Ramanathapuram

News May 21, 2024

ராமநாதபுரத்தில் 10 செ.மீ மழைப்பதிவு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (மே.20) மழைப்பொழிவான அளவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தொண்டியில் 10 செ.மீட்டரும், தீர்த்தாண்டதானம் பகுதியில் 8 செ.மீட்டரும், வட்டானம் பகுதியில் 7 செ.மீட்டரும், திருவாடானை பகுதியில் 4 செ.மீட்டரும், மண்டபம், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

News May 21, 2024

ராம்நாடு: லாரியின் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி

image

முதுகுளத்தூர் அருகே வடக்கூரைச் சேர்ந்தவர் முருகன் (55), தச்சுத் தொழிலாளி. இவர் நேற்று (மே 20) மதியம் தன்னுடன் வேலை செய்வோருக்கு உணவு வாங்கிக் கொடுத்துவிட்டு, முதுகுளத்தூர் – தேரிருவேலி சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி, இரு சக்கர வாகனத்தை முந்த முயன்றபோது லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

News May 21, 2024

ராம்நாடு அருகே இன்று தேரோட்டம்

image

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் வைகாசி விசாக திருவிழா 9ஆம் திருநாளையொட்டி இன்று (மே 21) மாலை 3 மணியளவில் தேரோட்டம் நடைபெறுகிறது. பெரிய தேரில் சுவாமியின் பிரியாவிடை உடனும் சின்ன தேரில் சினேக வல்லி அம்மனும் சப்பரங்களில் விநாயகர் பால சுப்பிரமணியரும் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்காக தேர் புதுப்பொலிவுடன் தயார் நிலையில் உள்ளது.

News May 20, 2024

ராமநாதபுரம் 12 செ.மீ மழைப்பதிவு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (மே.19) மழைப்பொழிவான அளவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கமுதி பகுதியில் 12 செ.மீட்டரும், பாம்பன், மண்டபம், கடலாடி, ராமேஸ்வரம், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது. ராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 20, 2024

ராம்நாடு: மாம்பழம் கூவிக் கூவி விற்பனை

image

தொண்டி திருவாடானை பகுதியில் உள்ள கிராமங்களில் நான்கு சக்கர வாகனங்களில் பாலாமணி, செந்தூரம் வகை மாம்பழங்கள் ஒலிபெருக்கி மூலம் கூவிக் கூவி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நத்தம், மதுரை பகுதியிலிருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ள மாம்பழம் ஒன்றரை கிலோ 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

News May 20, 2024

ராமநாதபுரம் பாம்பன் பாலம் சிறப்பு!

image

இந்தியாவில் கடலின் குறுக்கே கட்டப்பட்ட முதல் பாலமாகவும், நாட்டின் பொறியியலின் ஒரு அதிசயமாகவும் விளங்குகிறது பாம்பன் பாலம். பாம்பன் ரயில் பாலம் கட்டுவதற்கான முயற்சிகள் 1870களில் பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கைக்கு வர்த்தக இணைப்பை விரிவுபடுத்த முடிவு செய்தபோது தொடங்கியது. இது அதிகாரப்பூர்வமாக 1914 இல் தொடங்கப்பட்டது. சுமார் 2.2 கிமீ வரை நீண்டு, 143 தூண்களுடன் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் இதுவாகும்.

News May 20, 2024

ராமநாதபுரம்: ஒரே நாளில் இங்கு இவ்வளவு மழையா?

image

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மே 14 முதல் கோடை மழை விட்டுவிட்டு பெய்துவருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ச்சியாகி உள்ளது. இந்நிலையில், இன்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் கமுதி 124.40 மிமீ, முதுகுளத்தூர் 48 மிமீ, மண்டபம் 14, பாம்பன் 13.90, கடலாடி 13, ராமேஸ்வரம் 9, தங்கச்சிமடம் 8.60, பரமக்குடி 5.90, வாலிநோக்கம் 2.60,
ராமநாதபுரம் 2 மிமீ மழை பெய்துள்ளது.

News May 20, 2024

ராமநாதபுரம்: சவேரியார் ஆலய திருவிழா

image

தொண்டி அருகே செங்காளன் வயல் சவேரியார் பட்டினம் கிராமத்தில் தூய பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் தொண்டி பங்குத்தந்தை வியாகுல அமிர்தராஜ் தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி மறையுறை நிகழ்த்தப்பட்டது. ஆந்திர மாநில ஏசு சபை அருட்தந்தை அருள் ஜோ, ஏராளமான இறை மக்கள் கலந்துகொண்டு ஜெபம் செய்து வழிபட்டனர். அதனைதொடர்ந்து தூய பிரான்சிஸ் சவேரியாரின் தேர்ப்பவனி நடைபெற்றது.

News May 19, 2024

வாலிபரை வெட்டிய அண்ணன் – தம்பி கைது

image

விருதுநகர், இலுப்பைக்குளத்தை சேர்ந்தவர் பெரியசாமி (26). ராமநாதபுரத்தில் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் உடன் வேலை பார்த்த மானாமதுரை லட்சுமி (50)க்கும் தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த லட்சுமியின் மகன்கள் வல்லரசு, ராஜபாண்டி  ஆகியோர் நேற்று முன்தினம் பெரியசாமியை ராமநாதபுரத்தில் அரிவாளால் வெட்டினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் புகாரின்படி போலீசார் 2 பேரை கைது செய்தனர். 

News May 19, 2024

பரமக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசல்

image

ராமநாதபுரம், பரமக்குடியில் இன்று காலை முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்றைய தினம் வைகாசி அட்சய முகூர்த்தம் என்பதால் பல்வேறு இடங்களில் திருமணங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்காக பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். இதனால் பேருந்து நிலையம், சந்தை கடை, ஆர்ச் போன்ற பகுதிகளில் நெரிசல் ஏற்பட்டது.

error: Content is protected !!