India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என இஸ்லாமிய பெண் சபீனா என்பவர் கிராமம் கிராமமாக சென்று தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் வெற்றிபெற்றால் தொகுதி வளர்ச்சி பெறும் என பெண்களிடம் விளக்கி வருகிறார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் தேசிய கூட்டணி வேட்பாளர் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை ஆதரித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை இன்று மதியம் பிரசாரம் செய்தார். பிரதமர் மோடிக்கு பிடித்த அரசியல் தலைவர் ஓபிஎஸ், ஜெயலலிதாவின் முழு நம்பிக்கையை பெற்றவர் ஓபிஎஸ். நாடாளுமன்றம் செல்லும் போது உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத். தேனி எம்பியாக உள்ள இவர் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பரப்புரை செய்ய வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வை சந்தித்துப் பேசினார்.
ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைக்கும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக, தேமுதிக கூட்டணி கட்சி ஆதரவுடன் இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஜெயபெருமாளை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் கமுதி பேருந்து நிலையம் அருகே இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். மாவட்டத்தின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற பாராளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும் எனவும் உறுதியளித்தார். ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தேமுதிக மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் இந்திய கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கை இன்று இரவு ராமநாதபுரத்தில் வெளியிடப்பட்டது.
துணைத்தலைவரும் வேட்பாளருமான நவாஸ் கனி, மாநில பொதுச் செயலர் அப்துல் சமது, மாநில பொருளர் ஷாஜகான், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் ஆகியோர் வெளியிட்டனர்.
ராமேஸ்வரத்திலிருந்து டிப்பர் லாரி ராமநாதபுரத்திற்கு இன்று மாலை சென்றது. மண்டபம் அருகே குஞ்சார்வலசை சோதனை சாவடி அருகே சென்ற போது எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ ஓட்டுநர், 4 பெண்கள் படுகாயமடைந்தனர். விபத்தில் சிக்கியோரை தீயணைப்பு வீரர்கள், போலீசார் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுப்பினர்.
இது குறித்து மண்டபம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மாலை 7 மணி வரை) லேசானது முதல் மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மணிக்கு 30 – 40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஏப்ரல் 12) அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் தலைமையில் அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி மேற்கொண்டனர்.
ராமநாதபுரம் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் பணியில் ஈடுபட்டுவரும் அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் (ம) காவல்துறை அலுவலர்கள் ஆகியோருக்கு தபால் வாக்களித்திட விண்ணப்பித்தவர்களுக்கு ஆட்சியரகத்தில் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலீசாருக்கு வரும் 13ஆம் தேதி அன்றும், இதர அரசுத்துறை அலுவலர்களுக்கு 14, 15ஆம் தேதிகளிலும் தபால் வாக்களிக்கலாம் என தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.