Ramanathapuram

News April 25, 2024

ராமநாதபுரம் அருகே விபத்து 

image

ராமநாதபுரம்: பட்டினம்காத்தான் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முனியசாமி என்பவரின் மகன் கார்த்தி(33). இவர் மோட்டார் சைக்கிளில் இன்று மாலை பட்டிணங்கத்தான் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கீழக்கரையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News April 25, 2024

ராமநாதபுரம் – பெருமைமிகு கலாமின் நினைவகம்!

image

அப்துல் கலாம் நினைவகம் 2.11 ஏக்கர் பரப்பளவில் ராமேஸ்வரத்தில் டாக்டர். ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவாக 2015 -17ஆம் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவகத்தில் ஏவுகணை நாயகனாக அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறும், அவரின் கண்டுபிடிப்புகளும் விளக்கும் வகையில் உள்ளது. ஏவுகணைகள், அரிய ஓவியங்கள், கலாமின் உடமைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நூலகம் கோளரகம், பூங்கா அமைதியான சூழலை ஏற்படுத்துகிறது.

News April 25, 2024

நீர், மோர் பந்தல் திறப்பு

image

பரமக்குடியில் அதிமுக சார்பில் இன்று பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டிருந்த கோடைகால நீர், மோர் பந்தலை மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் ராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிட்ட ஜெயபெருமாள் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு மோர் மற்றும் பழங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்தையா மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

News April 25, 2024

ராமநாதபுரம் அருகே புரோட்டா மாஸ்டருக்கு கத்திக்குத்து –

image

ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை கிராமத்தை சேர்ந்தவர் புரோட்டா மாஸ்டர் நவநீதன் (48). இவர் நேற்று இரவு பணி முடித்து வீடு திரும்பியபோது அதே ஊரைச் சேர்ந்த கார்மேகம் (26) என்பவர் ரோட்டில் இருந்து மது அருந்தி உள்ளார். அங்கு இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டதில் கார்மேகம், நவநீதனை  கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. நவநீதன்  மனைவி அன்னபூரணம் புகாரில் கேணிக்கரை போலீசார் கார்மேகத்தை கைது செய்தனர்.

News April 25, 2024

ராமநாதபுரத்தில் பூக்களின் விலை அதிரடி குறைவு

image

தமிழகம் முழுவதும் சித்திரை திருவிழா மற்றும் சித்ரா பவுர்ணமி திருவிழாவும் நடந்து முடிந்தது. குறிப்பாக மதுரையில் அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி உள்ளார். இந்த விழாக்களால் ராமநாதபுரத்தில் கடந்த சில வாரங்களாக மல்லிகைபூ , பிச்சிப்பூ, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களும் பல மடங்கு விலை அதிகமாக இருந்தது. தற்போது விழாக்கள் முடிந்த நிலை யில் ராமநாதபுரத்தில் அனைத்து பூக்களின் விலையும் வெகுவாக குறைந்தது.

News April 25, 2024

ராமநாதபுரத்தில் பூக்களின் விலை அதிரடி குறைவு

image

தமிழகம் முழுவதும் சித்திரை திருவிழா மற்றும் சித்ரா பவுர்ணமி திருவிழாவும் நடந்து முடிந்தது. குறிப்பாக மதுரையில் அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி உள்ளார். இந்த விழாக்களால் ராமநாதபுரத்தில் கடந்த சில வாரங்களாக மல்லிகைபூ , பிச்சிப்பூ, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களும் பல மடங்கு விலை அதிகமாக இருந்தது. தற்போது விழாக்கள் முடிந்த நிலை யில் ராமநாதபுரத்தில் அனைத்து பூக்களின் விலையும் வெகுவாக குறைந்தது.

News April 25, 2024

மின் தடை ரத்து: செயற்பொறியாளர் தகவல்

image

ராமேஸ்வரம் நகர், பர்வதம், ஓலைக்குடா, சம்பை, மாங்காடு, வடகாடு,
வேர்கோடு, புதுரோடு, செம்மமடம், மெய்யம்புளி, அரியாங்குண்டு, பேக்கரும்பு தங்கச்சிமடம் ஆகிய இடங்களில்
மின் பாதை பராமரிப்பு பணிக்காக நாளை ( ஏப்.,25) மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தடை ரத்து செய்யப்படுவதாக
ராமநாதபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் திலகவதி இன்று (ஏப்.24) தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

மட்டன் பிரியாணியில் துர்நாற்றம்: அதிகாரிகள் விசாரணை

image

ராமநாதபுரம் அரண்மனை அருகே உள்ள ஒரு பிரபல ஓட்டலில், பதப்படுத்தி பல நாட்களான மட்டனை பயன்படுத்தி தயாரான பிரியாணி விற்பனை குறித்து வாடிக்கையாளர் ஒருவர் உணவு பாதுகாப்பு துறையினருக்கு இன்று புகாரளித்தார். அங்கு வந்த அதிகாரிகள் மிகுந்த துர்நாற்றம் வீசிய பிரியாணி மற்றும் பதப்படுத்திய மட்டன் துண்டுகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர். இதுகுறித்து ஓட்டல் உரிமையாளரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

News April 25, 2024

41 ஆயிரம் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு

image

ஏஜி&பி பிரதான் நிறுவனம் சார்பில் குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் இணைப்பு விரிவாக்கம் குறித்து பிராந்திய மேலாளர் இசக்கி முத்து பூமாரி கூறியதாவது: ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம் ஆகிய நகரங்களில் அடுத்த 8 ஆண்டுகளில் 41 ஆயிரம் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்க ஏஜி&பி நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. சிறப்பு திட்டத்தில் டெபாசிட் இல்லாத எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்றார்.

News April 25, 2024

ராமநாதபுரம்: முன்னாள் முதல்வர் கடும் கண்டனம்

image

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திமுக தலைமையிலான தமிழக அரசு தற்போது கொடி கட்டி பறக்கும் மணல் கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, கள்ளச்சாராய விற்பனை, புகையிலை கடத்தல், ரேசன் அரிசி கடத்தல் ஆகியவற்றை தடுக்க தவறி விட்டது. இத்தகைய சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

error: Content is protected !!