India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரத்தில் 30% தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முறையான கையெழுத்து இல்லாததால் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் இன்று 18வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
2024 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் மொத்தம் 68.18% வாக்குகள் பதிவாகி உள்ளன. வேட்பாளராக திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும், அதிமுக சார்பில் பா.ஜெயபெருமாளும், பாஜக கூட்டணி சார்பில் Ex முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Way2News-உடன் இணைந்திருங்கள்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் இலவச தரிசன அனுமதி சீட்டுகளை உள்ளூர் பக்தர்களுக்கு கொடுக்க மறுத்து வரும் கோயில் நிர்வாக மேலாளர் மாரியப்பன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, இந்து அறநிலையத்துறை இணை ஆணையரிடம் இந்திய கம்யூ. சார்பில் இன்று மனு கொடுக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்காவிட்டால் 14.6.24 அன்று தேவஸ்தான அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என
இந்திய கம்யூ
நகர் செயலர் செந்தில்வேல்
கூறினார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அனுமார் கோதண்டராம சுவாமி திருக்கோவிலில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சண் சம்பத்குமார் ஏற்பாட்டில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சேர்மன் கருணா, இளைஞர் அணி நிர்வாகிகள் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
இராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் தன்னாட்சி கல்லூரிகளின் பேராசிரியர் மேம்பாட்டு மையம் சார்பில் பேராசிரியர்களின் பணி மற்றும் விளைவுகள் சார்ந்த கல்வி குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் பேராசிரியர் மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் கிருபானந்தசாரதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக துணை இயக்குநர் செந்தில்குமார், பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி – ராமநாதபுரம் – திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16849/16850) ராமநாதபுரம் – மானாமதுரை – ராமநாதபுரம் இடையே ஜூன் 30 ஆம் தேதி வரை வெள்ளி, ஞாயிறுக்கிழமை தவிர இதர 5 நாட்களில் தண்டவாளப் பணி பராமரிப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை பொதுமக்கள் மற்றும் பயணிகள் கவனத்திற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பரமக்குடியை அருகே சோமநாதபுரம் பகுதி சேர்ந்த பிரேம்குமார் மீது எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் கடந்த 2018ம் ஆண்டு பதிவான வழக்கில் இவரை போலீசார் தேடி வந்தனர். இதனை தொடர்ந்து காவல் துறை சார்பில் பிரேம்குமார் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் சிங்கப்பூரிலிருந்து நேற்று காலை மதுரை விமான நிலையத்திற்கு பிரேம்குமார் வந்த பொழுது குடியேற்றத்துறை அதிகாரிகள் எமனேஸ்வரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தில் வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் இன்று 6ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் ஐவர் கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய கால்பந்தாட்ட வீரர் சிவசக்தி நாராயணன் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழகம் முழுவதுமிருந்து 32 அணிகள் கலந்துகொண்டன. பின் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவிகள் மேற்படிப்பு படிக்க புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழி கல்வியில் பயின்ற மாணவிகள் இத்திட்டத்தில் கடந்த ஆண்டில் 42 கல்லூரிகளில் 3083 மாணவிகள் பயன்பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.