Ramanathapuram

News April 25, 2024

ராமநாதபுரம்: சித்ரா பௌர்ணமி விழா‌வில் OPS பங்கேற்பு!

image

ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை கிராமத்தில் உள்ள ஸ்ரீ பாம்பன் சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா நேற்று (ஏப்ரல் 23) வெகு விமரிசையாக நடந்தது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆர்.தர்மர் எம்பி, முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன், மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சீனிமாரி , ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் முத்துமுருகன், உள்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News April 25, 2024

ராமநாதபுரம் போலீஸ் கடும் எச்சரிக்கை

image

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா, கடல் அட்டைகள் மற்றும் இதர போதைப்பொருட்கள் கடத்துவதற்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். மேலும் போதைப்பொருட்களை கடத்துபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News April 24, 2024

பெட்டி கடைக்கு தீ வைத்தவர் மீது வழக்கு பதிவு

image

பெருநாழி நாடார் பஜாரைச் சேர்ந்த வேல்முருகன் (37) அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தோப்புராஜன் (30) என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு வேல்முருகனின் கடைக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்த டூவீலரை திருடிக்கொண்டு தோப்புராஜன் தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து பெருநாழி போலீசார் இன்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News April 24, 2024

கூண்டு வைத்து மீன்பிடிக்கும் மீனவர்கள்

image

ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு ஆளாகி படகுகளை இழக்கும் அவல நிலை உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் மத்திய, மாநில அரசின் நிதியுதவியுடன் கடலோரப் பகுதிகளில் கூண்டு வலையில் மீன்பிடிக்க மீனவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். பாம்பன், குந்துகால், மண்டபம் தோணித்துறை, ராமேஸ்வரம் ஓலைக்குடா கடற்கரையில் சில மீனவர்கள் கூண்டு வைத்து மீன்பிடிப்பதில் தீவிரம் காட்டுகின்றனர்.

News April 24, 2024

ராமநாதபுரம்: லாரி மோதி 3 வாலிபர்கள் பலி

image

நாகபட்டினம் பி.ஆர்.பட்டினத்தை சேர்ந்தவர் கார்த்திக் (20), இவரும் அதே பகுதியைச் சேர்ந்தவர் மலைராஜன் (26), அக்கரைப்பேட்டை ராஜசேகர், நாகூர் சம்பா தோட்டம் சஞ்சீவ்காந்தி (25) ஆகியோர் படகு வாங்குவதற்காக காரில் தூத்துக்குடி நோக்கி இன்று காலை சென்றனர். உப்பூர் அருகே, பட்டுக்கோட்டைக்கு செங்கல் ஏற்றிச் சென்ற லாரி மோதி கார்த்திக், மலைராஜன், ராஜசேகர் ஆகியோர் பலியாகினர். சஞ்சீவ்காந்தி படுகாயம் அடைந்தார்.

News April 24, 2024

பிரபல நடிகர் மீதான மோசடி வழக்கு ஒத்திவைப்பு

image

தேவிபட்டினம் முனியசாமி என்பவரிடம் அவரின் தொழிலை மேம்படுத்த ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக கூறிய நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆவண செலவுக்காக ரூ.14 லட்சம் வாங்கினாராம். கடன் வாங்கி தராமல் வாங்கிய பணத்திற்காக போலி செக் கொடுத்து ஏமாற்றியதாக ராமநாதபுரம் கோர்ட்டில் முனியசாமி வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணைக்கு நேற்று பவர் ஸ்டார் ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி வழக்கினை ஏப்.30-க்கு ஒத்திவைத்தார்.

News April 24, 2024

ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நியமனம்

image

ராம்நாடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா நேற்று (ஏப்.22) முதல் ஜூன் 20 வரை நீண்ட விடுப்பில் செல்வதால் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) பிரின்ஸ் ஆரோக்கியராஜ் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக முழு கூடுதல் பொறுப்பில் செயல்படுவார் என பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நிதி ஆதாரத்துடன்கூடிய முழு கூடுதல் பொறுப்பில் செயல்படவும் அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

News April 24, 2024

பரமக்குடியில் நாளை உள்ளூர் விடுமுறை

image

பரமக்குடியில் சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு ஏப்ரல் 23 ஆம் தேதி பரமக்குடியில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 04.05.2024 (சனிக்கிழமை) வேலை நாளாக ஈடுசெய்யப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News April 24, 2024

ராம்நாடு: அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ராமநாதபுரம், திருப்பூர், கோவை, திருவாரூர், தஞ்சாவூர், தேனி, தென்காசி, நெல்லை, சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 24, 2024

ராமநாதபுரம் அருகே கூடுதல் வரி வசூல்

image

பரமக்குடியில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் தோல் தைத்து தருபவர்களிடம் நகராட்சி நிர்வாகம் 100 ரூபாய் முதல் வரி வசூல் செய்கின்றனர். வெயிலின் தாக்கத்தை பொருட்படுத்தாமல் சேவை செய்து வரும் இவர்களிடம் நகராட்சி நிர்வாகம் கூடுதல் வரி வசூல் செய்வது கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

error: Content is protected !!