Ramanathapuram

News May 7, 2024

பிரபல நடிகர் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்

image

தேவிபட்டினம் முனியசாமி என்பவரிடம் அவரின் தொழிலை மேம்படுத்த ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆவண செலவாக ரூ.14 லட்சம் வாங்கினார். கடன் வாங்கி தராமல் தான் வாங்கிய பணத்திற்காக போலி செக் கொடுத்து ஏமாற்றியதாக ராமநாதபுரம் கோர்ட்டிற்கு முனியசாமி வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணை இன்று நீதித்துறை நடுவர் கோர்ட்டில் வந்தது. இதற்காக பவர்ஸ்டார் கோர்ட்டில் நேரில் ஆஜரானார்.

News May 7, 2024

சந்தனக்கூடு திருவிழா மே 9ல் ஆரம்பம்

image

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் உலக பிரசித்தி பெற்ற மஹான் குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் அடக்கமாகி உள்ளார். இந்த தர்ஹாவில் வருடந்தோறும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு என்னும் திருவிழா பெரும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த வருடத்தின் 850ம் ஆண்டின் சந்தனக்கூடு எனும் விழா மே 9இல் தொடங்குகிறது.

News May 6, 2024

மதிப்பெண் குறைவு – மாணவி தற்கொலை

image

ராமநாதபுரம் அருகே உள்ள வைரவன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால் என்பவரின் மகள் கிஷோர்னி செளம்யா (16). பிளஸ்-2 பொதுத்தேர்வில் 250 மதிப்பெண்கள் பெற்றார். மதிப்பெண் குறைந்ததால் மனமுடைந்த மாணவி கிஷோர்னி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கேணிக்கரை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

News May 6, 2024

கீழக்கரையில் முதலிடம் பிடித்த மாணவர்கள்

image

கீழக்கரையில் இன்று +2 மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மஹ்தூமியா மேல் நிலைப்பள்ளி மாணவர் கெளதம் 600க்கு 511 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதலிடமும் ஜன்னத்துல் முஸ்பிரா 509 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும் அபிநயா 498 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பெற்றார். அவர்களை பள்ளி தாளாளர் இப்திகார் ஹசன் மற்றும் தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

News May 6, 2024

ராமநாதபுரத்தில் 94.89% பேர் தேர்ச்சி

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் +2 அரசு பொதுத்தேர்வில் மொத்தம் 72 பள்ளிகளில் 6302 மாணவர்கள், 7247 மாணவியர் என மொத்தம் 13549 பேர் தேர்வு எழுதினர். இதில் 5850 மாணவர்கள், 7007 மாணவியர் உள்பட மொத்தம் 12857 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 92.83 சதவீதம், மாணவியர் 96.69 சதவீதம்‌ என 94.89 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

News May 6, 2024

கடல் அலை சீற்றம் நீடிக்கும்

image

தென்னிந்திய கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றத்துடன் காணப்படுகிறது. இதற்கு “கள்ளக்கடல்”என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன்படி இன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு வரை நீடிக்கும் எனவும், 5 அடி முதல் 7 அடிவரை கடல் அலை சீற்றத்துடன் காணப்படும் என இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் தெரிவித்துள்ளது.

News May 5, 2024

இலவச கலை பயிற்சி முகாம் துவக்கம்

image

ராமநாதபுரத்தில் கலை பண்பாட்டுத் துறை, சவகர் சிறுவர் மன்றம் சார்பில் கோடை கால இலவச கலைப்பயிற்சி முகாம் துவக்க விழா இன்று நடந்தது. கவுன்சிலர் ஜெயராமன் தலைமை வகித்தார். மே 14 வரை மாலை 4 – 6 மணி வரை நடைபெற உள்ள இம்முகாமில் 6 முதல் 16 வயது மாணாக்கருக்கு பரதம், ஓவியம், குரலிசை, சிலம்பம்
கற்றுத்தரப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்ட ஜவஹர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் லோகசுப்ரமணியன் ஏற்பாடு செய்தார்.

News May 5, 2024

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், இன்று மாலை 6.30 மணி வரை திருப்பூர், சிவகங்கை, மதுரை மற்றும் திண்டுக்கலில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. அதே போல், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, கோவை, சேலம் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டத்திலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 5, 2024

அரசு விளையாட்டு விடுதிக்கு மாணாக்கர் தேர்வு

image

வரும் 2024- 2025 கல்வி ஆண்டில் 7, 8, 9, +1 மாணாக்கர் அரசு விளையாட்டு விடுதியில் சேருவதற்கான தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, கபடி, கையுந்து பந்து, ஆடவர் கிரிக்கெட், நீச்சல் போட்டிகள் ராமநாதபுரம் சீதக்காதி – சேதுபதி விளையாட்டரங்கில் ஆடவருக்கு மே.10 காலை 7 மணியளவிலும் , மகளிருக்கு மே.11 காலை 7 மணியளவிலும் தேர்வு நடைபெறவுள்ளது என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

News May 5, 2024

மீனவர்களுக்கு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு

image

மண்டபம் மீனவர் நலத்துறை நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கடலில் 45 – 65 கிமீ வேகத்துடன் காற்று வீசும். கடல் கொந்தளிப்பால் 1.5., உயரத்துக்கு அலை எழக்கூடும். இதனால்
மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம். மேலும், கடலில் யாரும் குளிக்க செல்ல வேண்டாம். காற்று வேகத்தால் படகுகள் சேதமடையக்கூடும் என்பதால் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!