India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொண்டியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதிலிருந்து விடுபட பொதுமக்கள் அதிகளவில் இளநீர் குடித்து வருகின்றனர். இதனால் இங்கு இளநீர் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு ரூபாய் 60-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 65-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பரமக்குடியில் காலித் நிறுவனம் சார்பில் 36வது கிளையை இன்று திறந்தனர். திறப்பு விழாவை முன்னிட்டு 180 ரூபாய் விலையுள்ள ஒரு சிக்கன் பிரியாணி வாங்கினால் இன்னொரு சிக்கன் பிரியாணி இலவசமாக கொடுக்கப்படும் என அறிவித்திருந்தனர். இதனையடுத்து கூட்டம் அலைமோதியதால் பொதுமக்கள் காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஃபர் பிரியாணியை வாங்கிச் சென்றனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியாகினர். 8-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்த ராமநாதபுரம் மக்களவை சுயேச்சை வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓபிஎஸ் நிதி வழங்கவும் கோரிக்கைவிடுத்துள்ளார் .
உலக புத்தக தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட நூலக ஆணைக்குழு,
ராமேஸ்வரம் கிளை நூலக வாசகர் வட்டம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மதுரை கிளை சார்பில் புத்தகக் கண்காட்சி ராமேஸ்வரம் அரசு பஸ் பணி மனை அருகே நாளை ( மே 2)
துவங்குகிறது. மே 10 வரை தினமும் காலை 9:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் இடம்பெறும் புத்தகங்களை வாங்கும் வாசகருக்கு 10% சிறப்பு தள்ளுபடி அளிக்கப்பட உள்ளது.
பரமக்குடி அருகே வெங்கிட்டங்குறிச்சி சேர்ந்த ஞானபிரகாசம் மகன் ஆனந்த பிரபாகரன் (18). இன்று மாலை தாத்தா திரவியம் என்பவரை அழைத்து வர டூவிலரில் பரமக்குடி பஸ் நிலையம் நோக்கி சென்றார். கிருஷ்ணா தியேட்டர் அருகே மினி பேருந்து பின் சக்கரம் ஏறி தலை நசுங்கி ஆனந்த பிரபாகரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து டிரைவர் கார்த்திக் (41) என்பவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவில், ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பல புராணக் கதைகளைத் தாங்கிய இக்கோவிலில் 2017 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோவிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் ஐந்து கோபுரங்கள் உள்ளன. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் பழைய திராவிடக் கட்டடக்களையை கொண்டு உள்ளது.
பரமக்குடியில்
நேரடி நியமனம் பெற்ற முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இன்று 5 முனை சாலை அருகே கோடை வெயிலை சமாளிக்க பொது மக்களுக்காக இலவச நீர், மோர் பந்தல் அமைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு 15-35 வயதுடைய ஆண், பெண் பாலினத்தவர் விண்ணப்பிக்கலாம். 2023 ஏப்ரல் 1 முதல் 2024 மார்ச் 31 வரை செய்த சேவைகள் தகுதியாக ஏற்கப்படும். விண்ணப்பதாரர் தமிழகத்தில் 5 ஆண்டுகள் குடியிருந்திருக்க வேண்டும். இன்றுமுதல் மே 15 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் www.sdat.tn.gov.in என்ற வலைதளத்தில் சென்று விண்ணப்பக்கலாம் என ராமநாதபுரம் கலெக்டர் அறிவித்துள்ளார்.
தேவிபட்டினம் முகமது பிலால் தன் வீட்டின் மேல் செல்லும் மின்கம்பியை மாற்றியமைக்க மின்வாரிய அலுவலகத்தில் பணம் கட்டி மனு அளித்தார். இதற்கு வணிக ஆய்வாளர் ரமேஷ் பாபு, வயர்மேன் கந்தசாமி, உதவி மின் பொறியாளர் செல்வி ஆகியோர் ரூ.9000 லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப் பிடித்தனர். இதை தொடர்ந்து ரமேஷ் பாபு, செல்வி, கந்தசாமி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மேற்பார்வை பொறியாளர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவிலில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மாயமானது. இது தொடர்பாக கோவில் ஸ்தானிகர் சீனிவாச ஐயங்கார் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் சீனிவாச ஐயங்கார் மாவட்ட கோர்ட்டில் 2வது முறையாக முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணை நேற்று வந்த போது நீதிபதி குமரகுரு முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.