Ramanathapuram

News May 4, 2024

கடையடைப்பு போராட்டம் வாபஸ்

image

தங்கச்சிமடம் ஊர் நல கமிட்டி ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. ஊராட்சி தலைவர் குயின்மேரி முன்னிலை வகித்தார். ராமேஸ்வரம் உதவி மின்பொறியாளர் தலைமை வகித்தார். வர்த்தகர் சங்கம், பொதுமக்கள் அறிவித்த மே 7 கடையடைப்பு போராட்டத்தை 1 மாதம் தள்ளி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.
வர்த்தகர் சங்க நிர்வாகிகள் நிஜாமுதீன், வல்லப கணேசன், மைதீன், ஊர் நல கமிட்டி ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி பங்கேற்றனர்.

News May 4, 2024

பரமக்குடியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

image

பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பின்புறம் அமைந்துள்ள வைகை ஆற்றின் சர்விஸ் சாலையோரம் இன்று காலை அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக பரமக்குடி நகர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 4, 2024

ராமநாதபுரம் வில்லூண்டி தீர்த்தம் சிறப்பு!

image

ராமேஸ்வரத்தில் உள்ள வில்லூண்டி தீர்த்தம் அழகிய கண்வரும் கடற்கரையாகும். ராமேஸ்வரத்தில் உள்ள 64 தீர்த்தங்களில் இதுவும் ஒன்று. இந்த கடல் மிகவும் அழகிய அமைதியான கடலாக தோற்றமளிக்கும். மேலும், கடலுக்கு அருகில் ஒரு தூய நீர் கிணறும் உள்ளது. இது ராமாயணப் புராணக் கதையுன் கூறப்படுகிறது. ராமேஸ்வரத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் இந்த தீர்த்தம் அமைந்துள்ளது.

News May 4, 2024

ராமநாதபுரத்தில் ரெட் அலர்ட்

image

அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலை ஏற்படவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுர மாவட்டத்தில் கடல் அலைகள் 1.5 மீட்டர் உயரத்திற்கு எழும் என்பதால் மக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News May 4, 2024

ராம்நாட்டில் மனைவி கொலை: கணவன் தற்கொலை!

image

ராமநாதபுரம் தாயுமானசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் கொத்தனார் பன்னீர்செல்வம் (41). இவரது மனைவி சரண்யா (38). கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் பன்னீர்செல்வம் இன்று காலை தனது மனைவி சரண்யாவை கொலை செய்துவிட்டு கத்தியால் தனக்குத்தானே குத்தி தற்கொலை செய்துகொண்டார். கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 4, 2024

செங்காளியம்மன் அலங்காரத்தில் பிடாரியம்மன் காட்சி

image

‌திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சிநேகவல்லி அம்மன் கோவிலின் உப கோவிலான ஸ்ரீ அறம்வளர்த்த பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 5ஆம் திருநாளையொட்டி பிடாரி அம்மன் செங்காளி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை முத்துக்குமார் பட்டர் செய்திருந்தார்.

News May 3, 2024

ராமநாதபுரம்: மனைவி கண் முன் கணவர் மீது தாக்கு

image

தாமரைக்குளம் அருகே வலங்காபுரியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது மனைவியுடன் அங்குள்ள கடற்கரை பகுதியில் நடந்து சென்றார். அங்கு அங்கு உள்ளாடை மட்டும் அணிந்துகொண்டு பெருங்குளத்தைச் சேர்ந்த கேதீஸ்வரன் நடந்துவந்தார். இதனால், மணிகண்டன் மனைவி முகம் சுழித்தார். இதனை கண்டித்த மணிகண்டனை, கேதீஸ்வரன் (24) மரக்கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின்படி உச்சிப்புளி போலீசார் விசாரிக்கின்றனர்.

News May 3, 2024

ஸ்டிக்கர் அகற்றாத வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி

image

தமிழகம் முழுவதும் டூவீலர் மற்றும் கார்களில் ஸ்டிக்கர்கள் ஒட்ட தமிழக அரசு தடைவிதித்துள்ளது. நேற்றுமுதல் இது நடைமுறைக்கு வந்த நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தனியார் டூவீலர் மற்றும் கார்களில் ஒட்டிய ஸ்டிக்கர்களை இன்றைக்குள் அகற்றிட வேண்டும் என்றும், அகற்றாத வாகனங்களின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி சந்தீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News May 3, 2024

ராம்நாடு: பள்ளி ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா

image

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 30 ஆண்டுகள் தாவரவியல் முதுகலை பட்டதாரி ஆசிரியராக நாசர் என்பவர் பணிபுரிந்தார். வருகிற 31ஆம் தேதி இவரது பணி நாள் முடிவுறுகிறது. இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த தாவரவியல் ஆசிரியர்கள் பாராட்டு விழா நடத்தினார்கள். இதில் துறை சார்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

News May 2, 2024

ராம்நாடு அருகே விபத்து: இருவர் பலி

image

சாயல்குடி அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் மறக்குளம்
சதீஷ்குமார் (33), சின்ன உடப்பங்குளம்
பழனிமுருகன் (28) ஆகியோர் டூவிலரில் இன்று மாலை
பரளச்சி சென்றனர். அப்போது சாயல்குடி சென்ற டிப்பர் லாரி, டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் டூவீலரில் வந்த இருவரும் இறந்தனர். இருவரின் உடல் கமுதி அரசு மருத்துவமனை அனுப்பப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!