தந்தை அன்பு பகுர்தீன் வீடுகளில் நடத்தப்பட்டுவரும் இந்த சோதனை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News March 27, 2024

தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

image

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. இருப்பினும் பெரும்பாலான வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை மார்ச் 25ஆம் தேதி தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இன்றுடன் (மார்ச் 27) வேட்புமனு தாக்கல் நிறைவுபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் இன்று தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 26, 2024

ராமநாதபுரத்தில் மேலும் 3 ஓபிஎஸ்’கள் மனுதாக்கல்

image

நாமநாதபுரம் மக்களவை தொகுதியில் சுயேட்சையாக ஓ.பி.எஸ் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஓ.பி.எஸ் என்ற பெயரில் நேற்று ஒருவர் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தார். அதேபோல் இன்று மேலும் 3 பேர் ஓபிஎஸ் என்ற பெயரில் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளனர். ஒரே பெயரில் 5 பேர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 26, 2024

மாணக்கருக்கு வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ்

image

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று தமிழ் பாடப்பிரிவு தேர்வு நடைபெறுகின்றது. இந்நிலையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் இராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியின் வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவியர் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற தனது நல்வாழ்த்து சமூக வலைதளம் X மூலம் தெரிவித்துள்ளார்.

News March 26, 2024

ஓபிஎஸ்க்கு ஆதரவாக அண்ணாமலை

image

இராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் தனி சின்னத்தில் போட்டுயிடுகிறார். நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 5ஆம் தேதி இராமநாதபுரம் வருகிறார். பிரச்சாரத்திற்கு வரும் அண்ணாமலைக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்க பாஜக கூட்டணி கட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!