India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பரமக்குடி தாலுகா, சின்ன நாகாச்சி கிராமத்தை சேர்ந்த ஒரு முதியோர் பிப்ரவரி முதல் உதவி தொகை பெற்று வருகிறார். இதை பெறுவதற்கு தான் பரிந்துரைத்ததாக கூறி சின்ன நாகாச்சி வருவாய் கிராம உதவியாளர் அம்பேத் ராணி புகார்தாரரிடம் இருந்து ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அம்பேத் ராணியை ராமநாதபுரம் லஞ்சம் ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் இன்று (19.03.2025) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த எண்களுக்கு எந்த குற்றமாக இருந்தாலும் தெரிவிக்கலாம். காவல்துறை தெரிவித்துள்ளது.
மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவிப்பு வெளியாகியது . அந்த வகையில் இன்று(மார்ச்.19) இரவு 10 மணி வரை இராமநாதபுரம் உட்பட 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. *ஷேர்
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(மார்ச். 19) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
ராமநாதபுரம் பிரப்பன்வலசை பகுதியைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு சிறுமியை 2019 ஆம் ஆண்டில் சிறுமியின் மாமா மகனான அருள்நேசன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து சிறுமி கர்பமடைந்த நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக ராமேஸ்வரம் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து அருள்நேசனை கைது செய்த நிலையில் அவருக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் விரைவு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10, 12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் சேர விருப்பமுள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஏப்.10 வரை பதிவு செய்யலாம் என திருச்சி ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது. SHARE IT
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில் சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்க விரும்பும் கலைக்குழுக்களின் பதிவு நிகழ்ச்சி ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் மார்ச் 22, 23 காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு கலைக்குழுவின் 5 நிமிட வீடியோ பதிவு செய்யப்பட்டு தேர்வுக் குழுவால் கலைக்குழுக்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
இலங்கை கொழும்பு புறநகர் பகுதியில் 26.08.2020 அன்று இலங்கை போலீசார் 23 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கைப்பற்றிய வழக்கில் இலங்கை துறைமுக காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றிய பிரதீப்குமார் பண்டாரா தமிழகத்திற்கு அகதியாக தப்பி வந்த நிலையில் கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் திருச்சி முகாமில் இருக்கும் நிலையில் நேற்று நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் விசாரணையை ஏப்.5 க்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஸ்படிக லிங்க தரிசனத்திற்காக இன்று அதிகாலை வரிசையில் நின்ற ராஜஸ்தானைச் சேர்ந்த துறவி ராஜ்தாஸ் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். அவரது இறப்புக்கு நீதி கேட்டு, இந்து முன்னணி சார்பில், ராமேஸ்வரம் என் எஸ் கே வீதியில் (மார்ச்.20) காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (மார்ச்.18) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.