India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரத்தில் லயன்ஸ் கிளப் ஆப் இண்டர்நேஷனல் சார்பில் மன்னர் சேதுபதி மண்டல மாநாடு அதன் தலைவர் சீனிவாசலு தலைமையில் தனியார் மகாலில் நடந்தது. இம்மாநாட்டில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதன்படி செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் செந்தில்குமார்க்கு சிறந்த ஆசிரியருக்கான சான்றிதழ் வழங்கினர்.
ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பிரச்சாரம் செய்தார். இதற்காக அவர் மதுரையிலிருந்து தனி ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் வந்தார். பிரச்சாரத்திற்கு சென்ற பின்னர் அவர் வந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினா். இதில் பணமோ பொருட்களோ கைப்பற்ற படவில்லை.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருந்தது. இதை தொடர்ந்து நேற்று ராமநாதபுரத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இந்நிலையில் தமிழகத்தில் ராமநாதபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அம்பேத்கர் பிறந்த நாள் விழா நாளை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே புல்லந்தை கிராமத்தில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை காலை (ஏப்.14) மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். இந்த நிகழ்வில் நிர்வாகிகளும், தொண்டர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என இஸ்லாமிய பெண் சபீனா என்பவர் கிராமம் கிராமமாக சென்று தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் வெற்றிபெற்றால் தொகுதி வளர்ச்சி பெறும் என பெண்களிடம் விளக்கி வருகிறார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் தேசிய கூட்டணி வேட்பாளர் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை ஆதரித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை இன்று மதியம் பிரசாரம் செய்தார். பிரதமர் மோடிக்கு பிடித்த அரசியல் தலைவர் ஓபிஎஸ், ஜெயலலிதாவின் முழு நம்பிக்கையை பெற்றவர் ஓபிஎஸ். நாடாளுமன்றம் செல்லும் போது உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத். தேனி எம்பியாக உள்ள இவர் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பரப்புரை செய்ய வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வை சந்தித்துப் பேசினார்.
ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைக்கும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக, தேமுதிக கூட்டணி கட்சி ஆதரவுடன் இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஜெயபெருமாளை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் கமுதி பேருந்து நிலையம் அருகே இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். மாவட்டத்தின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற பாராளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும் எனவும் உறுதியளித்தார். ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தேமுதிக மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் இந்திய கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கை இன்று இரவு ராமநாதபுரத்தில் வெளியிடப்பட்டது.
துணைத்தலைவரும் வேட்பாளருமான நவாஸ் கனி, மாநில பொதுச் செயலர் அப்துல் சமது, மாநில பொருளர் ஷாஜகான், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் ஆகியோர் வெளியிட்டனர்.
Sorry, no posts matched your criteria.