India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் காணை நோய் தடுப்பூசி 5-வது சுற்று பணி ஜூன் 10 முதல் 21 நாள், விடுபட்ட கால்நடைகளுக்கு ஜூலை 10 வரை தடுப்பூசி பணி முகாம் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நடைபெறவுள்ளது. தங்கள் கிராமத்தில் முகாம் நடைபெறும் நாளில்
கால்நடை வளர்ப்போர் தங்கள் மாட்டினங்களை அழைத்துச் சென்று தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம் ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (ஜுன் 6) நாட்டு படகுகள் ஆய்வு செய்யப்படும் என மீன்வளத்துறை உதவி இயக்குநர் கோபிநாத் தெரிவித்துள்ளார். மேலும் ஆய்வின் போது படகுகளின் தரம், உறுதி, தயாரிக்கப்பட்ட தேதி, கடலுக்குள் சென்று ஆபத்தில்லாமல் மீன் பிடிக்க தகுதியானதா என சரிபார்க்கப்படும். படகு உரிமையாளர்கள் பதிவு சான்று, மீன்பிடி உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரத்தில் நடந்து முடிந்த மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர், முன்னாள் (இன்னாள்) எம்பி உட்பட 25 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் நவாஸ்கனி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். ஓபிஎஸ், அதிமுக, நாதக அடுத்தடுத்த இடங்களை பிடித்த நிலையில் நோட்டா 6295 வாக்குகள் பெற்று 8வது இடத்தை பிடித்தது. இதனால் போட்டியிட்ட 18 வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளியது.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட தனக்கு லட்சக்கணக்கான வாக்குகளை அளித்த ராமநாதபுரம் தொகுதி வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றி. மக்கள் தீர்ப்பை ஏற்று தோல்வியை கண்டு துவளாமல் தொடர்ந்து பணியாற்றி ஜெயலலிதா வழி ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் அமைக்க அனைவரும் பாடுபட வேண்டும் என முன்னாள் முதல்வர்
ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மக்களவை தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி 5,09,664 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். ஓ.பன்னீர்செல்வம் 3,42,882 வாக்குகள் பெற்று 2ம் இடம் பிடித்தார். 3வது இடத்திற்கு நடந்த கடும் போட்டியில் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் 99,780 வாக்குகளும்ஸ நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திரபிரபா 97,672 வாக்குகளும் பெற்றனர், 3ம் இடத்திற்கான வாக்கு வித்தியாசம் 2108.
“அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் இராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நான் போட்டியிட்ட நிலையில், என்னுடைய பெயரிலேயே பல சுயேச்சைகள் நிறுத்தி என்னை வீழ்த்த கங்கணம் கட்டிக் கொண்டு சிலர் பணியாற்றிய நிலையில், என்னுடைய சுயேச்சை சின்னமாம் ‘பலாப்பழம்’ சின்னத்தை கண்டறிந்து லட்சக்கணக்கான வாக்குகளை அளித்துள்ள இராமநாதபுரம் தொகுதி மக்களுக்கு நன்றி” என ஓபிஎஸ் தெரித்துள்ளார்.
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளராக நவாஸ்கனி ஏணி சின்னத்தில் போட்டியிட்டார். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற மொத்தம் 491052 வாக்குகள் பெற்று 161463 வாக்குகள் வித்தியாசத்தில் நவாஸ் கனி வெற்றி பெற்றார் . ஓபிஎஸ் 329589, ஜெயபெருமாள் அதிமுக 96182, சந்திரகலா ஜெயபால் நாதக 93506 வாக்குகள் பெற்றுள்ளனர்.
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளராக நவாஸ்கனி ஏணி சின்னத்தில் போட்டியிட்டார். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் நவாஸ்கனி 422156 வாக்குகள் பெற்று 139191 வாக்குகள் வித்தியாசத்தில் நவாஸ் கனி வெற்றி பெற்றார் . ஓபிஎஸ் 282965 , ஜெயபெருமாள் அதிமுக 85483, சந்திரகலா ஜெயபால் நாதக 83157 வாக்குகள் பெற்றுள்ளனர்.
ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நவாஸ்கனி முன்னிலையில் உள்ளார். இரண்டாவது இடத்தில் ஓபிஎஸ் இருக்கும் நிலையில் மூன்றாவது இடத்திற்கு நாம்தமிழர்-அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மாலை 5 மணி நிலவரப்படி ஜெயபெருமாள் (அதிமுக) 72183, சந்திரபிரபா ஜெயபால் (நாதக) 71022 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்கான ரேஸில் உள்ளனர்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ்கனி 303317 வாக்குகள் பெற்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் 201850 ஐ விட 101467 வாக்குகள் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் ஜெய பெருமாள் 61800 பெற்றுள்ளனர்.இதில் சுயேட்சையாக போட்டியிட்ட ஓபிஎஸ் கடும் பின்னடைவை சந்தித்து இருக்கிறார்.
Sorry, no posts matched your criteria.