Ramanathapuram

News May 2, 2024

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணம் திருட்டு

image

பரமக்குடி அருகே பெத்தனந்தலை சேர்ந்த ஜோதி என்ற பெண் பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பின்புறம் அமைந்துள்ள கூட்டுறவு வங்கியின் முன்பு இன்று தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். பின்பு வங்கிக்குள் சென்றுவிட்டு திரும்பி வரும்பொழுது வண்டியின் லாக்கர் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த‌ 1 லட்சத்து பத்தாயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News May 2, 2024

ராம்நாடு: உணவு பாதுகாப்பு துறை அதிரடி

image

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாத பொட்டலங்களில் காலாவதி தேதி இன்றி விற்கப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கவேல் தலைமையில் இன்று ஆய்வு நடந்தது. ஆய்வில் முகப்பு சீட்டு இல்லா பொட்டலங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. பிரசாத பொட்டலங்களில் தயாரிப்பு, காலாவதி தேதி, உணவு பாதுகாப்பு உரிமம் அச்சிட்டு விற்க அறிவுறுத்தப்பட்டது.

News May 2, 2024

ராமநாதபுரத்தல் இளநீரின் விலை அதிகரிப்பு

image

தொண்டியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதிலிருந்து விடுபட பொதுமக்கள் அதிகளவில் இளநீர் குடித்து வருகின்றனர். இதனால் இங்கு இளநீர் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு ரூபாய் 60-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 65-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News May 2, 2024

சலுகை: பிரியாணி வாங்க அலைமோதிய கூட்டம்

image

பரமக்குடியில் காலித் நிறுவனம் சார்பில் 36வது கிளையை இன்று திறந்தனர். திறப்பு விழாவை முன்னிட்டு 180 ரூபாய் விலையுள்ள ஒரு சிக்கன் பிரியாணி வாங்கினால் இன்னொரு சிக்கன் பிரியாணி இலவசமாக கொடுக்கப்படும் என அறிவித்திருந்தனர். இதனையடுத்து கூட்டம் அலைமோதியதால் பொதுமக்கள் காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஃபர் பிரியாணியை வாங்கிச் சென்றனர்.

News May 2, 2024

நிதி உதவி செய்ய ஓபிஎஸ் கோரிக்கை

image

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியாகினர். 8-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்த ராமநாதபுரம் மக்களவை சுயேச்சை வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓபிஎஸ் நிதி வழங்கவும் கோரிக்கைவிடுத்துள்ளார் .

News May 1, 2024

ராமேஸ்வரத்தில் புத்தக கண்காட்சி துவக்கம்

image

உலக புத்தக தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட நூலக ஆணைக்குழு,
ராமேஸ்வரம் கிளை நூலக வாசகர் வட்டம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மதுரை கிளை சார்பில் புத்தகக் கண்காட்சி ராமேஸ்வரம் அரசு பஸ் பணி மனை அருகே நாளை ( மே 2)
துவங்குகிறது. மே 10 வரை தினமும் காலை 9:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் இடம்பெறும் புத்தகங்களை வாங்கும் வாசகருக்கு 10% சிறப்பு தள்ளுபடி அளிக்கப்பட உள்ளது.

News May 1, 2024

பரமக்குடி: மினி பேருந்து மோதி வாலிபர் பலி

image

பரமக்குடி அருகே வெங்கிட்டங்குறிச்சி சேர்ந்த  ஞானபிரகாசம் மகன் ஆனந்த பிரபாகரன் (18). இன்று மாலை தாத்தா திரவியம் என்பவரை அழைத்து வர டூவிலரில் பரமக்குடி பஸ் நிலையம் நோக்கி சென்றார். கிருஷ்ணா தியேட்டர் அருகே மினி பேருந்து பின் சக்கரம் ஏறி தலை நசுங்கி ஆனந்த பிரபாகரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து டிரைவர் கார்த்திக் (41) என்பவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 1, 2024

திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவில் சிறப்பு

image

திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவில், ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பல புராணக் கதைகளைத் தாங்கிய இக்கோவிலில் 2017 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோவிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் ஐந்து கோபுரங்கள் உள்ளன. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் பழைய திராவிடக் கட்டடக்களையை கொண்டு உள்ளது.

News May 1, 2024

பரமக்குடியில் எம்எல்ஏ பங்கேற்பு

image

பரமக்குடியில்
நேரடி நியமனம் பெற்ற முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இன்று 5 முனை சாலை அருகே கோடை வெயிலை சமாளிக்க பொது மக்களுக்காக இலவச நீர், மோர் பந்தல் அமைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.

News May 1, 2024

மாநில இளைஞர் விருது: ராம்நாடு கலெக்டர் அறிவிப்பு

image

முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு 15-35 வயதுடைய ஆண், பெண் பாலினத்தவர் விண்ணப்பிக்கலாம். 2023 ஏப்ரல் 1 முதல் 2024 மார்ச் 31 வரை செய்த சேவைகள் தகுதியாக ஏற்கப்படும். விண்ணப்பதாரர் தமிழகத்தில் 5 ஆண்டுகள் குடியிருந்திருக்க வேண்டும். இன்றுமுதல் மே 15 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் www.sdat.tn.gov.in என்ற வலைதளத்தில் சென்று விண்ணப்பக்கலாம் என ராமநாதபுரம் கலெக்டர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!