India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து பார்த்திபனூர் வழியாக இன்று(ஜூலை 23) வீரசோழனுக்கு சென்ற 6ம் எண் நகரப் பேருந்து கமுதக்குடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, முன்னாள் சென்ற டிப்பர் லாரி மீது மோதியதில் பேருந்து உருகுலைந்தது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3 ஆவது முறையாக ஆட்சியமைத்துள்ள பாஜக அரசு இன்று(ஜூலை 23) ‘மத்திய பட்ஜெட் 2024’ஐ தாக்கல் செய்யவுள்ளது. இதில், பாதியில் நிறுத்தப்பட்டுள்ள மதுரை – ராமநாதபுரம் 4 வழிச்சாலை திட்டம் மற்றும் ராமநாதபுரம் வழியாக தொலைதூர ரயில்கள் இயக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் ராம்நாடு மாவட்ட மக்களின் எதிபார்ப்பாக இருக்கும். இதேபோல் பட்ஜெட்டில் உங்கள் மாவட்டத்திற்கு வருபவை இடம் பெறுவது குறித்து உங்கள் கருத்து?
திருவாடனை தாலுகா பாசிப்பட்டினத்தில் பிரசித்திப்பெற்ற சர்தார் நெய்னா முகமது சாகிபு ஒலியுல்லா தர்கா உள்ளது. இங்கு 313 ஆவது சந்தனக்கூடு திருவிழா கடந்த 11 ஆம் தேதி கொடியேத்துடன் தொடங்கியது. விழாவின் ஒரு பகுதியாக நேற்று அதிகாலை மத நல்லிணக்க சந்தன்கூடு விழா நடைபெற்றது. இதில், தாசில்தார், யூனியன் தலைவர் என அரசு அலுவலர்கள் மற்றும் பலதரப்பட்ட மக்கள் பங்கேற்று விழாவை கொண்டாடினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், கப், கவர்கள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளன. குறிப்பாக நீர்வரத்து வாய்க்கால்கள், காலி பிளாட்களில் பாலிதீன் பைகள் குவிந்துள்ளன. மண் வளத்திற்கும், நிலத்தடி நீருக்கும் கேடு விளைவிக்கும் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 01 பயனாளிக்கு ரூ.9350/- மதிப்பீட்டில் சிறப்பு சக்கர நாற்காலி மற்றும் 05 பயனாளிக்கு தலா ரூ.9637/- வீதம் மொத்தம் ரூ.48,185/- மதிப்பீட்டில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் என மொத்தம் 06 பயனாளிக்கு ரூ.57,535/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கினார். டிஆர்ஓ. கோவிந்தராஜுலு உடனிருந்தார்.
பரமக்குடி அருகே தனியார் வங்கி காவலாளியாக வேலை செய்து வந்தவர் ரஜினி. இவர் நேற்று மதுரையில் இருந்து பரமக்குடி சென்றபோது, பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து உயிரிழந்தார். இந்நிலையில், ரஜினி ‘POCO M5’ மாடல் போன் வைத்திருந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்புதான் அதனை வாங்கியுள்ளார். ஆதலால் செல்போன் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவரது உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி இன்று(ஜுலை 22) நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் குறித்து கடிதம் அளித்தார். அதில், நாடாளுமன்ற மக்களவையின் நடவடிக்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ராமநாதபுரம் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் மாறுதலாகி சென்ற நிலையில், நகராட்சி நிர்வாக இணை ஆணையராக இருந்த சிம்ரன்ஜித் சிங் காலோன் இன்று(ஜூலை 22) காலை 87வது ராமநாதபுரம் ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு பொறுப்புகளை ஒப்படைத்தார். இதை தொடர்ந்து, அவருக்கு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பரமக்குடியில் உள்ள ஆர்.எஸ். பேட்மிட்டன் அகாடமி சார்பில் இன்று(ஜூலை 22) மாபெரும் இறகுப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. 20 – 25 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் ஆர்.எஸ். அணி வெற்றி பெற்றுள்ளது. 36 அணிகள் பங்கேற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. போட்டியினை ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி துவக்கி வைத்து, வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுத் தொகை வழங்கி பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்.
ராமநாதபுரம், பரமக்குடியை சேர்ந்த ரஜினி என்ற இளைஞர் இன்று தனது நண்பருடன் மதுரையில் இருந்து பரமக்குடிக்கு வந்து கொண்டிருந்த பொழுது தெளிச்சாத்தநல்லூர் அருகே தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்தது. இதில், தொடையில் பலத்த காயம் ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். உடன் வந்த நண்பர் லேசான காயத்துடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Sorry, no posts matched your criteria.