Ramanathapuram

News May 14, 2024

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

image

ராமநாதபுரம் பட்டணம்காத்தான்
இசிஆர் பகுதிகளில் மாலை நேர தள்ளுவண்டி கடைகள், வாகனங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் சுகாதார மின்றி விற்கப்படுவதாக புகார் எழுந்தது. மாவட்ட நியமன அலுவலர் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் இப்பகுதிகளில் உள்ள அசைவ உணவு கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது உணவு பொருட்களில் அதிக நிறமி சேர்த்த அரை கிலோ சிக்கன் வகைகள், கால் கிலோ அஜினமோட்டோ பறிமுதல் செய்து அழித்தனர்.

News May 14, 2024

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மாலை 4 மணி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 14, 2024

மீன் பிடித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலி

image

திருவாடானை: செவிலியேந்தலைச் சேர்ந்த அசோக் குமார் (40) கோவையில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். ஊருக்கு வந்த நிலையில் வீட்டின் எதிரில் இருந்த ஊரணியில் மீன்பிடித்தபோது நீரில் மூழ்கி மயங்கினார். தீயணைப்புத் துறையினர் மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். திருவாடானை போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

News May 14, 2024

குடிநீர் தொட்டி சேதம்: கலெக்டரிடம் மனு

image

முதுகுளத்தூர் சாம்பகுளம் இந்திரா குடிநீர் தொட்டியை சேதப்படுத்தியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாக நுழைவு வாயில் முன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து கலெக்டரிடம் மனு அளித்துச் சென்றனர். இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

News May 14, 2024

ராமநாதபுரம்: அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 11ஆவது இடம்

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் ராமநாதபுரம் மாவட்டம் 11ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 89.47% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 84.64 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 93.30 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 14, 2024

+1 RESULT: ராமநாதபுரத்தில் 92.83% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் மாணவர்கள் 89.44% பேரும், மாணவியர் 95.80% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 92.83% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாநில அளவில் 13வது இடம். மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 14, 2024

ராம்நாடு: தண்ணீரில் மிதந்த ஆண் சடலம்

image

திருவாடானை ஓரியூர் சாலையில் டாஸ்மாக்
உள்ளது. இதன் எதிரே உள்ள அத்தாணி வயல் கண்மாயில் இன்று அதிகாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று தண்ணீரில் மிதந்துள்ளது. இது குறித்து திருவாடானை கிராம நிர்வாக அலுவலர் நாகேந்திரன் அளித்த புகாரின்பேரில் திருவாடானை போலீசார் சடலத்தை மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு
பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தினர்.

News May 14, 2024

சிறப்பு அலங்காரத்தில் திருச்செந்திலாண்டவர்

image

மண்டபம் மைக்குண்டு திருச்செந்திலாண்டவர் கோயில் 2ஆம் ஆண்டு வைகாசி விசாகத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இதையடுத்து நேற்று மாலை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த திருச்செந்திலாண்டவரை கிராம மக்கள் தரிசனம் செய்தனர். இங்கு மே 22இல் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ள விசாகத் திருவிழாவில் பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலம் வந்து நேர்த்திக் கடன் செலுத்த உள்ளனர்.

News May 13, 2024

ராமநாதபுரம் மழைப்பொழிவு விவரம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (மே.12) மழைப்பொழிவு பதிவான விவரத்தை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மண்டபம் 7 செ.மீட்டரும், தங்கச்சிமடம் பகுதியில் 3செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. சமீபமாக கோடையில் தமிழகத்தில் ஆங்காங்கு மழைபெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 13, 2024

ராமேஸ்வரத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

image

ராமேஸ்வரம் துணை மின் நிலையம் ராமநாதசுவாமி கோயில் மின் பாதையில் நாளை வேலை நடைபெற உள்ளது. இதனால் காட்டு பிள்ளையார் கோவில் தெரு, தீட்சிதர் கொல்லை, பெரியார், சிவகாமி நகர், சல்லிமலை, லட்சுமண தீர்த்தம், சீதா தீர்த்தம், ராமர் தீர்த்தம், முருங்கை வாடி, தம்பியான் கொல்லை, வெண்மணி நகர், போஸ்ட் ஆபிஸ் லைன், பணிமனை
பகுதிகளில் மே 14 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!