Ramanathapuram

News April 28, 2024

ஆம்புலன்சுடன் மாயமானவர் மீது போலீசார் வழக்கு!

image

ராமநாதபுரம் மாவட்ட தமுமுக மருத்துவ அணி செயலாளர் சங்கர். இவரிடம் கோவை காளிமேடு மணிகண்டன் என்பவர் ஆம்புலன்சுக்கு அவசர சிகிச்சை கருவிகள் பொருத்தித்தருவதாக ரூ.3.50 லட்சம் பணம் பெற்று ஆம்புலன்சை எடுத்து சென்றுள்ளார். இது வரை அவசர சிகிச்சை உபகரணங்கள் பொருத்தித்தரவில்லை . ஆம்புலன்சை திருப்பியும் தரவில்லை என கூறப்படுகிறது. சங்கர் புகாரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News April 27, 2024

பரமக்குடியில் பக்தர்கள் தரிசனம்

image

பரமக்குடி சுந்தர்ராஜ பெருமாள் கோயிலில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற சித்திரை திருவிழாவின் நிறைவு நாளான இன்று கள்ளழகர் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி நகர் முழுவதும் வீதி உலா வந்து இன்று மீண்டும் கோயிலுக்குள் சென்றடைந்தார். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷங்கள் முழங்க கள்ளழகரை வழிபட்டனர்.

News April 27, 2024

ராம்நாடு அருகே விழிப்புணர்வு பேரணி

image

ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடை கிராமத்தில் மதுரை தமிழ்நாடு அரசு வேளாண்மை பல்கலைக்கழக கல்லூரி மாணவிகள் ஒரு மாதம் தங்கி விவசாயிகளை சந்தித்து பயிர்கள், பயிர் சுழற்சி முறைகள், நீர்ப்பாசன வசதிகளை தெரிந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். வெள்ளரி சாகுபடியில் பூச்சி தாக்குதல், அதில் வரும் விளக்கெண்ணெய் நோய் பற்றியும், கட்டுப்பாடு முறையை தெரிந்து கொண்டனர். நேற்று இயற்கை விவசாய விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

News April 27, 2024

இராமநாதபுரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு

image

இராமநாதபுரத்தில் கோடை காலம் துவங்கியதை அடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள், ஊராட்சி பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் குடிநீர் திட்ட பணிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

News April 27, 2024

ராமநாதபுரம்; புல்லட் மோதியதில் பெண் படுகாயம்!

image

ராமநாதபுரம் மாவட்டம் முதலூர் கிராமத்தை சேர்ந்தவர் காந்தி மனைவி மலர்விழி(59), தபால் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் நேற்று மாலை காருகுடி பஸ் ஸ்டாப்பில் சாலையை கடக்க முயன்ற போது அப்பகுதியில் வந்த புல்லட் பைக் பலமாக மோதியதில் படுகாயமடைந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது கணவர் காந்தி புகாரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்

News April 27, 2024

வெறி நாய் கடித்து காயம் – 8 பேர் அனுமதி

image

திருவாடானையில் நேற்று( ஏப்ரல். 26) தெருவில் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று சாலையில் நடந்து சென்றவர்களை கடித்துத் குதறியுள்ளது. இதில் திருவாடானை அருகே உள்ள திருவடிமிதியூர் கிராமத்தைச் சேர்ந்த பாப்பு(65), திருவாடானை சமத்துவபுரம் வளர்மதி(30), ஈரோட்டைச் சேர்ந்த ரெங்கநாதன்(38) உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

News April 26, 2024

ராமநாதபுரம் அருகே கடையடைப்பு

image

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் ஊர் நல கமிட்டி ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. வர்த்தக சங்க தலைவர் நிஜாமுதீன் தலைமை வகித்தார். தங்கச்சிமடம் மக்களை புறக்கணிக்கும் மின் வாரியத்தை கண்டித்து மே 7ல் தேதி தங்கச்சிமடத்தில் கடையடைப்பு, உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சேனாதிபதி சின்னத்தம்பி ஏற்பாடு செய்தார்.

News April 26, 2024

மாம்பழ கடைகளில் அதிகாரிகள் சோதனை

image

ராமநாதபுரத்தில் மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்கின்றனர். இதை தடுக்க ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். செயற்கை முறையில் பழுக்க வைத்து உள்ளனரா என்று கண்டறிய மாம்பழங்களை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

News April 26, 2024

ரூ. 9 ஆயிரம் லஞ்சம் – சிக்கிய அதிகாரிகள்

image

தேவிபட்டினம் சேர்ந்த முகமது பிலால் என்பவர் வீட்டின் மேல் செல்லும் மின்கம்பியை மாற்றியமைக்க தேவிபட்டினம் மின்வாரிய அலுவலகத்தில் பணம் கட்டி மனு செய்தார். இதற்கு வணிக ஆய்வாளர் ரமேஷ் பாபு, வயர்மேன் கந்தசாமி, உதவி மின் பொறியாளர் செல்வி ஆகியோர் ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்து இன்று விசாரித்து வருகின்றனர்.

News April 26, 2024

கடல்நீரை குடித்த மான் சாவு

image

தொண்டி அருகே காட்டுப்பகுதிகளில் மான்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. நேற்று புள்ளிமான் ஒன்று தொண்டி புதுக்குடி மீனவ கிராமத்திற்க்குள் இரை தேடிச் சென்றுள்ளது. அங்கு கடல் நீரை குடித்த மான் சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் உடற்கூறுறாய்வுக்கு பின்னர் மானை புதைத்தனர்.

error: Content is protected !!