India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே.16) நண்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது.
கமுதி துணைமின் நிலையத்திற்குட்பட்ட பார்த்திபனூர், அபிராமம், முதுகுளத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் மின் பராமரிப்பு நடைபெறவுள்ளதால் இன்று (மே 16) மின்தடை ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வானிலை திடீர் மாற்றம் காரணமாக மின் தடை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கமுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவுக்கு உட்பட்ட கீழமுடிமன்னார்கோட்டை பகுதியில் அரசு நலத்திட்டம் சார்பில் பல்வேறு வளர்ச்சி பணிக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனை அடுத்து இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அவர்கள் கீழமுடிமன்னார்கோட்டை பகுதிக்கு சென்று வளர்ச்சி பணிகளை குறித்து ஆய்வு செய்து கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் தரத்தையும் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (மே.16) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (மே.14) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தங்கச்சிமடம் பகுஹ்டியில் 5செ.மீட்டரும், முதுகுளத்தூர், தொண்டி ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும், ஆர்.எஸ். மங்கலம், கடலாடி ஆகிய பகுதிகளில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவெற்றியூர் அருகே உள்ள யேலூர் கிராமத்தை சேர்ந்த ராசு என்பவரது மகன் ரமேஷ் (43). இவர் நேற்று பண்ணைவயல் அத்தானி கண்மாய் எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு குடிபோதையில் கண்மாயில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி பலியானார். இவரது மனைவி பரிமளா (33) கொடுத்த புகாரில் திருவாடானை போலீசார் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி பொதுத்தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில்
பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த இயந்திரங்கள் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கலெக்டர் விஷ்ணு சந்திரன், எஸ்பி சந்தீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
தொண்டி அருகே வெள்ளாளகோட்டை இயேசுபுரத்தில் புனித வனத்து சின்னப்பர் ஆலய திருவிழா கொடியேற்றம் நேற்று (மே 14) நடைபெற்றது. இதனையொட்டி புதிய கொடிமரம் அர்ச்சித்தல், கொடி மந்திரித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொண்டி பங்குத்தந்தை வியாகுல அமிர்தராஜ் புனிதரின் திருவுருவம் பொறித்த கொடியை ஏற்றிவைத்து திருவிழா திருப்பலியை நிறைவேற்றினார். பின்னர் மறையுறை நிகழ்த்தப்பட்டது. இதில் ஏராளமான இறை மக்கள் கலந்துகொண்டனர்.
ஏப்.19ல் நடந்த ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி ஜூன் 4ல் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (14.5.2024) மாலை ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர், அரசு முதன்மைச் செயலர் சத்ய பிரதா ஷாஹு தலைமை வகித்து பணிகளை ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளி பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பில் 100 % தேர்ச்சி பெற்ற நிலையில் இன்று காலை வெளியான பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்விலும் 100% தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளது. மேலும் கணினி அறிவியல் பாடத்தில் 7 பேர், வேதியியல் பாடத்தில் 2 பேர், பொருளியல் பாடத்தில் ஒருவர் என சதமடித்து சாதனை புரிந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.