India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் அதவாது 10 மணி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், இந்தமழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவாவில் தேசிய அளவிலான டென்னிஸ் பால் மகளிர் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் 7 அணிகள் பங்கேற்றன. ராமநாதபுரம் அருகே வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியர் 8 பேர் இடம் பிடித்த தமிழக அணி 3 ஆம் இடம் பிடித்தது. மூன்றாம் இடம் பிடித்து தமிழகத்திற்கும், ராமநாதபுரம் மாவட்டம், வண்ணாங்குண்டு அரசு பள்ளிக்கும், பெருமை மாணவியரை விளையாட்டு ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வேந்தோணி, அரியனேந்தல், சத்திரக்குடி, மஞ்சுர் போன்ற பகுதிகளில் அரை மணி நேரத்துக்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
கோவாவில் தேசிய அளவிலான டென்னிஸ் பால் மகளிர் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் 7 அணிகள் பங்கேற்றன. ராமநாதபுரம் அருகே வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியர் 8 பேர் இடம் பிடித்த தமிழக அணி 3 ஆம் இடம் பிடித்தது. மூன்றாம் இடம் பிடித்து தமிழகத்திற்கும்,
ராமநாதபுரம் மாவட்டம், வண்ணாங்குண்டு அரசு
பள்ளிக்கும், பெருமை மாணவியரை விளையாட்டு ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சிக்குட்பட்டது புடனவயல் கிராமம். இந்த கிராமத்தில் செயல்படுத்தப்படும் சமூக புறக்கணிப்பை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராமநாதபுரம் மாவட்ட தியாகி இமானுவேல் பேரவை சார்பில் திருவாடானை, தொண்டி பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே.18) மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் நிறுவப்பட்டுள்ள ஸ்நேகா அறக்கட்டளை சார்பில் ராமநாதபுரத்தில் இயங்கும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய பயிற்சியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 31.05.24 ஆகும். மேலும் விவரங்களுக்கு https://www.iob.in/careers என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் ராமநாதபுரத்தில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு (மே.17- 20) பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (மே.16) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பாம்பன் பகுதியில் 3 செ.மீட்டரும், தங்கச்சிமடத்தில் 2 செ.மீட்டரும், மண்டபம் பகுதியில் 1 செ.மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கு மழைப் பொழிவுஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.