India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் இதுவரை நடைபெற்ற நான்கு சுற்று முடிவில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட நவாஸ் கனி 44,715 வாக்குகளும் பாஜக ஆதரவில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 24,782 வாக்குகளும் பெற்றுள்ளனர் தொடர்ந்து நவாஸ்கனிக்கு ஏறு முகமாக இருப்பதால் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டார். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பின்னடைவில் உள்ளார். 11 மணி நிலவரப்படி ஓபிஎஸ் 17295 வாக்குகள் பெற்று திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனியை விட 14658 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் நடைபெற்று முடிந்த தேர்தலில் இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வரும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் போட்டியிட்ட நவாஸ் கனி இதுவரை நடைபெற்ற மூன்று சுற்றில் 12,322 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். இதனால் இவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் வாக்கு எண்ணும் பணி அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று காலை 8 மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேர்தல் முன்னணி நிலவரத்தை திமுக தலைமையிலான இந்திய கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி எம்பி, ஊடக மையத்தில் செய்தியாளர் அறையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நேரலை முடிவுகளை பார்த்து மகிழ்ந்தார்.
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது முதல் சுற்று முடிவான நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட நவாஸ் கனி 6772 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பின்னடைவு பெற்றுள்ளார்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பதிவான 30 விழுக்காடு தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இத்தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரத்தில் 30% தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முறையான கையெழுத்து இல்லாததால் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் இன்று 18வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
2024 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் மொத்தம் 68.18% வாக்குகள் பதிவாகி உள்ளன. வேட்பாளராக திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும், அதிமுக சார்பில் பா.ஜெயபெருமாளும், பாஜக கூட்டணி சார்பில் Ex முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Way2News-உடன் இணைந்திருங்கள்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் இலவச தரிசன அனுமதி சீட்டுகளை உள்ளூர் பக்தர்களுக்கு கொடுக்க மறுத்து வரும் கோயில் நிர்வாக மேலாளர் மாரியப்பன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, இந்து அறநிலையத்துறை இணை ஆணையரிடம் இந்திய கம்யூ. சார்பில் இன்று மனு கொடுக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்காவிட்டால் 14.6.24 அன்று தேவஸ்தான அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என
இந்திய கம்யூ
நகர் செயலர் செந்தில்வேல்
கூறினார்.
Sorry, no posts matched your criteria.