India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நாளை மூன்று இடங்களில் நடைபெற உள்ளது. இராமநாதபுரம் வட்டம் பட்டணங்காத்தன் கிங்க் பேலஸ் மஹால், முதுகுளத்தூர் வட்டம் தேரிருவேலி பள்ளிவாசல் மஹால், ஆர்எஸ்மங்கலம் வட்டம் சோழந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்டம் நாளை (19/07/24) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷ்னுசந்திரன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு உடனிருந்தனர்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட நவாஸ்கனி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் நவாஸ்கனி தனது வேட்பு மனுவில், சொத்து விவரங்களை மறைத்திருப்பதாக கூறி அவரது வெற்றியை எதிர்த்து சற்றுமுன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடுத்துள்ளார்.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசுவதால் ராமநாதபுரம் மீனவர்கள் இரண்டாவது நாளாக கடலுக்குச் செல்ல வில்லை. பாம்பன், மண்டபம், வேதாளை, புதுமடம், கீழக்கரை, ஏர்வாடி, நரிப்பையூர் உள்பட தென் துறைமுகங்களில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் 1.50 லட்சம் பேர் வேலையிழந்த நிலையில் சுமார் ரூ.7 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சுயேட்சை வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டார். அதில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளார். இதனை நாளை (19.07.2024) ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்க உள்ளதாக ஆர்.தர்மர் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசுவதால் பாம்பன், மண்டபம், வேதாளை, புதுமடம், கீழக்கரை, ஏர்வாடி, நரிப்பையூர் உள்பட தென் துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்க செல்லும் விசைப்படகு மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (ஜூலை.18) 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் 1000 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் நாளை(ஜூலை.19) காலை 10 மணிக்கு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 10 ஆம் வகுப்பு முதல் முதுகலை, ஐடிஐ , டிப்பளமோ படித்த இளைஞர்கள்,பெண்கள் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ளும் நபர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுர மாவட்டம், பாம்பன், தங்கச்சிமடம் ஊராட்சியில் அந்தோணியார்புரம், சூசையப்பர்பட்டணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மர்மக் காய்ச்சல் ஒன்று பரவி வருகிறது. இதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதால் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஷால் (23). இவர் நேற்று இரவு அல்லிக்கண்மாய் சுடுகாடு அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த காதர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முனீஸ்வரன் (23) என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் முனீஸ்வரன், விஷாலை அரிவாளால் கழுத்து, தலையில் வெட்டியதில் விஷால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முனீஸ்வரனை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.