Ramanathapuram

News April 16, 2024

OPS-க்கு வேல் வழங்கி வரவேற்ற கவுன்சிலர்

image

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (ஏப்ரல் 15) ராமநாதபுரம் அரண்மனை முன்பு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு அமமுக மாவட்ட வர்த்தக அணி செயலாளர் டாக்டர் ஜே.ஆர்.பி.மணிகண்டன், அமமுக நகராட்சி கவுன்சிலர் தனபாண்டியம்மாள் ஆகியோர் வேல் வழங்கி வரவேற்பளித்தனர்.

News April 16, 2024

ஜே.பி.நட்டாவை வரவேற்ற ஓபிஎஸ்

image

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து இன்று பரமக்குடியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்தார். அவரை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சால்வை அணிவித்து வரவேற்றார். உடன் பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

News April 16, 2024

ராமநாதபுரம்: திராட்சை பன்னீர்செல்வம் மீது வழக்கு

image

ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த ஒய்யா என்பவரது மகன் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தேவிபட்டினம் ரோட்டில் அனுமதியின்றி சுவரொட்டிகள் ஒட்டியிருந்தனர். சுவரொட்டிகளை அகற்றிய தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஸ்ரீதரன் மாணிக்கம் கேணிக்கரை போலீசில் புகாரளித்தார். சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 16, 2024

ராமநாதபுரத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை

image

ராமநாதபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சில இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 15, 2024

ராம்நாடு மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட முதுகுளத்தூர் சோனை மீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (15.04.2024) மூன்றாம் கட்ட பயிற்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேர்தலில் அனைவரும் சிறப்பாக பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

News April 15, 2024

அரசு பேருந்தில் ரூ.10 லட்சம் பறிமுதல்

image

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள குஞ்சார்வலசை போலீஸ் செக்போஸ்டில், தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரி கீழக்கரை குடிமைப் பொருள் தாசில்தார் ராமமூர்த்தி தலைமையிலான குழுவினர், இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி – ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்தை சோதனை செய்ததில், தெற்கு அந்தமான் போர்ட்பிளேரை சேர்ந்த சக்திவேல் உரிய ஆவணமின்றி எடுத்து வந்த 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.

News April 15, 2024

வாக்கு எண்ணும் மையத்தில் 250 கேமராக்கள்

image

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் பதிவாகும் வாக்குகள் அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்படுகின்றன. இதற்காக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட உள்ளன. இதை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும் வகையில் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் 250-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தம் பணி நடைபெற்றுவருகிறது.

News April 15, 2024

பாம்பன் தூக்கு பாலம் இன்று மதியம் திறப்பு

image

தமிழக கடலில் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் இன்று (ஏப்.15) துவங்கியது. இதையடுத்து அனைத்து விசைப்படகுகளும், சம்பந்தப்பட்ட தங்குதளம் செல்ல பாம்பன் தூக்கு பாலம் இன்று மதியம் 12 மணியளவில் திறக்கப்படுகிறது. அப்போது, மண்டபம் தென் கடல் பகுதியில் உள்ள விசைப்படகுகள் மண்டபம் வடக்கு கடல் பகுதிக்கு கொண்டு செல்லலாம் என மண்டபம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

News April 15, 2024

ஓபிஎஸ் வெற்றி பெற சிறப்பு பூஜை

image

தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி, வாலாந்தரவை அருகே குயவன்குடி வெக்காளியம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை நேற்றிரவு நடந்தது. இதில்
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
பலாப்பழம் சின்னத்தில் வெற்றி பெற வேண்டி பாஜகவினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.

News April 14, 2024

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

ராமநாதபுரத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.ராம்நாடு, பரமக்குடி, கடலாடி, தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!