Ramanathapuram

News July 5, 2025

ரூ.5 லட்சம் பெற கலெக்டர் அழைப்பு

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு விவசாய நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. IOB வங்கியில் 6% வட்டியில் கடன் கிடைக்கும். முத்திரைத்தாள், பதிவு கட்டணம் முழுமையாக விலக்கு. விண்ணப்பிக்க <>க்ளிக்<<>> செய்யவும். மேலும் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகவும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

News July 5, 2025

ராமநாதபுரம் மாவட்ட இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்

image

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, சார்பில் இன்று (ஜூலை 4) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு, பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையை தொடர்புகொண்டு உதவி பெறலாம்

News July 4, 2025

ராமநாதபுரம் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு

image

ராமநாதபுரம் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் Medical Officer, MTS, Data Assistant ஆகிய பதவிகளுக்கு மொத்தமாக 27 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 10-07-2025. 8th, B.Sc, BBA, BCA, BE/B.Tech, BSMS, BUMS, D.Pharm, Diploma, Nursing படித்த தகுதியான நபர்களுக்கு ரூ.9,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.<>லிங்க்<<>> *ஷேர் பண்ணுங்க

News May 8, 2025

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வேலை

image

இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லேப் டெக்னீசியனுக்கு நேர்முகத் தேர்வு நாளை (09-05-2025) நடைபெற உள்ளது. இதற்கு தகுதி உடையவர்கள் தங்களது சுய விவரங்களை (Resume) இன்று (மே.8) இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாம் தளத்தில் உள்ள அலுவலகத்தில் நேரில் சென்று ஒப்படைக்க வேண்டும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க

News May 8, 2025

ராமநாதபுரம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே.08) வெப்ப சலனம் காரணமாக மாவட்டத்தின் உள் பகுதிகளில் பிற்பகல் மற்றும் மாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் குறிப்பாக பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, பார்த்திபனூர், அபிராமம், நயினார் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என ராமநாதபுரம் காலநிலை அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 7, 2025

ராமநாதபுரம் மாவட்ட இரவு நேர ரோந்து பணி விவரம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே 1) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் விவரங்கள் வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களில் தங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் புகைப்படத்தில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.

News May 7, 2025

இறந்து அழுகிய நிலையில் கணவன் – மனைவி உடல்கள் மீட்பு

image

காட்டு பரமக்குடி மேலத்தெரு பகுதியில் உள்ள வீட்டில், இன்று இறந்து அழுகிய நிலையில் நாகசுப்பிரமணியன்(75) மற்றும் அவரது மனைவி தனலட்சுமி(70) ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்களா? இல்லை கொலை நடந்துள்ளதா? என்பது குறித்து ராமநாதபுரம் தடவியல் துறை போலீசார் உதவியுடன், பரமக்குடி நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News May 7, 2025

தர்பூசணி பழத்தில் கலப்படம் இல்லை – தோட்டக்கலைத்துறை

image

தர்பூசணி பழங்களில் கலப்படம் செய்யப்படுவதாக உண்மைக்கு முரணான செய்தி பரவியது. இதையடுத்து தர்பூசணி அதிகம் விளையும் மாவட்டங்களில் உணவு பாதுகாப்புத் துறையினருடன் இணைந்து ரசாயன ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தர்பூசணி பழத்தில் சுவைக்காக செயற்கை ரசாயனம் கலப்படம் இல்லை என தெரிய வந்துள்ளது. எனவே மக்கள் தயக்கமின்றி தர்பூசணி பழங்களை சாப்பிடலாம். இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

News May 7, 2025

திருஉத்தரகோசமங்கை சித்திரை திருவிழா நிகழ்ச்சி விவரம்

image

திரு உத்தரகோசமங்கையில் அமைந்துள்ள மங்களநாதர் – சமேத மங்களநாயகி அம்மன் ஆலயம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பலரும் எதிர்பார்த்த அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயிலில் சித்திரை திருவிழா நிகழ்ச்சியின் அழைப்பிதழ் நேற்று(ஏப்.30) வெளியிடப்பட்டது. இன்று 01.05.2025 முதல் 12.05.2025
(சித்திரை 18 – 29) வரையிலான திருவிழாவின் நிகழ்ச்சி விவரங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.*ஷேர் பண்ணுங்க

News May 7, 2025

மாவட்ட காவல்துறை பணி நிறைவு பாராட்டு விழா

image

இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து 30.04.2025ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள சார்பு ஆய்வாளர்கள் லாரண்ஷ், ஆசைதம்பி, விஜயகுமார், இளங்கோ மற்றும் விருப்ப ஓய்வு பெற உள்ள சிறப்பு சார்பு ஆய்வாளர் ராமமூர்த்தி, ஜான்பாபு ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்,IPS., நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

error: Content is protected !!