Ramanathapuram

News March 27, 2024

ராமநாதபுரம்: என்ஐஏ அதிகாரிகள் சோதனை

image

தேவிபட்டினம் பழங்கோட்டை தெருவை சேர்ந்தவர் அன்பு பகுர்தீன் என்பவரின் மகன் சேக்தாவூத் (38). இவரது வீட்டில் என்ஐஏ பிரிவு டிஎஸ்பி முருகன் தலைமையிலான போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சேக்தாவூத் மற்றும் அவரின் தந்தை அன்பு பகுர்தீன் வீடுகளில் நடத்தப்பட்டுவரும் இந்த சோதனை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News March 27, 2024

தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

image

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. இருப்பினும் பெரும்பாலான வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை மார்ச் 25ஆம் தேதி தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இன்றுடன் (மார்ச் 27) வேட்புமனு தாக்கல் நிறைவுபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் இன்று தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 26, 2024

ராமநாதபுரத்தில் மேலும் 3 ஓபிஎஸ்’கள் மனுதாக்கல்

image

நாமநாதபுரம் மக்களவை தொகுதியில் சுயேட்சையாக ஓ.பி.எஸ் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஓ.பி.எஸ் என்ற பெயரில் நேற்று ஒருவர் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தார். அதேபோல் இன்று மேலும் 3 பேர் ஓபிஎஸ் என்ற பெயரில் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளனர். ஒரே பெயரில் 5 பேர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 26, 2024

மாணக்கருக்கு வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ்

image

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று தமிழ் பாடப்பிரிவு தேர்வு நடைபெறுகின்றது. இந்நிலையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் இராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியின் வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவியர் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற தனது நல்வாழ்த்து சமூக வலைதளம் X மூலம் தெரிவித்துள்ளார்.

News March 26, 2024

ஓபிஎஸ்க்கு ஆதரவாக அண்ணாமலை

image

இராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் தனி சின்னத்தில் போட்டுயிடுகிறார். நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 5ஆம் தேதி இராமநாதபுரம் வருகிறார். பிரச்சாரத்திற்கு வரும் அண்ணாமலைக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்க பாஜக கூட்டணி கட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

News March 25, 2024

ராமநாதபுரம் அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

image

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட அதிமுக வேட்பாளர் ஜெய பெருமாள், மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். மாவட்ட செயலர் முனியசாமி, முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, மணிகண்டன், பரமக்குடி சட்டமன்ற முன்னாள் எம்எல்ஏ சதன் பிரபாகர் உடனிருந்தனர்.

News March 25, 2024

திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனி வேட்புமனு தாக்கல்

image

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட திமுக தலைமையிலான இந்திய கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அமைச்சர் ராஜகண்ணப்பன், திமுக மாவட்ட செயலர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, சட்டமன்ற உறுப்பினர்கள் முருகேசன், ராம.கருமாணிக்கம் உடனிருந்தனர்.

News March 25, 2024

ராம்நாடு: வேட்புமனுவை தாக்கல் செய்தார் ஓபிஎஸ்

image

நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். முன்னதாக ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனூரில் சாலையில் வழிநெடுகிலும் கூட்டணிக் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செல்வவிநாயகர் ஆலயத்தில் வேட்பு மனுவை பூஜை செய்து தரிசனம் செய்தார். தொடர்ந்து படிவத்தில் அங்கேயே கையெழுத்திட்டார்.

News March 25, 2024

அதிமுகவில் ஐக்கியமான மாற்று கட்சியினர்

image

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம், சாயல்குடி அருகே இதம்பாடல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திமுக, அமமுக கட்சியினர் மற்றும் ஓபிஎஸ் அணி ஆதரவாளர்கள்
ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமி, அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா ஆகியோர் முன்னிலையில்
அதிமுகவில் நேற்று மாலை இணைந்தனர். அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் வெற்றிக்கு உழைப்பதென உறுதி ஏற்றனர்.

News March 25, 2024

தேர்தல் விழா: வேட்புமனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!