India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிழக்கு ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட புது மடத்தில் SDPI – அஇஅதிமுக கூட்டணியின் தேர்தல் பிரச்சார அலுவலகம் நேற்று (ஏப்ரல் 1) திறக்கப்பட்டது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பா.ஜெயப்பெருமாள் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் SDPI கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், கட்சித் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் காரேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் நீலமேகம் மகன் பாண்டி (45), இவர் ராமநாதபுரத்தில் உள்ள மதுபான பாரில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு மது அருந்தி விட்டு குடி போதையில் நயினார் கோயில் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே படுத்து தூங்கி உள்ள நிலையில் இறந்துள்ளார். அவரது மனைவி கிருஷ்ணவேணி புகாரில் உடலை கைப்பற்றி பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.
இராமநாதபுரம் நகராட்சி பகுதியில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் ஸ்லிப் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வாக்காளர்கள் யாரும் விடுபடாமல் அனைவரது வீட்டிலும் பூத் ஸ்லிப் ஊழியர்கள் வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெயப்பெருமாள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (மார்ச் 31) பரமக்குடியில் நடிகை விந்தியா ஜெயப்பெருமாளை ஆதரித்து பரமக்குடி பேருந்து நிலையம் முன்பாக இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்தி முனியசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கூட்டணி கட்சியின் சார்பில் சுயேட்சையாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து வரும் 4-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமநாதபுரத்தில் வாகன பிரச்சாரம் செய்கிறார். ராமநாதபுரம் பழைய பஸ் நிலையம் தொடங்கி அரண்மனை வரையுள்ள இடங்களில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து அமித்ஷா பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான நகைகள் மாயமாகியுள்ளன. இதனையறிந்த சமஸ்தான தேவஸ்தானத்தின் திவான், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் தீவீர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவில் நகை மாயமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலைப் போராட்ட வீரர் இராமநாதபுரம் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் 264வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் MA.முனியசாமி தலைமையில் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பா.ஜெயப் பெருமாள் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் பா.ஜெயபெருமாள், அதிமுக நிர்வாகிகளுடன் ரெகுநாதபுரம் வல்லபாய் ஐயப்பன் திருக்கோயிலில் இன்று வழிபாடு செய்த பின் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பதற்கான பிரச்சார பயணத்தை கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து துவங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் முனியசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் சென்றனர்.
ராமநாதபுரம், திருவாடானை தாலுகா சோளியக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு சொந்தமான கருவாட்டு கம்பெனியில் நேற்று(மார்ச் 29) இரவு திடீரென தீ பற்றியுள்ளது. தகவல் அறிந்த திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையிலான குழுவினர், விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து நீண்ட நேர போராட்டத்திறகு பின் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது.
ராமநாதபுரம் பட்டணம் காத்தான் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ராமநாதபுரம் சட்டமன்றத்திற்குட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக, அமமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.