India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் நவாஸ்கனியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் பரப்புரை மேற்கொள்ள ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த
முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸை ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ வரவேற்றார்.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நேற்றிரவு திருவாடானை அருகே உள்ள எஸ்.பி.பட்டினத்தில் பிரச்சாரத்தில் பேசுகையில், இந்த தொகுதியில் 5 பேர் என் பெயரிலேயே போட்டியிட்டு குழப்ப பார்க்கிறார்கள். ஆனால், அவர்கள் வெறும் ‘ஒ’பிஎஸ்-கள்தான். நான் ஜெ. அடையாளம் காட்டிய ‘ஓ’பிஎஸ் (ஓ-வை குறிப்பிடுகையில் ஓ….. என நீளமாக இழுத்துச் சொன்னார்) என்றார். இது அங்கு சிரிப்பலையை ஏற்படுத்தியது.
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 தொகுதிகளில் AVSC (85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள்) சுமார் 1722 நபர்கள், AVPD (மாற்றுதிறனாளி வாக்காளர்கள்) 1844 நபர்கள் ஆக மொத்தம் சுமார் 3566 நபர்களுக்கு தபால் வாக்குச்சீட்டு வழங்கும் குழு ஏப்ரல் 5 முதல் 9 முடிய இல்லம் தேடிவருவர். அப்போது தங்களது தபால் வாக்கினை செலுத்தலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பள்ளி மாணவர்களை பயன்படுத்தியதாக சமூக வலைதளத்தில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில் அதன் உண்மைத் தன்மையினை கீழக்கரையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென மாவட்டத் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் நவாஸ் கனிக்கு ஆதரவாக இன்று பரமக்குடி அருகே நயினார் கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட அக்கிரமேசி கிராமத்தில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் பொதுமக்களிடையே தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது எடப்பாடி குறித்து பேசுகையில் கிராம மக்களுக்கும் கருணாசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு சலசலப்பு ஏற்பட்டது.
நடப்பாண்டில் கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சுயேட்சை வேட்பாளர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ராமநாதபுரத்தில் இன்று
(ஏப்ரல் 3) பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட பாஜக நிர்வாகிகள் மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் இ.எம்.டி. கதிரவன், ஜி.பி.எஸ்.நாகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடிகளை ஆட்சியர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டார். பின்பு கோகுல் நகர் பகுதியில் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கி தொடங்கிவைத்தார். பேருந்து நிலையத்தில் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களால் வரையப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு ஓவியங்களைப் பார்வையிட்டார். உடன் வட்டாட்சியர் சடையாண்டி, டிஎஸ்பி சின்ன கண்ணு, இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி உடனிருந்தனர்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் நவாஸ் கனிக்கு ஆதரவாக முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் நடிகருமான கருணாஸ் நயினார் கோவிலில் இன்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். முன்னதாக முத்துராமலிங்கத் தேவர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சக்தி, கவுன்சிலர் மணிமன்னன் உட்பட கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.