Ramanathapuram

News April 14, 2024

கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கம் – அதிமுகவுக்கு ஆதரவு

image

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பா.ஜெயபெருமாளுக்கு தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்புச் சங்கத்தின் மாநில தலைவர் சத்தியம் C.சரவணன் சாயல்குடி தனியார் திருமண மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

News April 14, 2024

மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் பலி!

image

ராமநாதபுரம் வசந்த நகரில் உள்ள ரோஸ் நகர் பகுதியில் வசிப்பவர் செல்வரெத்தினம் (68) மனநிலை சரியில்லாமல் இருந்த இவர் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சாலையில் தூங்கி கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இவரது மனைவி ராஜேஸ்வரி புகாரில் கேணிக்கரை இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News April 14, 2024

ராமநாதபுரம் வந்த முன்னாள் முதல்வர்

image

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தமிழ் புத்தாண்டையொட்டி கிருஷ்ணன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருடன் தர்மர் எம்பி, மாநில பாஜக செயற்குழு உறுப்பினர் GPS. நாகேந்திரன், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News April 14, 2024

டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாட்டம்

image

இந்திய அரசியல் சாசன மேதை அம்பேத்கரின் 134 வது பிறந்த நாளையொட்டி மத்திய, மாநில எஸ்சி, எஸ்டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ராமநாதபுரத்தில்
அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இன்று மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் கர்ணன், மாவட்ட செயலர் சேக்கிழார், மாநில துணை தலைவர் பாலச்சந்திரன், மாநில கொள்கை பரப்பு செயலர் மரியம் ஜேம்ஸ், மதிமுக துணைத்தலைவர் மல்லை சத்யா உள்பட பலர் பங்கேற்றனர்

News April 14, 2024

ராமநாதபுரம்: நீத்தார் நினைவு தினம்

image

ராமநாதபுரம் தீயணைப்பு படை அலுவலகத்தில் நீத்தார் நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 14) தீயணைப்பு படை அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் வீரச்செயல் புரிந்து உயிர் நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மாவட்ட தீயணைப்பு படை அலுவலர் அப்பாஸ் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் ஏராளமான வீரர்கள் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர்.

News April 14, 2024

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மழை

image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது காலை 10 மணிக்குள் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக வாட்டி வந்த வெயிலால், தற்போது பெய்யும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News April 14, 2024

லயன்ஸ் கிளப் சார்பில் சாதனையாளர்களுக்கு பாராட்டு

image

ராமநாதபுரத்தில் லயன்ஸ் கிளப் ஆப் இண்டர்நேஷனல் சார்பில் மன்னர் சேதுபதி மண்டல மாநாடு அதன் தலைவர் சீனிவாசலு தலைமையில் தனியார் மகாலில் நடந்தது. இம்மாநாட்டில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதன்படி செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் செந்தில்குமார்க்கு சிறந்த ஆசிரியருக்கான சான்றிதழ் வழங்கினர். 

News April 13, 2024

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் திடீர் சோதனை

image

ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பிரச்சாரம் செய்தார். இதற்காக அவர் மதுரையிலிருந்து தனி ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் வந்தார். பிரச்சாரத்திற்கு சென்ற பின்னர் அவர் வந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினா். இதில் பணமோ பொருட்களோ கைப்பற்ற படவில்லை.

News April 13, 2024

ராம்நாடு: அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருந்தது. இதை தொடர்ந்து நேற்று ராமநாதபுரத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இந்நிலையில் தமிழகத்தில் ராமநாதபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 13, 2024

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அழைப்பு

image

அம்பேத்கர் பிறந்த நாள் விழா நாளை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே புல்லந்தை கிராமத்தில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை காலை (ஏப்.14) மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். இந்த நிகழ்வில் நிர்வாகிகளும், தொண்டர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!