India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை சேர்ந்த பாண்டி என்பவரது மகள் லத்திகா (18), இவர் ராமநாதபுரம் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்துவருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது தாயார் முத்துலெட்சுமி அளித்த புகாரில் கேணிக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரம் துணை மின் நிலையம் ராமேஸ்வரம் நகர்புறம், பர்வதம், ஓலைக்குடா, சம்பை, மாங்காடு, வடகாடு,
வேர்கோடு, புதுரோடு, செம்மமடம், மெய்யம்புளி, அரியாங்குண்டு, பேக்கரும்பு தங்கச்சிமடம் ஆகிய இடங்களில் ஏப்.24, 25-ல்
மின் பாதை மேம்பாட்டு பணி நடைபெற உள்ளது. இதையொட்டி ஏப்.
24, 25-ல் காலை 8 மணி முதல் 4:30 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என
ராமநாதபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் திலகவதி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, “அனைத்து உயிர்களிடத்தும் அன்புகாட்டி வாழ வேண்டும் என்கிற அறநெறியைப்
பரப்பிய பகவான் மகாவீரர் பிறந்தநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
இந்த இனிய நாளில்,அன்பின் வழியில் அறநெறி சார்ந்த வாழ்க்கையை நாம் அனைவரும் மேற்கொள்ள உறுதி ஏற்போம்” என ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக கடலில் மீன் வளம் காக்க ஏப்.14 முதல் ஜூன் 14 வரை 61 நாள் மீன்பிடி தடைக்காலம் துவங்கியது. இக்கால கட்டத்தில் விசைப்படகுகள், இழுவைப்படகுகள் தவிர 5 நாட்டிக்கல் எல்லைக்குள் நாட்டுப்படகு மீன்பிடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பாம்பன் கடலில் நாட்டுப்படகு மீன்பிடி கடந்த சில நாட்களாக களை கட்டியுள்ளது. கரை திரும்பும் படகுகளில் குவியும் மீன்களை கேரளா அனுப்ப வியாபாரிகள் இன்று குவிந்தனர்.
ராமநாதபுரம் அண்ணா பல்கலை கல்லூரியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 6 அறைகளிலும் ஒவ்வொரு அறைக்கும் இரண்டு ஆயுதம் ஏந்திய காவலர்கள் மற்றும் ஒரு கண்காணிப்பு அதிகாரி என அறைக்கு மூன்று பேர் வீதம் 18 பேர், துணை ராணுவ படை வீரர்கள், பட்டாலியன் மற்றும் 195 உள்ளூர் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என எஸ்பி சந்தீஷ் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கிய முன்னாள் முதல்வர் OPS-இன் இளைய மகன் ஜெயபிரதீப் நேற்று (ஏப்ரல் 19) தனது தந்தையின் சின்னமான பலாப்பழத்துடன் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில், சேதுக்கரை ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் ஆகியவற்றில் சாமி தரிசனம் செய்தார். திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் உடையத்தேவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 19) காலை ஆறு மணி முதல் தொடங்கி நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் நடந்த வாக்குப்பதிவில் பிரபல தொழிலதிபர் சென்னை மொபைல்ஸ் குழும தலைவர் முகமது ரபிகுதீன் திருவாடானை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தெற்குத்தரவை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.
2024 மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்று வருவதை முன்னிட்டு பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சௌராஷ்ட்ரா மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார். உடன் எம்பி தர்மர் மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகளின்படி மொத்தம் 63.35% வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு 60% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் தற்போது 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இன்று (ஏப்ரல் 19) நடைபெறும் பொதுத்தேர்தலில் இன்று மதியம் 1 மணி நிலவரப்படி சட்டமன்றத் தொகுதி வாரியாக வாக்கு சதவீதம்
அறந்தாங்கி: 42.74%
பரமக்குடி (தனி ): 42.14%
திருவாடனை : 40.50%
இராமநாதபுரம் : 36.39%
முதுகுளத்தூர் : 39.90%
திருச்சுழி : 46.25%
தொகுதி முழுவதும்
சராசரி : 40.90 % ஆகும்.
Sorry, no posts matched your criteria.