India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடந்துமுடிந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 156 பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் 8051 பேர், மாணவர்கள் 7986 பேர் என 16038 பேர் தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்நிலையில் கமுதி ரஹ்மானியா மெட்ரிக் பள்ளி மாணவி காவியா ஜனனி தமிழ் 99, மற்றவைகளில் 100 என மொத்தம் 499 மார்க் எடுத்து மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 94.71% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 92.59 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 96.57 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் 4 ஆம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வைகை அணையில் இருந்து இன்று பாசனத்திற்காக விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு 915 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படவுள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ அல்லது ஆற்றை கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 96.36% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 94.99% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 97.71% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
ராமநாதபுரம் அருகே உள்ள அச்சுந்தன் வயல் பகுதியைச் சேர்ந்தவர் செந்தூர்பாண்டி (55). இவர் நேற்று மாலை கூரியூர் ரயில்வே கேட் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது தண்டவாள பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை விரட்ட முயன்றார். அப்போது மதுரையிலிருந்து மண்டபம் நோக்கி சென்ற திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி செந்தூர்பாண்டி உடல் துண்டாகி பலியானார். ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் போட்டித் தேர்விற்கு, விண்ணப்பித்துள்ளவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கட்டணமின்றி பயிற்சி வழங்கப்படுகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு பெற்ற அலுவலர்கள் பங்கேற்று பயிற்சி வழங்கி வருகிறார்கள். இன்று குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்பினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே.09) 4 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காந்திநகர் பகுதியில் வசிப்பவர் கார்த்திகைராஜா, இவரது மனைவி சிந்துபிரியா (36). இவர் உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவ்வப்போது சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயர் ரத்த அழுத்தம் அதிகமாகி மயங்கி விழுந்ததில் உயிரிழந்தார். இது குறித்து அவரது தாயார் கஸ்தூரி (62) பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே.09) நண்பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும். கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.